Monday, August 15, 2005

சுதந்திர தினம்

இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன்சிங் கொடியேற்ற இந்தியாவின் 58 ஆவது சுதந்திர தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.(தமிழகத்தில் இன்று 59 வது சுதந்திர தின விழா!) இந்தியா இப்போது செல்லும் ஏழு சதவீத பொருளாதார வளர்ச்சியில் இன்னும் சில ஆண்டுகள் சென்றால் இந்தியாவில் வறுமை ஒழிந்துவிடும் என்று பிரதமர் கூறினார். யாரோ இந்திரா காந்திக்கு 71 தேர்தலுக்கு முன்னர் எழுதிக் கொடுத்த வாசகங்களை இப்போது சேர்த்துவிட்டர்களோ என்று நாட்டு மக்கள் சந்தேகப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

அல்லது விவேக் நடித்த ஒரு நகைச்சுவைக் காட்சி போல் டீக்கடை வாசலில் இந்திரா பிரதமராக இருந்த போதுள்ள ஒரு நாளிதழை டீ குடிக்க வந்தவர்கள் படித்துக் கொண்டிருப்பதுபோல் பழக்க தோஷத்தில்..............?

வறுமை ஒழிய வேண்டியதுதானே? முதல் கட்டமாக ஐ.எம்.எப்., உலக வங்கி தொடர்பானவர்களது வறுமை ஒழியட்டும்..பிறகு பார்க்கலாம் மற்றவர்களை..

சுதந்திரதினத்தில் பிரதமர் உரை குறித்து பாஜக கருத்து தெரிவித்துள்ளது. பயங்கரவாதம் குறித்து பாகிஸ்தானை இன்னும் உறுதியாக எச்சரிக்க வேண்டுமாம்.. (பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்களைப் பறிக்காவிடில் அணு ஆயுதங்களைப் பிரயோகிப்போம் என்று டேய் வந்து பாருடா ஸ்டைலில் பேச வேண்டும் போலிருக்கிறது!)
காஷ்மீரில் முதல்வர் முப்தி முகமது செய்யது பேசிய கூட்டத்தில் குண்டு வெடிப்பு, ஆந்திராவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஒன்பது பேர் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் பலி, இரண்டு சம்பவங்கள் தவிர சுதந்திரதினக் கொண்டாட்டம் இனிதே நிறைவடைந்தது.

0 Comments:

Post a Comment

<< Home