<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-12453184</id><updated>2011-12-15T08:02:57.496+05:30</updated><category term='வரி'/><category term='இந்தியா'/><category term='கருணாநிதி'/><category term='மன்மோகன்சிங்'/><category term='அமெரிக்கா'/><category term='திஹார்'/><category term='பெட்ரோல்'/><category term='விலை'/><category term='பா.ஜ.க'/><category term='2ஜி அலைவரிசை'/><category term='தலித்'/><category term='தூக்குதண்டனை'/><category term='இராக்'/><category term='சதாம் உசேன்'/><category term='அரசியல்'/><category term='முதன்மை நீதிபதி'/><category term='கனிமொழி'/><title type='text'>ஸ்டேஷன் பெஞ்ச்</title><subtitle type='html'>அரசியல்,பொருளாதாரம்,கலாச்சாரம் குறித்து விவாதங்கள் நடந்த இடம் இந்த ஸ்டேஷன் பெஞ்ச்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://stationbench.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://stationbench.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>ஜென்ராம்</name><uri>http://www.blogger.com/profile/01132053348035137568</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>168</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-12453184.post-706430519018970683</id><published>2011-07-05T17:15:00.001+05:30</published><updated>2011-07-05T17:17:30.362+05:30</updated><title type='text'>அன்னையின் நிழலில்….</title><content type='html'>“நீங்க இப்படி எல்லாம் சொன்னீங்கன்னா, நான் அழுதுடுவேன்,” என்று குழந்தைகள் சொல்வதை நான் பார்த்திருக்கிறேன். நீங்களும் அந்த மாதிரிப் பேசும் குழந்தைகளையோ வளர்ந்த மனிதர்களையோ  பார்த்திருக்கக் கூடும். அவர்களை அவர்கள் விருப்பப்படி விட்டுவிட வேண்டும். மாறாக அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாக யாராவது அவர்களிடம் ஏதாவது பேசினால் போதும். கண்களில் கண்ணீர் உடனடியாக எட்டிப் பார்க்கும். அதைப் போன்ற ஒரு காட்சியே, அந்த செய்தியைப் பார்த்ததும் என்னுடைய நினைவுக்கு வந்தது.  அது என்ன செய்தி? &lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து அச்சு ஊடகங்களின் ஆசிரியர்களைக் கூப்பிட்டு அவர்களுடன் ஒன்றரை மணி நேரம் நம்முடைய பிரதமர் மன்மோகன்சிங் பேசி இருக்கிறார். பல விஷயங்களைப் பற்றி அவர்களிடம் அவர் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்போது அவர் சொன்ன ஒரு கருத்தே முதலில் சொன்ன காட்சியை நினைவுபடுத்தியது. “இந்த மாதிரி அரசாங்கத்தை செயல்பட விடாமல் முற்றுகையிட்டால், விரக்தி அதிகமாகும்; வளர்ச்சிக்காக பாடுபடும் எண்ணம் குறைந்துவிடும்” என்பது அவர் சொன்ன செய்தி. அவருடைய அரசாங்கத்தை யார் செயல்படவிடாமல் ‘கெரோ’ செய்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு உடனடியாக உங்களிடம் பதில் இருக்கும். ஆனால் அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்று பாருங்கள்.&lt;br /&gt;   &lt;br /&gt;“ஒரே நேரத்தில் குற்றம் சாட்டுபவர்களாகவும் விசாரணையில் வழக்காடுபவர்களாகவும் நீதிபதிகளாகவும் ஊடகங்கள் செயல்படுகின்றன,” என்று மன்மோகன்சிங் மனம் பொருமி இருக்கிறார். அதாவது ஊடகங்கள் அரசு மீது குற்றம் சாட்டுகின்றன; விசாரணை நடத்துகின்றன; தீர்ப்பும் வழங்கி விடுகின்றன என்று ஊடகங்களைக் குறை சொல்கிறார். “காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையில் விரிசலை உருவாக்குவதற்கு ஊடகங்கள் முயல்கின்றன என்று திமுக தலைவர் கருணாநிதி சில வாரங்களுக்கு முன்னால் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கக் கூடும். அதைப் போலவே மத்திய அரசாங்கத்தில் எதுவுமே நடக்காததைப் போலவும் ஊடகங்களே குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்து ‘விசாரணை’ நடத்தி தீர்ப்பு வழங்கிவிடுவதைப் போலவும் அவர் சொல்லி இருக்கிறார்! &lt;br /&gt;&lt;br /&gt;ஊடகங்கள் என்ன செய்கின்றன? சில பிரச்னைகளை எழுப்புகின்றன. அவற்றின் மீது விவாதங்களை நடத்துகின்றன. இதன் காரணமாக மக்கள் மத்தியில் அந்த சிக்கல்கள் குறித்த உரையாடல்கள் நிகழ்கின்றன. எதிர்க்கட்சிகள் அவை குறித்து அறிக்கை விடுகின்றன; ஓரிரு கட்சிகள் மட்டுமே போராட்டங்களை நடத்துகின்றன. ஜனநாயக அமைப்பில், இதுபோன்ற எந்த நடவடிக்கையும் அரசாங்கத்தை முற்றுகையிடும் நடவடிக்கை அல்ல; நிர்வாகத்தை முடக்கிப் போடும் செயல்பாடும் அல்ல; ஆனால், பிரதமர் மன்மோகன்சிங் இதற்காக வேதனைப்படுகிறார்; ஊடகங்களைக் குற்றம் சாட்டுகிறார். அப்படி என்றால் அவர் வேண்டுவது என்ன? முழு அளவிலான சர்வாதிகாரமா? &lt;br /&gt;&lt;br /&gt;“எல்லா உண்மைகளும் தெரியாத நிலையில் முடிவுகளை அரசாங்கம் எடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அதிகமாக உண்மை தெரிந்த நிலையில், தணிக்கை அதிகாரி, நாடாளுமன்றம், ஊடகங்கள் ஆகியவை அரசாங்கத்தின் முடிவுகளை ஆய்வு செய்கின்றன. இந்தச் சூழ்நிலையில் செயல்படுவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது,” என்றும் அவர் பேசி இருக்கிறார். இதற்கு என்ன பொருள்? நிர்வாகத்தில் முடிவெடுக்கும்போது முடிவெடுக்கும் இடத்தில் இருப்பவர்களுக்கு எல்லா உண்மைகளும் தெரிவதில்லை என்றால் என்ன அர்த்தம்? ஒவ்வொரு முறையும் ஊழல் புகார் வரும்போது, ‘என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது’ என்று மன்மோகன்சிங் சொன்னதற்கு இதுதான் காரணம் போலிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;“தொலைத் தொடர்புத் துறையில் என்ன நடந்தது என்பது எனக்கு முழுமையாகத் தெரியாது. தலைமைக் கண்காணிப்பு ஆணையரிடம் யாரோ ஊழல் புகார் கொடுத்தார்கள்; சிபிஐ விசாரித்தது; அதன் பிறகும் கூட அந்த முறைகேட்டில் அமைச்சருக்கு எதிரான ஆதாரம் எதுவும் இருப்பதாக சிபிஐ என்னிடம் தெரிவிக்கவில்லை” என்று அந்த ஐந்து ஆசிரியர்களிடம் பேசும்போது மன்மோகன்சிங் சொல்லி இருக்கிறார். அதே சமயத்தில் வேறொரு தகவலையும் அவர் சொல்கிறார். அவரை செயல்படாத பிரதமர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதில் எந்தவித உண்மையும் இல்லை என்கிறார். அவருடைய தலைமையில் இயங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் முழுக்க முழுக்க அவருடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்றும் அவர் உறுதிப்படுத்துகிறார். அவருடைய இரண்டு கூற்றுக்களுக்கும் இடையில் முரண்பாடு இருக்கிறது என்பது அவருக்குத் தெரியாதா என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;இருந்தும் அவர் பேசியாக வேண்டியிருக்கிறது; ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் மத்திய அமைச்சரவை சகாக்களால் அரசாங்கத்தின் நற்பெயர் கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது; ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் இரண்டாவது முறை 2009-ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அடுத்தடுத்து பல்வேறு புகார்கள் எழுந்தன; இப்போது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகமும் அரசாங்கத்திடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருக்கின்றன. ஊழலுக்கு எதிரான போராட்டங்களுக்கு நடுத்தரக் குடும்பங்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இழப்புகளையும் சேதங்களையும் சரிசெய்தாக வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் இருக்கிறது. அதனால் அவர் ஊடகங்களை அழைத்துப் பேசி இருக்கிறார்! &lt;br /&gt;&lt;br /&gt;அதேசமயம், அனைத்து ஊடகங்களையும் அழைக்காமல் தேர்வுசெய்யப்பட்ட ஐந்து அச்சு ஊடக ஆசிரியர்களிடம் மட்டும் பேசுகிறார்.  அவர்கள் மூலமாக தான் சொல்ல நினைப்பதை மக்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்பது அவருடைய எண்ணம். அது நிறைவேறி இருக்கிறது. ‘நான் அதிகாரம் இல்லாத பிரதமர் இல்லை; அரசு என் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது; லோக்பால் அதிகார வரம்புக்குள் பிரதமர் பதவியைக் கொண்டு வருவதில் எனக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை; ஆனால் என் அமைச்சரவை சகாக்கள் தான் அதை எதிர்க்கிறார்கள்’ என்று அவருடைய கருத்துக்களை ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாக்கி மக்களிடம் சேர்த்தன. &lt;br /&gt;&lt;br /&gt;“ஊழலையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்கும் மந்திரக் கோல் எதுவும் என்னிடம் இல்லை; அனைத்து அதிகாரங்களும் அரசாங்கத்திடம் குவியும் லைசன்ஸ் ராஜ்யம் மீண்டும் வந்துவிடாமல் இருக்க வேண்டும்” என்று அவர் மக்களை எச்சரிக்கிறார். உரிமங்களைப் பெறுவதற்காக அரசாங்கத்திடம் காத்திருக்க வேண்டியிருப்பதாலேயே லஞ்சமும் ஊழலும் பெருகுகிறது என்று நமக்கு கற்பித்தார்கள். இப்போது பெருகி இருக்கும் லஞ்சத்தையும் ஊழலையும் கட்டுப்படுத்த முடியாத நிலையில், ‘லைசன்ஸ் ராஜ்யம்’ வந்துவிடும் என்று அச்சுறுத்துகிறார்கள்! &lt;br /&gt;&lt;br /&gt;பரபரப்பான செய்திகளுக்கு நடுவே ஒரு செய்தி கண்டு கொள்ளப்படாமல் இருக்கிறது. ஊடகங்களுடன் பிரதமர் மனம் திறந்து பேசினார், ராகுல் காந்திக்கு  பிரதமராகும் தகுதி இருக்கிறது என்ற திக்விஜய்சிங்கின் பேச்சு போன்றவை பட்டையைக் கிளப்பும் செய்திகள். அவற்றுக்கு நடுவே கவனிக்கப்படாமல் நம்மைக் கவலைப்படச் செய்யும் செய்தி என்ன? 2002-ல் குஜராத் படுகொலைகள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் ‘வழக்கமான அரசு நடைமுறை’ காரணமாக அழிக்கப்பட்டது என்பதே அந்த செய்தி! &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12453184-706430519018970683?l=stationbench.