Thursday, July 14, 2005

எல்லோரும் நல்லவரே

அரசியல் போரடிக்கிறது..பிரச்னை பேசினால் விவகாரமான பின்னூட்டம் வருகிறது..
சில காலமாக தமிழ்மணம் டல்லடிக்கிறது..(அப்படியானால் விவகாரமான பின்னூட்ட காலம் தான் பரபரப்பான காலமா என்ற கேள்வி எழுகிறது). இப்படியெல்லாம் சில பதிவுகளிலும் சில பின்னூட்டங்களிலும் கருத்துக்கள் தெறிப்பதைப் பார்த்து நானும் என் பங்குக்கு சினிமாவில் குதிக்கிறேன்.

தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் பிரிக்க முடியாத இரு கூறுகள்.. அறம், பொருள், இன்பம்.. நம் வாழ்வில் பிரிக்க முடியாதது..

அறம் காக்க நாம் மடங்களையும் சாமியார்களையும் பின்பற்றி ஓடுவோம் ..மதச் சண்டைகள் போடுவோம்..
பொருள் சேர்க்க அரசியலை வளர்ப்போம்.. லஞ்சம்,ஊழல்,குடும்ப அரசியலைப் போற்றுவோம்..
இன்பம் துய்க்க சினிமாவை ஆதரிப்போம்..

(சினிமா பாட்டுப் பதிவு போடறதுக்கு எதுக்கு இவ்வளவு லெக்சர்! தள்ளிப் போ, நாங்க பாட்டைப் பார்க்கட்டும்..கேட்கிறது..)

நினைவில் இருந்து பதிவு செய்கிறேன். பிழை(கள்) இருக்கலாம்..திருத்தும் உள்ளங்களுக்கு எனது நன்றிகள்!


எல்லோரும் நல்லவரே
படைத்தானே பிரம்ம தேவன்
பதினாறு வயதுக் கோலம்
இது யார் மீது பழி வாங்கும் சோதனை
உனைக் காண்போர்க்கு சுகமான வேதனை (படைத்தானே)

இந்தக் கண்ணாடி நீ பார்க்கும் கண்ணாடியா
இல்லை உன் மேனி அது பார்க்கும் கண்ணாடியா
நீ இல்லாத வானத்தில் நிலவேதடி
உன் தாலாட்டில் விளைந்தது நீலாம்பரி
ஒரு வரம் வேண்டி நான் கேட்பேன் தேவனை
இனி தினந்தோறும் வரவேண்டும் சுக வேதனை (படைத்தானே)

உனை ரவிவர்மன் காணாமல் போனானடி
அந்த ரதிமாறன் கண்டாலும் தொலந்தானடி
இது கோடியில் ஒருத்தர்க்கு வாய்க்கின்றது
அது கோடானுகோடியை ஏய்க்கின்றது
ஒரு வரம் வேண்டி நான் கேட்பேன் தேவனை
இனி தினந்தோறும் வரவேண்டும் சுக வேதனை (படைத்தானே)

0 Comments:

Post a Comment

<< Home