Saturday, March 04, 2006

புயல் கரையைக் கடந்தது

இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் வைகோ சந்திக்கிறார். மாலை 3.00 மணிக்கு ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகி அ.இ.அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இணைந்து மதிமுக தமிழக சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்திக்கும் என்ற அறிவிப்பு இன்று வெளியிடப்படும்.

தாயகத்தில் இருந்து அதிகாரபூர்வமாக இந்தச் செய்தியை இன்று காலை முதல் சொல்லி வருகிறார்கள்.