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://stationbench.blogspot.com/feeds/706430519018970683/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12453184&amp;postID=706430519018970683' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/706430519018970683'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/706430519018970683'/><link rel='alternate' type='text/html' href='http://stationbench.blogspot.com/2011/07/blog-post_05.html' title='அன்னையின் நிழலில்….'/><author><name>ஜென்ராம்</name><uri>http://www.blogger.com/profile/01132053348035137568</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12453184.post-8241949639508147241</id><published>2011-07-01T12:18:00.000+05:30</published><updated>2011-07-01T12:20:23.481+05:30</updated><title type='text'>இருட்டினில் மறையும் நீதி</title><content type='html'>“கிரிக்கெட் வீரர்களுடைய மட்டையிலும் சட்டையிலும் அவர்களுடைய ‘ஸ்பான்சர்கள்’ யார் என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. நம் அமைச்சர்களின் சட்டைகளில் அது தெரிவதில்லை!”  இந்த வரிகளை  உங்களுக்கு நினைவிருக்கிறதா? ரிப்போர்ட்டர் இதழில் இந்த எரிதழல் பகுதியில் நான் எழுதிய முதல் பத்தியின் கடைசி வரிகள். கடந்த 11.07.2010 இதழுக்காக ஜூலை இரண்டாம் தேதி நான் அந்தக் கட்டுரையை எழுதினேன். எதைப் பற்றி? பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்டது குறித்த விமர்சனமாக அது எழுதப்பட்டது. ஏறத்தாழ ஒரு வருடம் கழித்து அதே பிரச்னையைப் பற்றி மீண்டும் எழுத வேண்டியிருக்கிறது. இடையில் எத்தனையோ முறை பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது என்பது வேறு விஷயம்! &lt;br /&gt;&lt;br /&gt;எதற்காக நான் எழுதிய அந்த பத்தியை இங்கு நினைவூட்டுகிறேன் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். அதே பிரச்னை.. அரசாங்கத்திடம் இருந்து அதே வாசகங்கள்.. “விலை உயரும் போது சாதாரண மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதை நாங்கள் நன்றாக உணர்ந்திருக்கிறோம்; ஆனாலும் நாட்டு நலன் கருதி சில கடுமையான முடிவுகளை அரசு எடுக்க வேண்டியிருக்கிறது” என்கிறார் இப்போது காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி! அதே சொற்கள், அதே பொருள்! அன்று பேசியவர் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி! இப்போது அவர்  இன்னும் ஒரு படி மேலே ஏறி உயரத்தில் இருந்து கொண்டு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்குகிறார். விற்பனை வரியைக் குறைத்து, டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு போன்றவற்றைக் குறைந்த விலையில் அந்தந்த மாநில மக்களுக்கு மாநில அரசுகள் வழங்கலாம் என்று ஆலோசனை வழங்குகிறார்! &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு லிட்டர் டீசலின் விலை மூன்று ரூபாய் உயர்ந்திருக்கிறது; சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ஐம்பது ரூபாயும் மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு இரண்டு ரூபாயும் விலை ஏறி இருக்கிறது. இந்த விலையேற்றத்தை ஏறத்தாழ எல்லா எதிர்க்கட்சிகளும் கண்டித்து இருக்கின்றன. “உத்தரப் பிரதேசத்தில் சாமான்யனுக்கு ஆதரவாக வேஷம் போடும் காங்கிரஸ் கட்சி, அகில இந்திய அளவில் ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கிறது” என்று உ.பி. முதலமைச்சர் மாயாவதி குற்றம் சாட்டி இருக்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் திமுக, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளும் மெல்லிய எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;திமுகவின் எதிர்ப்பை ஏன் மெல்லிய எதிர்ப்பு என்று சொல்ல வேண்டும் என்ற கேள்வி பலருக்கு எழக் கூடும். பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தை மத்திய அரசு எந்த வகையிலும் நியாயப்படுத்தக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதியின் அறிக்கை சொல்கிறது. மிகவும் தீவிரமான கண்டனச் சொற்கள் இல்லையே என்றெல்லாம் பேசுவதில் பொருள் இல்லை. ஏதோ இந்த அளவிற்காவது, விலையேற்றம் நியாயமான செயல் அல்ல என்று சொல்கிறாரே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். முதலமைச்சர் ஜெயலலிதா விலைஉயர்வைக் கண்டித்திருக்கிறார் என்பதால் நாம் அந்த விலையேற்றத்தை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுக்காமல் இருக்கிறாரே என்று மகிழ்ச்சி அடைய வேண்டியதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;“லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமரைச் சேர்ப்பதால் அவருடைய அதிகார வரம்பு குறைக்கப்படுகிறது; அதனால் நான் அந்த ஆலோசனையை எதிர்க்கிறேன்” என்று ஜெயலலிதா சொல்வதை நினைத்துப் பாருங்கள். லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமரைக் கொண்டு வர வேண்டும் என்று கருணாநிதி சொன்னதன் எதிர்விளைவு என்று சிலர் நினைப்பதை எப்படி தடுக்க முடியும்? அதையும் மீறிய அரசியல் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டில் இருக்கிறது என்பது விவாதத்துக்குரிய வேறு விஷயம்! &lt;br /&gt;  &lt;br /&gt;இதுவரை பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு சொல்லி வந்த காரணம் மக்களிடம் இப்போது எடுபடவில்லை என்பதை அரசு புரிந்து கொண்டிருக்கிறது. அதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வதுதான் இங்கு விலையேற்றத்துக்குக் காரணம் என்ற பழைய பல்லவி இன்று பொருந்தாது என்பதை மக்களும் உணர்ந்திருக்கிறார்கள். சர்வதேச சந்தையில் விலை குறையும் போது இங்கு விலை குறைவதில்லை. இதற்கு என்ன காரணம்? இங்கு விலை ஏறுவதற்கு மத்திய அரசு விதித்திருக்கும் உற்பத்தி வரி, சுங்க வரி ஆகியவையும் மாநில அரசின் விர்பனை வரியும் காரணம் என்பதை பரவலான பிரசாரம் மூலமாக மக்கள் அறிந்திருக்கிறார்கள். இருந்தும் அவர்கள் காதில் பூச்சுற்ற முயற்சி நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் உரிமையை  மத்திய அரசு வைத்திருக்காது; எண்ணெய் நிறுவனங்களே சந்தை நிலைமைக்கு ஏற்றவாறு விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற கொள்கையை அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்தாகி விட்டது. இந்நிலையில் மத்திய அரசின் சுங்க வரிக்கோ அல்லது உற்பத்தி வரிக்கோ எந்த பாதகமும் இல்லாமல் அரசு பார்த்துக் கொள்ளும். ஆனால் விலை உயர்வால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணமாக மாநில அரசு விற்பனை வரியைக் குறைத்துக் கொள்ள வேண்டுமாம்! மத்திய நிதியமைச்சர் சொல்கிறார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அதை ஆமோதிக்கிறார்! &lt;br /&gt;&lt;br /&gt;அதாவது “நாங்கள் ஐம்பது ரூபாய் விலை உயர்த்துவோம்; நீங்கள் உங்கள் வருவாயில் 14 முதல் 15 ரூபாயை குறைத்துக் கொள்ளுங்கள்” என்று மத்திய அரசு மாநில அரசுகளைச் சொல்கிறது. டெல்லிக்குப் போக வேண்டியது தமிழகத்தில் இருந்து போய்விடும்; சென்னைக்குக் கிடைக்க வேண்டியதை தமிழகம் இழக்க வேண்டும். இதை ஒரு தீர்வாக மத்திய அரசு சொல்கிறது; மாநில சுயாட்சி பற்றிப் பேசுபவர்கள் அதை ஏற்றுக் கொண்டு இன்றைய தமிழக அரசுக்கும் ஆலோசனை சொல்கிறார்கள். தமிழ்நாட்டு நலனில் இருக்கும் அக்கறையை விட மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நலனில் அவர்களுக்கு இருக்கும் ஈடுபாடே இதன் மூலம் வெளிப்படுகிறது!&lt;br /&gt; &lt;br /&gt;இந்த விலை உயர்வால் நம்முடைய வாழ்க்கையில் என்னென்ன விளைவுகள் ஏற்படும்? ஏற்கனவே சரக்குக் கட்டணங்களை லாரி உரிமையாளர்கள் உயர்த்திவிட்டார்கள்; ஆம்னி பஸ்களின் கட்டணங்கள் அதிரடியாக அதிகரித்து இருக்கின்றன. காய்கறிகளில் தொடங்கி அனைத்துப் பொருட்களின் விலையும் படிப்படியாக எகிறத் தொடங்கியிருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் நடக்கும் ஊழலின் தொகையை ஏற்றிக் கொண்டே போகிறவர்களுக்கு விலையேற்றத்தின் கடுமையான விளைவுகளைப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் நம்மால் அவர்களைப் போல இருக்க முடியாது!  &lt;br /&gt;&lt;br /&gt;குமுதம் ரிப்போர்ட்டர் 07.07.11&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12453184-8241949639508147241?l=stationbench.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://stationbench.blogspot.com/feeds/8241949639508147241/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12453184&amp;postID=8241949639508147241' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/8241949639508147241'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/8241949639508147241'/><link rel='alternate' type='text/html' href='http://stationbench.blogspot.com/2011/07/blog-post_01.html' title='இருட்டினில் மறையும் நீதி'/><author><name>ஜென்ராம்</name><uri>http://www.blogger.com/profile/01132053348035137568</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12453184.post-3836263802968713113</id><published>2011-07-01T12:16:00.001+05:30</published><updated>2011-07-01T12:18:10.520+05:30</updated><title type='text'>எதிராக இருப்பது யார்?