Monday, December 19, 2005

இடைவெளிக்கு என்ன காரணம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வலை பதிக்கிறேன்.

மழை, மின்தடை, இணைய இணைப்பு அடிக்கடி கிடைக்காமல் இருத்தல், வேறு விதமான பணிகள் என்று இந்த இடைவெளிக்கு என்னென்னவோ காரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் அவை மட்டும் தான் காரணமா என்ற கேள்வி என்னுள் எழுகிறது.

ஏனோ இடைவெளி விழுந்து விட்டது. நேர நிர்வாகத்தில் எனது திறமைக் குறைவு கூட காரணமாக இருந்திருக்கலாம்.

என்னையும் அறியாமல் வேறு ஏதேனும் காரணம் என் நினைவிலி மனதில் இருக்கக் கூடாது.

ஆம். இருக்கவே கூடாது.