</title><content type='html'>கடிதம்! நம்மில் பலருக்கு முற்றிலுமாக மறந்து போன ஒரு பொருள்! தாளும் பேனாவும் எடுத்து நாம் கடிதம் எழுதி வருடங்கள் ஆகி இருக்கும் என்றே தோன்றுகிறது. இருந்த போதிலும் இன்னும் நமக்கு கடிதத்தை நினைவுபடுத்திக் கொண்டிருப்பது யார்? &lt;br /&gt;&lt;br /&gt;அரசியல்வாதிகள் தான்! உள்ளூர் பிரச்னையில் இருந்து உலகப் பிரச்னை வரை டெல்லிக்கு கடிதம் எழுதும் தலைவர்கள்! டெல்லியிலேயே அடுத்தடுத்து இருந்தாலும் நேரில் சந்திக்க முடியவில்லை என்றால் ஒரு கடிதம் எழுதிப் போடும் தலைவர்கள்! நேரில் சந்திப்பதை விட கடிதம் எழுதுவதில் ஏதேனும் கூடுதல் பயன் இருக்கிறதா? ஆம். கடிதத்தின் நகலை உடனடியாக ஊடகங்களில் வெளியிட முடியும்! &lt;br /&gt;&lt;br /&gt;அப்படி ஊடகங்களில் வெளியான ஒரு கடிதத்துக்கு சோனியா காந்தி அதிருப்தி தெரிவித்திருக்கிறார். ஊழல் எதிர்ப்பு ‘நாயகன்’ அன்னா ஹசாரேக்கு அவர் பதில் கடிதம் எழுதி இருக்கிறார். கடந்த ஏப்ரலில் ஒரு முறையும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி ஒரு முறையும் அன்னா ஹசாரே சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். அவரைப் பற்றி காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள் என்று சோனியாவிடம் கண்ணைக் கசக்கி இருந்தார். அதற்கு சோனியா காந்தி  “உங்களை சிலர் விமர்சிப்பதை நான் ஆதரிக்கவில்லை; அவர்களை நான் ஊக்கப்படுத்தவும் இல்லை” என்று பதில் அனுப்பி இருந்தார்!&lt;br /&gt; &lt;br /&gt;ஆனால், சோனியா காந்தி சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் ஊக்கப்படுத்தாமல் இருக்கலாம்; அதேசமயம் கட்சியில் இருந்து வரும் பொறுப்பற்ற விமர்சனங்களை அவர் கட்டுப்படுத்தவும் இல்லை. திக்விஜய்சிங், ஜனார்த்தன் திவேதி போன்ற தலைவர்கள் அன்னா ஹசாரே அணிக்கு எதிராகவும் ராம் தேவ் குழுவுக்கு எதிராகவும் ‘பிய்த்து உதறுகிறார்கள்’; உண்மையில் காங்கிரஸ் தலைவர்கள் அன்னா ஹசாரே, ராம் தேவ் போன்றவர்களை மட்டுமா எதிர்த்துப் பேசுகிறார்கள்? அல்லது அவர்களைத் தனிப்பட்ட முறையில் அசிங்கப்படுத்துவதோடு நின்று விடுகிறார்களா என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் ஊழலுக்கு எதிரான போராட்டத்தையே கொச்சைப்படுத்துகிறார்கள்; நாடாளுமன்றம் பெரியதா அல்லது சிவில் சமூகம் பெரியதா என்று புதிய பட்டிமன்றத்தைத் தொடங்கி வைக்கிறார்கள். ஊழலை எதிர்த்துத் தானே அன்னா ஹசாரே போராடுகிறார் என்று அவர்களால் சும்மா இருந்துவிட முடியவில்லை. அரசை எதிர்த்துப் போராடுவதாக அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அரசும் ஊழலும் பிரிக்க முடியாத இரட்டைப் பிறவிகள் என்று அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் போலிருக்கிறது! &lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் கட்சியில் இருக்கும் யார் யாரோ அப்படிப் பேசினால் நமக்குப் பெரிதாக ஒன்றும் தோன்றாது. நம்முடைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சிவில் சமூகப் போராட்டங்களைக் குறை சொல்கிறார். “தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் தங்களுடைய பொறுப்புகளை விட்டுக் கொடுப்பதை நான் ஆதரிக்க மாட்டேன். இந்த நாட்டின் அடித்தளம் நாடாளுமன்ற ஜனநாயகம்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்” என்று அவர் பேசி இருக்கிறார்! ஊழலுக்கு எதிராக பொதுநல அமைப்புகள் குரல் எழுப்புவதை ஆதரிக்கிறேன் என்றும் அவர் சேர்த்தே சொல்கிறார்! &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு என்ன பொருள்? “நீங்கள் போராடலாம்; ஆனால் நாங்கள் நிறுத்தச் சொல்லும்போது நிறுத்திவிட வேண்டும்; நாங்கள் எடுக்கும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று மத்திய ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள் என்று அர்த்தம்! காங்கிரஸ் கட்சியின் ஜெயந்தி நடராஜனும் பொதுநல அமைப்புகளின் போராட்டம், ஜனநாயகத்தில் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்துக்கு எதிராக இருக்கிறது என்ற ரீதியில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதி இருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;பிரதமரையும் விசாரிக்கும் அதிகாரம் வேண்டும் என்று லோக்பால் சட்ட முன்வரைவில் சில விஷயங்களை பொதுநல அமைப்புகள் வலியுறுத்துவதை காங்கிரஸ் கட்சியால் தாங்க முடியவில்லை! அதனால் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை மக்கள் போராட்டங்கள் அபகரிக்க முயல்கின்றன என்று கூக்குரல் இடுகிறார்கள்! &lt;br /&gt;&lt;br /&gt;அன்னா ஹசாரே, ஐரோம் ஷர்மிளா சானு, ராம் தேவ் போன்றவர்கள் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைத் தங்களுடைய கைகளில் எடுக்க முயல்கிறார்களா? நிச்சயம் இல்லை. அவர்களுடைய போராட்டங்களில் ஒருவருக்கு விமர்சனம் இருக்கலாம். ஊடகங்களின் பாரபட்சம் குறித்து வேறுபட்ட பார்வை இருக்கலாம். அன்னா ஹசாரே, ராம் தேவ் போன்றவர்களின் கோரிக்கைகள் ஊழல் ஒழிப்புக்கோ அல்லது கருப்புப் பண ஒழிப்புக்கோ முழுமையான தீர்வு அளிப்பவை அல்ல என்று ஒருவர் கருதலாம். அதற்காக அரசு சொல்லும் அபாண்டமான குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது! &lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கமும் ஆட்சியாளர்களை ஆதரிப்பவர்களும் ஏன் இப்படிப் பேசுகிறார்கள்? இவர்களை இப்படிப் பேசத் தூண்டும் சிந்தனை எது? மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்குச் சாவடிக்கு வர வேண்டும்;  வரிசையில் நின்று ஓட்டுப் போட்டு விட்டு வீட்டுக்குப் போக வேண்டும்; அதோடு அவர்களுடைய ஜனநாயகக் கடமை முடிந்து விடுகிறது. சட்டம் இயற்றும் பொறுப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மட்டுமே; அந்த நடைமுறையில் பிரதிநிதிகளுக்கு மக்கள் எந்த அழுத்தத்தையும் கொடுக்கக் கூடாது. இந்த ஆளுவோரின் சிந்தனைதான் பொதுநல அமைப்புகளின் போராட்டங்களுக்கு எதிராக மக்களைத் ‘திசைதிருப்பும்’ வேலைக்கு அடிநாதமாக இருக்கிறது! &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை யார் பறித்துக் கொண்டிருகிறார்கள்? ராடியா டேப்களும் விக்கி லீக்ஸ் செய்திகளும் நமக்கு என்ன தகவலை நமக்குத் தருகின்றன? ரத்தன் டாடாக்களும் முகேஷ் அம்பானிகளும் ராடியாக்கள் மூலம் அமைச்சர்களைத் தீர்மானித்தார்களே, அதுதான் நாடாளுமன்ற ஜனநாயகமா? ‘எங்கள் தலைவருக்கு ஜலதோஷம், அதனால் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் தும்மிக் கொண்டிருக்கிறோம்’ என்று அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் மத்திய அமைச்சர்கள் மனம் திறந்தார்களே, இதுதான் இந்திய இறையாண்மையா? &lt;br /&gt;&lt;br /&gt;தேசிய சிறப்பு அடையாள அட்டையை இந்திய மக்கள் அனைவருக்கும் கொடுக்கும் திட்டத்துக்காக நந்தன் நிலகேனியை மத்திய அரசாங்கம் தலைவராக நியமித்தது.  எந்த நாடாளுமன்றத்திடம் அதற்காக அனுமதி வாங்கியது நம் அரசு?  தேசிய நுண்ணறிவுக் கழகத்துக்கு தலைவராக கேப்டன் ரகுராமன் என்பவரை அரசு நியமித்தது. இதற்கு மக்களவை கூடியா அனுமதி அளித்தது? நந்தன் நிலகேனியும் கேப்டன் ரகுராமனும் யார்? இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் முதன்மை நிர்வாக அதிகாரி நந்தன்!  மகேந்திரா சிறப்பு சேவைகள் குழுமத்தின் தலைமை நிர்வாகியாக இருந்தவர் ரகுராமன்! அவ்வளவு ஏன்? சோனியா காந்தியின் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் தேசிய ஆலோசனைக் குழுமத்தைக் கூட நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் அமைப்பு என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்! &lt;br /&gt; &lt;br /&gt;ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கையை சிதம்பரத்தை விடவும் ஜெயந்தி நடராஜனை விடவும் யார் சரியாகப் புரிந்து கொண்டிருக்க முடியும்?  நான் தான் விபரம் தெரியாமல் அவர்கள் பேசியதை விமர்சித்து எழுதிக் கொண்டிருக்கிறேன். அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்! தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களுடைய பொறுப்புகளை போராட்டங்களை நடத்தும் பொதுநல அமைப்புகளிடம் ஒப்படைக்கக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர்கள் சொல்வது ‘சரி’தான். பிறகு யாருக்கு அவர்கள் அடிபணிந்து நடக்க வேண்டும்? பெரிய தொழில் நிறுவனங்களிடமும் நாட்டைக் கொள்ளையடிக்கும் அந்நிய நிறுவனங்களிடமும் தான் அந்த அதிகாரத்தைக் கையளிக்க வேண்டும்!  அவர்களுக்கு இருக்கும் ‘தெளிவு’ மக்களாகிய நமக்குத்தான் இல்லை!  &lt;br /&gt;&lt;br /&gt;குமுதம் ரிப்போர்ட்டர் 30.06.11&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12453184-3836263802968713113?l=stationbench.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://stationbench.blogspot.com/feeds/3836263802968713113/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12453184&amp;postID=3836263802968713113' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/3836263802968713113'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/3836263802968713113'/><link rel='alternate' type='text/html' href='http://stationbench.blogspot.com/2011/07/blog-post.html' title='எதிராக இருப்பது யார்?'/><author><name>ஜென்ராம்</name><uri>http://www.blogger.com/profile/01132053348035137568</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12453184.post-3517274994091601559</id><published>2011-06-21T14:46:00.000+05:30</published><updated>2011-06-21T14:48:20.977+05:30</updated><title type='text'>ஓய்வறியாப் போராட்டம்</title><content type='html'>“எத்தனை வருஷம்தான் இப்படி ஓடிக்கிட்டே இருப்பீங்க? கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குங்க” என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால் அவர் கேட்கவில்லை. இதைப் போன்ற கோரிக்கைகளை உரிய காலத்தில் யார்தான் கேட்கிறார்கள்? பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி வேலைக்குப் போய் நன்றாக சம்பாதிக்க ஆரம்பிக்கிறார்கள்; அதன் பிறகும் வயதான காலத்தில் வேலைக்குப் போகும் அப்பாக்களும் அம்மாக்களும் இருக்கிறார்கள். பொது சேவைக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபடும் ஒருவரை குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு ஒதுங்கி ஓய்வெடுக்கச் சொல்கிறார்கள். அவர் அந்த வார்த்தைகளைக் காதிலேயே போட்டுக் கொள்வதில்லை. அதைப் போலவே நியாயத்துக்காக போராடுபவர்களிலும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அநியாயங்களை அம்பலப்படுத்துவதை எந்த வயதிலும் நிறுத்துவதில்லை! &lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட மனிதர்களில் ஒருவர் ஜோதிர்மாய் தேய். மும்பையில் இருந்து வெளிவரும் ‘மிட்-டே’ என்ற ஆங்கில நாளிதழில் புலனாய்வுப் பிரிவுக்கு அவர் ஆசிரியராக இருந்தார். அவர் கடந்த ஜூன் 11-ம் நாள் காலையில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். புலனாய்வுப் பிரிவு என்றவுடன் நீங்கள் கற்பனையைக் கன்னாபின்னாவென்று அலைய விட்டு விடாதீர்கள். அரைகுறையாகக் கிடைத்த தகவலை வைத்து சம்பந்தப்பட்டவர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் ‘புலனாய்வு பத்திரிகையாளர்’ அல்ல அவர்! நிழல் உலக தாதாக்களும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களும் எல்லாத் துறைகளிலும் எப்படி ஊடுருவி நிற்கிறார்கள் என்பதைத் தொடர்ந்து அவர் அம்பலப்படுத்தி வந்தார். அவரைத் தான் நண்பர்கள் ஓய்வெடுக்கச் சொன்னார்கள். அவர் கேட்கவில்லை. இப்போது எதிரிகள் அவருக்கு ‘நிரந்தர ஓய்வைக்’ கொடுத்திருக்கிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்ற ஆங்கில நாளிதழின் மும்பை பதிப்பு 2005-ல் வெளியிடப்பட்டது. முதல் நாள் வெளியான பத்திரிகை கடைகளுக்கு வந்த சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது. அதோடு அந்த நாளுக்கும் அந்த வாரத்துக்குமான செய்தியை அது கொடுத்தது. நடிகை ஐஸ்வர்யா ராயுடன் நடிகர் சல்மான்கான் பேசிய டேப்பின் உரையாடலை அது வெளியிட்டது. நிழல் உலக தாதாக்களுடன் சல்மான் கானுக்கு இருந்த தொடர்பு, பாலிவுட் வட்டாரத்தில் தாதாக்களின் செல்வாக்கு போன்றவை அம்பலமாயின. அந்த செய்தியை வெளியிட்டவர் ஜோதிர்மாய் தேய். &lt;br /&gt;&lt;br /&gt;கடத்தல், போதை மருந்து, சூதாட்டம் போன்ற தொழில்களுடன் மட்டுமே நிழல் உலக தாதாக்களை 1970 களிலும் எண்பதுகளிலும் நாம் பார்க்க முடியும். ஆனால் தொண்ணூறுகளுக்குப் பிறகு அவர்கள் கை வைக்காத துறையே இல்லை என்றாகிவிட்டது.  சினிமா, வட்டி, ரியல் எஸ்டேட், மணல் கொள்ளை என்று நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பல துறைகளில் அவர்களுடைய செல்வாக்கு அதிகரித்து விட்டது. அரசியலில் இறங்கி சட்டமன்ற உறுப்பினர்களாகவும் சில மாபியா கும்பல் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு என்ன பொருள்? நாம் நேரடியாக நம்முடைய பைகளில் இருந்து பணத்தை எடுத்து அவர்களுடைய கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு தொழிலதிபர்கள் என்ற முகம் கிடைக்கிறது. அவர்களுடைய சாயம் வெளுக்கத் தொடங்கினால், அதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதற்குக் காரணமாக இருப்பவர்களைக் கொன்று போடுகிறார்கள்; அதன் மூலம் மற்றவர்களையும் வாய் மூடி மௌனியாக இருக்கும்படி அச்சுறுத்துகிறார்கள். இந்த நிலைமைகளை சரியான முறையில் புலனாய்வு செய்து தேய் கட்டுரைகளை எழுதி வந்தார்! &lt;br /&gt; &lt;br /&gt;கடந்த மே 27-ம் தேதி டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒரு குண்டு வெடித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த செய்தியின் அடிப்படையில் தேய் மும்பையில் இருக்கும் நீதிமன்றங்களுக்கு நேரில் சென்றார்; ஆய்வுகளை நடத்தினார்; பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள நீதிமன்றங்கள் தயார்நிலையில் இல்லை என்று செய்தி வெளியிட்டார்; பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள குறைகளை வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று போட்டுடைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;மும்பையில் புராதனப் பெருமை கொண்ட ஒரு கட்டிடத்தை இடித்து விட்டு, பத்து தளங்களைக் கொண்ட ஒரு வணிக வளாகம் கட்டப் போகிறார்கள். இந்த வளாகத்தில் இருந்து தாக்கப்படும் தூரத்தில் தான் மும்பை காவல்துறைத் தலைவர் அலுவலகம் இருக்கிறது. இந்த அபாயத்தைக் கருத்தில் கொள்ளாமல் புதிய வளாகப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்ற உண்மையை கடந்த மே 18-ம் தேதி வெளிப்படுத்தினார். மே 16-ம் நாள் வேறொரு பரபரப்பான செய்தியை அவர் கொண்டு வந்தார். மும்பை நகரத்தில் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பெட்ரோல், டீசல் மோசடி நடக்கிறது என்பது அந்த முதல் பக்க கட்டுரையின் சாரம். &lt;br /&gt; &lt;br /&gt;கடந்த மே மாதம் 10-ம் தேதி அவர் இன்னொரு முக்கியமான நபரைத் தொட்டார். ஒசாமா பின்லேடன் அமெரிக்காவால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதைத்  தொடர்ந்து, தாவூத் இப்ராஹிமுக்கு பாகிஸ்தான் அரசு பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறது என்று ஒரு செய்தியை வெளியிட்டார். மே 19-ம் நாள், தாவூதின் தம்பி இக்பால் காஸ்கர் மீது நடந்த கொலை முயற்சி, தாவூத் இப்ராஹிமை மறைவிடத்தில் இருந்து வெளிவரச் செய்வதற்கான தூண்டில் என்ற ரீதியில் ஒரு கட்டுரையை அவர் எழுதினார். இப்படித் தொடர்ந்து பல செய்திகளை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அவர் வெளியிட்டுக் கொண்டிருந்ததால், அவருக்கு அச்சுறுத்தல்கள் இருந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற துறையில் இருக்கும் ஒருவருக்கு அச்சுறுத்தல் இருந்தால், அவர் போய் காவல்துறையில் பாதுகாப்பு கேட்க முடியும். அரசியல்வாதிகள், அதிகாரிகள், கிரிமினல்கள், மாஃபியாக்கள் ஆகியோருக்குள் இருக்கும் கூட்டணியை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு பத்திரிகையாளன் என்ன செய்ய முடியும்? போலீஸ் பாதுகாப்பு கேட்க முடியுமா? கேட்டு அவர்கள் பாதுகாப்புக் கொடுத்து விட்டால், அவனால் வேலை செய்ய முடியுமா? அவனுக்குத் தகவல் கொடுக்கும் ‘சோர்ஸ்’களை அவன் போலீஸ் துணையுடன் போய் சந்திக்க முடியுமா? இந்த நிலை அயோக்கியர்களுக்கு சாதகமாக இருக்கிறது. ஒரு சில நாட்கள் ஒருவரைத் தொடர்ந்து கண்காணித்து விட்டு, ஒரு நாள் அவர்களால் ‘போட்டுத் தள்ள’ முடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு இந்த மாதிரி பத்திரிகையாளர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் என்ன பாதுகாப்பு நம் சமூகத்தில் இருக்கிறது? பாதுகாப்பாவது புடலங்காயாவது! இந்தியாவில் இதழாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன என்பதே செய்தி. முன்பெல்லாம் இந்த மாதிரியான தாக்குதல்கள் ஜம்மு காஷ்மீரிலோ அஸ்ஸாமிலோ, பஞ்சாபிலோ அல்லது மாவோயிஸ்ட் செல்வாக்கு இருக்கும் மாநிலங்களிலோ மட்டும் இருப்பதாக ஒரு கருத்து நிலவியது. ஆனால் இப்போது அப்படி இல்லை. நாட்டின் எந்த மூலையில் வேண்டும் என்றாலும் கிரிமினல்களால் எதுவும் செய்ய முடியும் என்ற நிலையே இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்படி என்றால் அரசு எதுவுமே செய்வதில்லையா? அரசு ஏதாவது செய்யாமல் இருக்குமா? “பத்திரிகையாளர்களைத் தாக்கியவர்கள் பிணையில் வெளி வர முடியாத குற்றத்தைச் செய்தவர்களாகிறார்கள்” என்று ஒரு சட்டத்தை மகாராஷ்டிர அரசு கொண்டு வரப் போகிறது. ஏற்கெனவே, டாக்டர்களைத் தாக்குபவர்களுக்கு பிணை கிடையாது என்று அங்கு சட்டம் இருக்கிறது. இப்போது பத்திரிகையாளர்கள்! சில வாரங்களில் வழக்கறிஞர்கள்! அடுத்த சில மாதங்களில் ஆசிரியர்கள்!  அடப்பாவமே! தலைவலி, காய்ச்சல் எல்லாவற்றுக்கும் புதுசு புதுசா சட்டம் கொண்டு வர்ற அரசாங்கத்தை ‘இன்னுமா இந்த ஊரு நம்பிக்கிட்டு இருக்கு’?&lt;br /&gt;  &lt;br /&gt;குமுதம் ரிப்போர்ட்டர் 26.06.11&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12453184-3517274994091601559?l=stationbench.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://stationbench.blogspot.com/feeds/3517274994091601559/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12453184&amp;postID=3517274994091601559' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/3517274994091601559'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/3517274994091601559'/><link rel='alternate' type='text/html' href='http://stationbench.blogspot.com/2011/06/blog-post_6655.html' title='ஓய்வறியாப் போராட்டம்'/><author><name>ஜென்ராம்</name><uri>http://www.blogger.com/profile/01132053348035137568</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12453184.post-8217830447008999858</id><published>2011-06-21T14:44:00.000+05:30</published><updated>2011-06-21T14:46:09.018+05:30</updated><title type='text'>என்ன செய்யப் போகிறீர்கள்?</title><content type='html'>முதலமைச்சர் ஜெயலலிதா டெல்லி சென்றிருக்கிறார். மூன்றாவது முறையாக தமிழக முதலமைச்சராக அவர் பொறுப்பேற்ற பிறகு அவர் இப்போதுதான் முதல் முறையாக டெல்லி போயிருக்கிறார். “பிரதமர் மன்மோகன்சிங்கையும் திட்டக் குழு துணைத் தலைவர் மான்டெக்சிங் அலுவாலியாவையும் அவர் சந்தித்து தமிழக அரசுக்கு கூடுதல் நிதி கோருவார்” என்பது நமக்குக் கிடைக்கும் செய்தி. அதை மீறிய அரசியல் முக்கியத்துவம் இந்த பயணத்தில் இருக்கும் என்று தோன்றவில்லை. ஏனென்றால் ஜெயலலிதாவும் சோனியாவும் சந்திப்பது மட்டுமே அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக இருக்க முடியும்.  தமிழக தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜெயலலிதாவுக்கு தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா சோனியா காந்தியை டெல்லியில் சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் ஊகங்களும்  அதிகரிக்கத் தொடங்கின. &lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசுடன் கூட்டணி தொடரும் என்று திமுக உயர்நிலைக் குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இந்தச் சூழலில், சோனியா காந்தி ஜெயலலிதாவை டெல்லியில் சந்தித்துப் பேசினார் என்றால் அது திமுகவுக்கு அதிர்ச்சியையும் அதிருப்தியையும் கொடுக்கும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அப்படி எதுவும் நடப்பதற்கு வாய்ப்பில்லை. சோனியா காந்தி டெல்லியில் இல்லை. அவர் வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதனால் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு டெல்லிக்கு முதல்முறையாக வரும் ஜெயலலிதாவை சோனியா காந்தி சந்திப்பதற்கு வழியில்லை. அதனால் திமுக கவலைப்படத் தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லி வந்து சேர்ந்த பிறகு ஜெயலலிதாவை மூன்று அரசியல் பிரமுகர்கள் தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்து இருக்கிறார்கள். டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் அவர்களில் ஒருவர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவர் ஜெயலலிதாவை சந்தித்ததில் எந்தவித அரசியல் முக்கியத்துவமும் இல்லை என்று ஒரு செய்தி சொல்கிறது. “உங்களை எப்போது வந்து நான் பார்க்கலாம்?” என்று ஜெயலலிதா கேட்டதாகவும்  அதற்கு ஷீலா தீட்சித் “நானே வந்து உங்களை சந்திக்கிறேன்” என்று சொல்லி நேரில் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. காங்கிரஸ் கட்சித் தலைமையிடம் இருந்து எந்த விதமான செய்தியையும் எடுத்துச் சென்றிருக்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. சந்திப்பு முடிந்து வெளியில் வந்த ஷீலா தீட்சித் செய்தியாளர்களிடம் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை.&lt;br /&gt;   &lt;br /&gt;ஷீலா தீட்சித்தைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் ரவிசங்கர் பிரசாத் ஜெயலலிதாவை சந்தித்தார். “இந்த சந்திப்பு மரியாதை நிமித்தம் நடந்த சந்திப்பு. தேர்தல் வெற்றிக்காக நான் ஜெயலலிதாவுக்கு தொலைபேசியில் வாழ்த்துச் சொன்னேன். அப்போது அவர் நன்றி சொல்லிவிட்டு, டெல்லி வரும்போது நேரில் சந்திக்கலாம் என்று கூறினார். இப்போது அவர் டெல்லி வந்திருக்கிறார். நாங்கள் சந்தித்துப் பேசினோம்” என்று அவர் செய்தியாளர்களிடம் சொல்லி இருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜாவும் தமிழ்நாடு இல்லத்தில் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசி இருக்கிறார். தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணியில் இருந்த கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்பதால் இந்த சந்திப்பில் ஆச்சர்யம் எதுவும் இல்லை என்று சிலர் கருதக் கூடும். “நாங்கள் அரசியல் பேசவில்லை. தமிழ்நாட்டைப் பாதிக்கும் மின்வெட்டு, நிதி நெருக்கடி போன்ற பிரச்னைகளையும் மாநிலத்தின் தேவைகளையும் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்” என்று ராஜா செய்தியாளர்களிடம் சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் ஷீலா தீட்சித், பாரதிய ஜனதாவின் ரவி சங்கர் பிரசாத், இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான டி.ராஜா என்று மூன்று அணிகளின் தலைவர்களையும் ஜெயலலிதா சந்தித்துப் பேசி இருக்கிறார். அதாவது தேசிய அளவில் இருக்கக் கூடிய எந்த அணியிலும் இணைத்துக் கொள்ள ஜெயலலிதா விரும்பவில்லை. எல்லாத் தரப்பிலும் திமுகவுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்துப் போய் திமுகவை தேசிய அரசியலில் தனிமைப்படுத்த அவர் முயல்கிறார். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அவசரமாக எந்த முடிவும் எடுக்கத் தேவையில்லை என்று அவர் கருதக் கூடும்!&lt;br /&gt; &lt;br /&gt;பிரதமர் மன்மோகன்சிங்கையும் மான்டெக்சிங் அலுவாலியாவையும் ஜெயலலிதா சந்திப்பதும் மாநிலத்துக்கு உதவிகள் கோருவதும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகள். கனிமொழி கைது உள்ளிட்ட பல பிரச்னைகளால் ஏற்கனவே நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் காங்கிரஸ் – திமுக கூட்டணி உறவில் இந்த நிர்வாக நடவடிக்கை பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியாது. காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இருக்கும் உறவு ஏற்கனவே நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது என்று சொல்வதை கருணாநிதி ஏற்றுக் கொள்ள மாட்டார். உயர்நிலைக் குழுக் கூட்டம் முடிந்தபின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மட்டுமல்ல, கடந்த 13-ம் தேதி திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையிலும் அவர் ஒரே புகாரை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். அதாவது காங்கிரஸ் கட்சியுடனான திமுகவின் கூட்டணி உறவை உடைப்பதற்கு பத்திரிகைகள் முயற்சி செய்கின்றன என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டு! &lt;br /&gt;&lt;br /&gt;டெல்லியில் ஜெயலலிதா இருக்கும்போதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் ஏ.பி.பரதன் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் வேறு சர்ச்சைகள் காரணமாக மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும் என்று பரதன் கேட்டிருக்கிறார். பாரதிய ஜனதாவின் சார்பிலும் யாராவது இந்தக் கோரிக்கையை வலியுறுத்தக் கூடும். காங்கிரஸ் கட்சியுடனான திமுகவின்  உறவில் அடுத்தடுத்து நெருக்கடிகளை உருவாக்கும் செயல்களைச் செய்யச் சொல்லி அரசியல் கட்சிகளிடம் இருந்து கோரிக்கைகள் எழும் வாய்ப்பை மறுப்பதற்கில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வேலையைச் செய்வதில் அந்தக் கட்சிகளுக்கு என்ன பலன்? அந்தக் கட்சிகளின் அரசியல் எதிரியாக இருக்கக் கூடிய காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுக்க முடிகிறது. தேசிய அளவில் இருக்கக் கூடிய மூன்று தரப்புகளிலும் திமுக அரசின் முறைகேடுகளையும் எடுத்துச் சொல்வது என்று அதிமுக முடிவு செய்திருக்கலாம். ஏற்கனவே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் திமுகவினர் ‘கறை படிந்த’ பிம்பத்தோடு இருப்பதை தேசிய அரசியல் அரங்கம் அறிந்து வைத்திருக்கிறது. இந்த நிலையில், இடதுசாரிகளும் பாஜகவும் திமுகவுக்கு எதிராக எது செய்தாலும் அது ஜெயலலிதாவின்  அரசியலுக்கு சாதகமானதாகவே இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் நரேந்திர மோடியும் டி.ராஜாவும் அடுத்தடுத்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த காட்சி ஏனோ இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. &lt;br /&gt;ஜெயலலிதாவின் டெல்லி பயணம் வேறு என்ன சாதிக்கும்? தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தேசிய கட்சிகளிடம் ஜெயலலிதா அரசியல் ஆதரவு கோருகிறாரா என்பது தெரியவில்லை. இலங்கைக்கு பொருளாதாரத் தடை, கச்சத்தீவு மீட்பு, தமிழக மீனவர்களின் பாதுகாப்பு போன்ற விஷயங்களில் தீர்மானம், கடிதம் போன்ற காகிதப் பணிகள் தவிர, ஜெயலலிதா என்ன செய்யப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள தமிழக மக்கள் ஆவலாக இருக்கிறார்கள்! &lt;br /&gt;&lt;br /&gt;குமுதம் ரிப்போர்ட்டர் 23.06.11&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12453184-8217830447008999858?l=stationbench.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://stationbench.blogspot.com/feeds/8217830447008999858/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12453184&amp;postID=8217830447008999858' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/8217830447008999858'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/8217830447008999858'/><link rel='alternate' type='text/html' href='http://stationbench.blogspot.com/2011/06/blog-post_21.html' title='என்ன செய்யப் போகிறீர்கள்?'/><author><name>ஜென்ராம்</name><uri>http://www.blogger.com/profile/01132053348035137568</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12453184.post-8107411302220927324</id><published>2011-06-14T13:04:00.001+05:30</published><updated>2011-06-14T13:07:46.589+05:30</updated><title type='text'>உறவுகள் தொடர்கதை!</title><content type='html'>மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட திமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை இனிதே நடந்து முடிந்தது. தேசிய ஊடகங்கள் எதிர்பார்த்த எந்த அதிரடி முடிவையும் திமுக எடுக்கவில்லை.  கனிமொழியின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்த பிறகு இரண்டு நாட்களில் தி.மு.கவின் உயர்நிலைக் குழு கூடியது. கூட்டத்துக்கு முன்னதாக, அந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை ஊடகங்கள் உருவாக்கின. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் இப்போது இருப்பதைப் போல திமுக தொடருமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அமைச்சரவையில் இருந்து அமைச்சர்களை விலக்கிக் கொண்டு ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கலாம் என்று ஊகங்கள் கிளப்பி விடப்பட்டன. மிகவும் இக்கட்டான இந்த சூழலில் எந்த உதவியும் செய்யாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்தும் ஆட்சியில் இருந்தும் திமுக விலகிக் கொள்ளும் என்ற ‘செய்தியும்’ ஊடகங்களில் விதைக்கப்பட்டன.&lt;br /&gt; &lt;br /&gt;சில செய்தித்தாள்களிலும் சில ஆங்கில செய்தி ஊடகங்களிலும் இதுபோன்ற பரபரப்பான செய்திகளைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு சாதாரணமான கூட்டத்தை எப்படிப் பரபரப்புக்குள்ளாக்குகிறார்கள் இவர்கள் என்று சில சமயங்களில் எரிச்சல் கூட எழுகிறது. நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, திமுக அரசின் சில திட்டங்களை ரத்து செய்தார். அரசாங்கத்தின் அந்த செயல் நியாயமா இல்லையா என்பதைப் பற்றி விவாதிப்பது இங்கு நோக்கம் இல்லை என்பதால் அதை அப்படியே விட்டு விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்த நிலையில் ஜெயலலிதா அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து திமுக என்ன செய்ய முடியும்? தோல்வியில் துவண்டு கிடக்கும் தொண்டர்களைத் திரட்ட வேண்டும். அதற்கு அடித்தளமாக கட்சிக் கூட்டம் நடத்தித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதைத் தான் திமுக செய்திருக்கிறது. அதற்குள் ஊடகங்கள் மத்திய ஆட்சியில் இருந்து திமுக விலகுமா என்ற கேள்வியை எழுப்பி பரபரப்பு ஊட்டி விட்டன! &lt;br /&gt;&lt;br /&gt;அப்படி என்றால் ஊடகங்கள் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் இப்படிப்பட்ட கதைகளை அவிழ்த்து விடுகின்றன என்று சொல்ல முடியுமா? ‘கூடாநட்பு கேடாய் முடியும்’ என்று பிறந்த நாள் செய்தியாக திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு அறிவுறுத்தவில்லையா? அவர் கூடா நட்பு என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணியையா குறிப்பிட்டார்? அல்லது பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸைச் சொன்னாரா? அல்லது கட்சிக்குள் தொண்டர்கள் வேறுவிதமான சிந்தனையில் இருப்பது தெரிந்தும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று ‘விசுவாசமாக’ இருந்த திருமாவளவனைக் குறிப்பிட்டாரா?  நிச்சயமாக இருக்க முடியாது. குடும்பத்தில் ஒரு நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி கண்டு கொள்ளாமல் இருக்கிறதே என்ற ஆதங்கத்தில் வந்த அரசியல் செய்தியாகத் தான் அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;திமுகவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாக கி.வீரமணி என்ன சொன்னார் என்பதை நினைத்துப் பாருங்கள். திமுகவின் தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று அவர் அறிவித்தார். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் பல்வேறு செயல்களுக்குப் பழியேற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதால்தான் தேர்தலில் திமுக மிகப் பெரிய தோல்வியைச் சந்திக்க நேரிட்டது என்று அவர் உறுதியாக சொன்னார். எந்தவிதமான கருத்து மக்கள் மத்தியில் பரப்பப்பட வேண்டும் என்று கருணாநிதி நினைக்கிறாரோ, அந்தக் கருத்தை ஊடகங்களில் எதிரொலிப்பதே சிலருடைய அரசியல் பணி! அதனால் வீரமணியின் கருத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு திமுகவுக்கு காங்கிரஸ் மீது மனக்கசப்பு இருக்கிறது என்று ஊடகங்கள் நிறுவ முயன்றிருக்கலாம்! &lt;br /&gt;&lt;br /&gt;திமுகவுக்கும் காங்கிரசுக்கும் எந்தவிதமான கசப்பும் இல்லையா? இரு கட்சிகளுக்கும் இடையில் ஊடகங்கள்தான் சிண்டு முடிகின்றனவா? அப்படி நாம் நம்ப வேண்டும் என்று இரு கட்சிகளும் விரும்புகின்றன. ஆனால் நடக்கும் நிகழ்ச்சிகள் அந்தக் கட்சித் தலைவர்களுக்குள் இருக்கும் இடைவெளியை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இப்போது கூடாநட்பு என்று தமிழில் கருணாநிதி சொன்னதற்கு காங்கிரஸ் பிரமுகர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ‘இதைத் தான் நான் சில வாரங்களுக்கு முன்னால் சகவாச தோஷம் என்று சொன்னேன்’ என்று சொல்லி சண்டைக்குத் தயாராகிறார். காங்கிரஸ் கட்சியின் ‘சந்தேஷ்’ என்ற இதழ் தேர்தல் தோல்விக்கு திமுக தான் காரணம் என்று சொல்கிறது. “2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் காரணமாகவே  தமிழகத்திலும் புதுவையிலும் காங்கிரஸ் தோற்றுப் போனது” என்று சந்தேஷ் பத்திரிகையில் எழுதப்பட்டிருக்கிறது. கூட்டணிக் கட்சியின் தவறுகளால் தங்களுடைய வாக்கு வங்கியை காங்கிரஸ் இழந்துவிடக் கூடாது என்பதால் தமிழகக் கொள்கையை மறுஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;“வெற்றி கிடைத்தால் அதன் பெருமையைக் கொண்டாட பலர் முன்வருவார்கள். தோல்வியடையும்போது பொறுப்பை பகிர்ந்து கொள்ள யாரும் வரமாட்டார்கள்” என்று சொல்வார்கள். அப்படித்தான் இந்த விஷயத்திலும் நடக்கிறது. திமுக சார்பாக வீரமணியும் காங்கிரஸ் சார்பாக ‘சந்தேஷ்’ பத்திரிகையும் ‘கூட்டணியால் தோல்வி அடைந்தோம்’ என்று ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் உயர்நிலைக் குழுக் கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி, எல்லாம் சுமுகமாக இருப்பதாக நம்மை நம்பச் சொல்கிறார். “சில சுயநலவாதிகள், சில பொறாமைக்காரர்கள் ஸ்பெக்ட்ரம் பிரச்னையை பூதாகாரமாக ஊதிவிட்ட காரணத்தால், அதை வைத்துக் கொண்டு அந்தப் பத்திரிகையில் அப்படி எழுதி இருப்பார்கள்” என்று சமாளிக்கிறார். “ திமுகவின் தோல்விக்கு ஒரு சில ‘பார்ப்பனர்களின்’ முயற்சியே முக்கிய காரணம்” என்று அடுத்த அம்பை ஏவுகிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;“காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை என்று நிச்சயமாகச் சொல்வேன். காங்கிரஸ் கட்சியுடன் எப்படியாவது விரோதத்தை உண்டாக்க வேண்டும், எங்களைப் பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, திட்டமிட்டு முடிவு செய்து ஒரு சிலர் இங்கே வந்து கேள்வியைக் கேட்கிறீர்கள்” என்று ஊடகங்கள் மீது பழியைத் திருப்புகிறார். கூடாநட்பு என்று சொன்னது ‘உங்களில் ஒரு சிலரோடு எனக்கு இருக்கும் நட்பாக’ இருக்கலாம் என்று லாவகமாக அடித்து ஆடுகிறார். தொலைக்காட்சிக்கு வர்த்தகரீதியாக கடன் வாங்கியதையும் அலைக்கற்றை ஒதுக்கீட்டையும் முடிச்சுப் போட்டு கனிமொழியைக் கைது செய்த சிபிஐ அமைப்பை திமுக கண்டித்திருக்கிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிஐயைக் கண்டிப்பது மத்திய அரசை எதிர்த்த கண்டனம்தானே என்று கேட்டால், நீங்கள் விருப்பப்படி எழுதிக் கொள்ளுங்கள் என்று பதில் சொல்வார்! &lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அரசில் இருந்து ஆ.ராசா கட்டாய ராஜினாமா, கலைஞர் டி.வி.ரெய்டு, தயாளு அம்மாள், கனிமொழி விசாரணை, கனிமொழி கைது, அடுத்து தயாநிதி மாறனைச் சுற்றும் சர்ச்சைகள் என்று அடுக்கடுக்காக தாக்குதல்கள் நடக்கின்றன. ஆனால் “இதனால் எல்லாம் திமுகவுடனான எங்கள் உறவு பாதிக்கப்படாது” என்று காங்கிரஸ் சொல்கிறது. அதையே திமுக வழிமொழிகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;இதைப் பார்க்கும்போது வடிவேலுவின் “எவ்வளவு அடிச்சாலும் தாங்குறானே, இவன் ரொம்ப நல்லவன் போல இருக்கு” என்ற காமெடி காட்சியே நினைவுக்கு வருகிறது! &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12453184-8107411302220927324?l=stationbench.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://stationbench.blogspot.com/feeds/8107411302220927324/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12453184&amp;postID=8107411302220927324' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/8107411302220927324'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/8107411302220927324'/><link rel='alternate' type='text/html' href='http://stationbench.blogspot.com/2011/06/blog-post_14.html' title='உறவுகள் தொடர்கதை!'/><author><name>ஜென்ராம்</name><uri>http://www.blogger.com/profile/01132053348035137568</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12453184.post-8858550775046139161</id><published>2011-06-13T14:38:00.000+05:30</published><updated>2011-06-13T14:39:56.707+05:30</updated><title type='text'>நடுநிசி நாய்கள்</title><content type='html'>“என் வாழ்க்கையில் இதுவரை இப்படி ஒரு வன்முறையை நான் பார்த்ததே இல்லை” என்று பாபா ராம்தேவ் சொல்லி இருக்கிறார். அப்படி என்ன வன்முறை அங்கே நடந்தது? வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் இந்திய கருப்புப் பணத்தை தேசிய சொத்தாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர் சாகும்வரை டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால், அரசாங்கத்துடன் பேசிய போது அங்கே அவர் யோகா வகுப்பு எடுக்க இருப்பதாகவும், ஜூன் 4-ம் நாள், சனிக்கிழமை ஆறு மணியுடன் அந்த வகுப்பை முடித்துக் கொண்டு எல்லோரும் கலைந்து விடுவதாகவும் மத்திய அரசுக்கு அவர் வாக்குறுதி அளித்ததாகத் தெரிகிறது. ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் இந்திய கருப்புப் பணத்தை வெளியில் கொண்டு வந்து தேசிய சொத்தாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அங்கே உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டம் மாலை ஆறு மணியளவில் முடிவடையவும் இல்லை. பின்னிரவில் காவல்துறை அந்த மைதானத்துக்குள் புகுந்து கூட்டத்தினரைக் கலைந்து போகச் செய்தது. பாபா ராம்தேவைக் ‘கைது’செய்து ஹரித்துவாருக்கு அனுப்பி வைத்தது. அங்கு அவர் மீண்டும் தன்னுடைய போராட்டத்தைத் தொடங்கினார் என்பது வேறு செய்தி! &lt;br /&gt;&lt;br /&gt;கூடியிருந்த கூட்டத்தைக் கலைந்து போகச் செய்வதற்கு காவல்துறை தடியடி நடத்தியிருக்கிறது. கண்ணீர்ப்புகை குண்டுகளையும்  பயன்படுத்தி இருக்கிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியதாக செய்தி எதுவும் இல்லை. ஏறத்தாழ ஐம்பதாயிரம் பேர் கூடியிருந்த கூட்டத்தைக் கலைப்பதற்கு ‘எளிய’ வழிகளையே காவல்துறை பயன்படுத்தி இருக்கிறது. வெறும் இரண்டாயிரம் அல்லது மூன்றாயிரம் பழங்குடியினரைக் கலைப்பதற்கு எல்லாம் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களில் சிலரைக் கொல்லும் காவல்துறை, பாபா ராம்தேவின் பக்தர்களை விரட்டுவதற்கு அப்படி ஒன்றும் செய்யவில்லை. இதற்கே அவர் ‘இப்படி ஒரு வன்முறையை என் வாழ்நாளில் நான் பார்க்கவில்லை’ என்று சொல்கிறார். இதற்குப் பொருள் என்ன? அவர் இதுவரை மிகவும் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்ந்து வந்திருக்கிறார் என்று அர்த்தமாகிறது! &lt;br /&gt;&lt;br /&gt;இப்படிச் சொல்வதால் காவல்துறையின் அடக்குமுறை நடவடிக்கைகளை நான் ஆதரிப்பதாக நீங்கள் கருதி விடக் கூடாது. எந்த ஒரு வன்முறையிலும் ஈடுபடாத ராம்தேவ் பக்தர்களைக் கலைப்பதற்கு இந்த குறைந்தபட்ச தடியடி கூடத் தேவையில்லை. அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால் அவரே ‘இடத்தைக் காலி செய்துவிட்டு’ போயிருப்பார். அதை விட்டுவிட்டு அந்தக் கூட்டத்தை கலைப்பதற்கு தடியடியும் கண்ணீர்ப்புகை குண்டுகளையும் பயன்படுத்தியதன் மூலம் ராம்தேவுக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கிடைப்பதற்கு அரசு உதவி இருக்கிறது! இந்திய அரசின் கரங்களை வலுப்படுத்தும் சில கோரிக்கைகளை அவர் முன்வைப்பதையும் பார்க்கும்போது, அரசுக்கும் ராம்தேவுக்கும் இடையில் நல்ல ‘புரிதல்’ இருப்பதாக நம்ப இடமிருக்கிறது!&lt;br /&gt; &lt;br /&gt;ஊழலை ஒழிப்பதற்கு உருவாக்கப்படும் லோக்பால் அமைப்பு பிரதமரையும் இந்திய தலைமை நீதிபதியையும் விசாரிக்கக் கூடாது என்று ‘செங்கல்’ உருவியவர் யார் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? பாபா ராம்தேவ் தான். “மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களை இப்படி விமர்சனத்துக்கு உள்ளாக்கினால் அது நம்முடைய சமூகத்துக்கு நல்லதா?” என்ற கேள்வி எழுப்பியவர் பாபா ராம்தேவ். அன்னா ஹசாரே மற்றும் ஆதரவாளர்களுக்கு மாற்றாக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டவராகக் கூட பாபா ராம்தேவ் இருக்கலாம். &lt;br /&gt;சிவில் சமூகத்துக்கும் அரசுக்கும் இடையில் இருந்த முரண்பாட்டை தனிமனிதர்களுக்கு அல்லது அரசியல் கட்சிகளுக்கு இடையிலான மோதலாக மாற்றிக் காட்டுவதற்கு அவர் உதவியாக இருக்கிறார். காமன்வெல்த் போட்டிகள், ஆதர்ஷ் வீட்டு வசதி வாரியம், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு, டெலிபோன் இணைப்பகத்தையே முறைகேடாகப் பயன்படுத்திய அமைச்சர் என்று பல முறைகேடுகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றை எல்லாம் பார்த்து கொதித்துப் போயிருக்கும் மக்களுடைய உணர்வை மடைமாற்றுவதற்கும் ராம்தேவ் கருவியாக இருக்கிறார்!  &lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட சூழலில் ராம்தேவின் போராட்டத்துக்கு ஒருவர் ஆதரவளிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. இந்திய மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் இருந்து மீட்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டத்தை நாம் ஆதரித்துத் தான் ஆக வேண்டும். ஆனால் அவர் அந்த ஒரு கோரிக்கையைத்தான் முன்வைக்கிறாரா? அவருடைய கோரிக்கைப் பட்டியலில் உள்ள விஷயங்கள் யாருடைய நலன்களை முன்னிறுத்துகின்றன?&lt;br /&gt; &lt;br /&gt;ஊழல் அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று முதல் கோரிக்கையை வைக்கிறார். நாகரிக சமூகங்கள் எல்லாம் மரணதண்டனையை இல்லாமல் ஒழித்துக் கட்டி வரும் காலகட்டத்தில், மரண தண்டனையை இவர் வலியுறுத்துகிறார். லோக்பால் விசாரணை வளையத்துக்குள் கூட பிரதமரும் தலைமை நீதிபதியும் வரக் கூடாது என்று சொல்பவர் அதிகாரிகளை மட்டும் தூக்கில் போட வேண்டும் என்று சொல்கிறார். இந்தக் கோரிக்கையை எப்படி பரந்து விரிந்த அரசியல் பார்வை கொண்ட ஒருவர் ஆதரிக்க முடியும்?&lt;br /&gt; &lt;br /&gt;1000, 500 ரூபாய் நோட்டுகளைச் செல்லாததாக்கி விட வேண்டுமாம். இந்த நோட்டுக்களை ஊழல் பெருச்சாளிகள் மட்டுமா வைத்திருக்கின்றன? நியாயமாக உழைத்து சம்பாதிப்பவர்கள் கூட இந்த மாதிரியான நடவடிக்கையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. நெல்லை விற்று கிடைத்த பணத்தை வங்கிகளில் போடாமல் செலவுக்கு வைத்திருக்கும் விவசாயிகளே கிராமங்களில் அதிகம். &lt;br /&gt;ஜனநாயக இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் அடையாளங்கள் எல்லாம் அழிக்கப்பட வேண்டும் என்கிறார். அதாவது ஆங்கிலத்தில் நடக்கும் நிர்வாகம், கல்வி எல்லாம் நிறுத்தப்பட வேண்டும். ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தில் தீர்வு காணும் எளிமையான பிரச்னை அல்ல இது. மக்களிடையே விவாதம் நடத்தப்பட வேண்டிய பெரிய விஷயம் இது. எளிமையாகப் பார்த்தால், தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு இது என்னவிதமான செய்தியைத் தருகிறது? ஆங்கிலத்தை ஒழித்துவிட்டு எல்லா இடங்களிலும் இந்தியை கொண்டு வரும் முயற்சி என்பதே இதன் பொருள். இந்திய மொழிகள் எல்லாவற்றையும் தேசிய மொழிகளாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ராம்தேவ் முன்வைப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியுமா? &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து மிகவும் முக்கியமான ஓர் அரசியல் கோரிக்கையை அவர் வைக்கிறார். இந்தியப் பிரதமர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதே அவருடைய அந்தக் கோரிக்கை. அதாவது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் அவருக்கு வேம்பாய்க் கசக்கிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்தந்த மாநில உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ராம்தேவ்களின் சில திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. அதற்காக நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு பதிலாக அதிபர் ஆட்சி முறையைக் கொண்டு வரும் விருப்பத்தைத் தெரிவிக்கிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கோரிக்கைகளை எல்லாம் பெரிதாக ஊடகங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவில்லை. காவல்துறையின் அத்துமீறல்களைச் சுட்டிக்காட்டி பரபரப்பை ஊட்டுகின்றன. பாபா ராம்தேவ் போன்றவர்களின் போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கக் கூடிய ஜனநாயக விரோதமான கோரிக்கைகளை அம்பலப்படுத்தத் தவறுகின்றன. மேலோட்டமாக ஊழல் எதிர்ப்புப் போராட்டம் என்று சொல்லப்படும்போது, அதற்கு ஆதரவு அளிப்பது கடமை என்று தோன்றுகிறது. ஊழல், கருப்புப் பணம் போன்ற விஷயங்களைத் தவிர்த்துப் பார்க்கும்போது இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கப்படக் கூடாது என்ற எண்ணமே மேலோங்குகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;குமுதம் ரிப்போர்ட்டர் 12.06.11&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12453184-8858550775046139161?l=stationbench.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://stationbench.blogspot.com/feeds/8858550775046139161/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12453184&amp;postID=8858550775046139161' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/8858550775046139161'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/8858550775046139161'/><link rel='alternate' type='text/html' href='http://stationbench.blogspot.com/2011/06/blog-post_6770.html' title='நடுநிசி நாய்கள்'/><author><name>ஜென்ராம்</name><uri>http://www.blogger.com/profile/01132053348035137568</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12453184.post-235565962414546254</id><published>2011-06-13T14:35:00.001+05:30</published><updated>2011-06-13T14:37:52.056+05:30</updated><title type='text'>தடுக்கப்பட வேண்டிய வன்முறை</title><content type='html'>“ரத்தத்தில் தோய்த்தெடுத்த சிவந்த கரங்களுடன் சுதந்திர தேவி வந்தால், அவளைக் கை குலுக்கி வரவேற்பது கடினம்” என்று சொல்வார்கள். வன்முறையைக் கொள்கையாக அரசியலில் வரித்துக் கொண்டவர்களைத் தவிர, மற்றவர்கள் எல்லோருக்கும் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வதில் எந்த சிரமமும் இருக்காது. ஆனால் அப்படி எளிதாக நம்மால் அரசியலில் ஈடுபடுகிறவர்களை வகைப்படுத்திவிட முடிகிறதா? இந்த சமூகத்தை வன்முறை நடவடிக்கைகள் மூலமாக மட்டுமே மாற்ற முடியும் என்று அறிவித்துவிட்டு செயல்படுகிறவர்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். உதடுகள் ஒன்றை உச்சரிக்கும் போது, கைகள் வேறொன்றைச் செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே மற்றவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;வன்செயல் என்றால் என்ன? ஏதாவது ஆயுதம் கொண்டோ அல்லது ஆயுதம் இல்லாமலோ ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்துவதா? அல்லது ஒருவரை இன்னொருவர் கொல்வதா? வழக்கமாக நாம் இது போன்ற செயல்களை மட்டுமே வன்முறை என்று கருதுகிறோம்; ஆனால் கண்ணுக்குத் தெரியாத வன்செயல்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. நம்மோடு பேசிக் கொண்டிருக்கும் ஒருவரை கடுமையான வார்த்தையால் முகம் சுருங்கச் செய்வதும் வன்செயல்தான். ‘கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே. அதை நான் எப்போதாவது தருவேன். நான் தரும்போது நீ பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்று சொல்வதும் ஒருவிதமான வன்செயல்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு எதிராக நான்கு பேர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களில் ஒருவரையோ அல்லது இருவரையோ புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களுடன் முகம் கொடுத்துப் பேசாமல் இருக்கிறோமே, அந்த செயலில் கூட வன்முறை இருக்கிறது. ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டு மனதளவில் ஏற்றுக் கொள்ளாமல், அதிகாரத்துக்குப் பயந்து ‘கீழ்ப்படிதலுடன்’ செய்து முடிக்கிறோமே, நாம் கண்டு அஞ்சும் அந்த அதிகாரத்தில் வன்முறை படிந்து கிடக்கிறது. சாதி, மதம், பாலினம், இனம், நாடு போன்ற பல காரணங்களுக்காக இன்று உலகம் முழுவதும் வன்செயல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவிலும் இதுபோன்ற மத அடிப்படையிலான வன்முறை சம்பவங்கள் நிறைய நடந்திருக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வன்செயல்களுக்கு பலியாகி இருக்கிறார்கள். இந்திய விடுதலையை ஒட்டிய காலங்களில் நடந்த இந்து-முஸ்லீம் கலவரங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். 1960 - களில் ஜெபல்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த மோதல்கள் குறித்து அறிய முடிகிறது. 1984-ல் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு நாடெங்கும் சீக்கியர்கள் மிக மோசமான முறையில் வேட்டையாடப்பட்டார்கள். பாபர் மசூதி இடிப்புக்கான பிரசார காலத்திலும் அந்த மசூதி இடிக்கப்பட்ட பிறகும் மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்த படுகொலைகளை நாம் இன்னும் மறந்திருக்க முடியாது.&lt;br /&gt; &lt;br /&gt;எல்லாவிதமான மத மோதல்கள் அல்லது படுகொலைகளையும் மிஞ்சும் வகையில் 2002-ல் குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை இருந்தது என்பதைத் தனியாக விளக்க வேண்டியதில்லை. எல்லா கலவரங்களும் முஸ்லீம்களுடன் தான் நடந்ததா என்று நீங்கள் கேட்கக் கூடும். ஒரிசாவில் கந்தமால் மாவட்டத்தில் 2008-ல் கிறிஸ்தவர்களுக்கு எதிராக படுகொலைகளும் துன்புறுத்தல்களும் நடந்தன. காஷ்மீரில் இந்துக்கள் அவர்களுடைய வாழ்விடங்களை விட்டு அடித்து விரட்டப்பட்டார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய சட்டதிட்டங்களின்படி சட்டம், ஒழுங்கைப் பராமரிப்பது மாநிலங்களின் கடமை. அதில் மத்திய அரசு நேரடியாகத் தலையிட முடியாது. ஆனால் இந்திய மக்களுடைய உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. 24 மணி நேரத்துக்கும் மேலாக – சில சமயங்களில் 48 மணி நேரத்துக்கும் மேலாக -  ஒரு மாநிலத்தில் தொடர்ச்சியான வன்செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்றால் அதற்கு என்ன பொருள்? மாநில அரசு அந்த வன்முறையை ஒடுக்கி சட்டம் ஒழுங்கைக் காக்க விரும்பவில்லை என்று அர்த்தம். அப்படி ஒரு நிலை வந்தால், மத்திய அரசு தலையிடாமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?&lt;br /&gt; &lt;br /&gt;கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்க்க முடியாது என்று மத்திய அரசு கருதுகிறது. அதனால் மதவாத வன்முறைத் தடுப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று முடிவெடுத்தது. அந்த சட்டத்துக்கான முன்வரைவு ஒன்றை தேசிய ஆலோசனைக் குழுமம் தயாரித்தது. அதைப் பொதுமக்கள் பார்வைக்கு இணையத்தில் வைத்தது. ஜூன் 4-ம் தேதி வரை மக்களிடம் இருந்து ஆலோசனைகளும் கருத்துகளும் வரவேற்கப்பட்டன.&lt;br /&gt; &lt;br /&gt;சட்டங்கள் மட்டுமே மாற்றங்களைக் கொண்டு வந்துவிட முடியுமா என்று சிலர் கேட்கலாம். சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிலையில் இருப்பவர்கள் என்னென்ன மதிப்பீடுகளின் அடிப்படையில் வாழ்க்கை நடத்துகிறவர்களாக இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பலாம். அடிப்படையில் இப்படி ஒரு சட்டத்துக்கான தேவை இருக்கிறது என்று நினைப்பவர்கள் கூட, இந்த சட்ட மசோதாவில் வேறு சில குறைகள் இருக்கின்றன என்று சொல்லலாம். எவ்வளவு குறைகள் இருந்தாலும், இப்படி ஒரு சட்டத்தின் தேவையை நாம் மறுக்க முடியாது.&lt;br /&gt; &lt;br /&gt;ஆனால், பாரதிய ஜனதா கட்சி இந்த சட்ட மசோதாவைக் கடுமையாக எதிர்க்கிறது. இந்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை மட்டுமே பேசுகிறது என்றும் பெரும்பான்மையினருக்கு எதிரான வன்செயல்களைக் கண்டு கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறது. அதாவது இந்துக்களுக்கு எதிராக இருக்கிறது என்பது அவர்களுடைய வாதம்! ஆனால் மசோதா அப்படிச் சொல்வதாகத் தெரியவில்லை. இந்தியாவில் ஏழு மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள்; ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், மிசோரம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து மறும் அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவை அந்த ஏழு மாநிலங்கள். அங்கெல்லாம் இந்த சட்டம் பாதுகாக்கும் சிறுபான்மையினர் பிரிவில் இந்துக்களும் இருக்கிறார்கள்!&lt;br /&gt; &lt;br /&gt;‘குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் பெண்களைப் பாதுகாக்கும் முயற்சி இருக்கிறது; அப்படி என்றால் பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு என்ன தீர்வு சொல்கிறீர்கள்’ என்று சிலர் கேட்கிறார்கள். இந்துக்களுக்கு எதிராக நடக்கும் வன்செயல்கள், உயர்சாதிகளுக்கு எதிராக வன்முறை, ஆண்களுக்கு எதிரான கொடுமைகள் எல்லாம் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானவை. அதற்காக அவற்றின் மீது நடவடிக்கைகள் தேவையில்லை என்று யாரும் சொல்வதில்லை! &lt;br /&gt;&lt;br /&gt;சிலர் மீது வெறுப்பை உமிழும் கருத்துகள் என்ற வன்முறை உட்பட ‘எல்லாவிதமான’ வன்செயல்களும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் எனக்கு இல்லை. “உலகில் எந்த நாட்டிலும் ஜனநாயகத்தின் ஆட்சி நடக்கவில்லை. வன்முறையே ஆள்கிறது. இதை உணர்ந்து கொள்ளுங்கள். ஆனால் இந்த உண்மையை பகிரங்கமாக சொல்லாமல் விட்டுவிடுவது சிறப்பானது” என்பதை நீங்கள் ஏற்கனவே புரிந்தவராக இருந்தால், உங்களிடம் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை!&lt;br /&gt; &lt;br /&gt;குமுதம் ரிப்போர்ட்டர் 09.06.11&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12453184-235565962414546254?l=stationbench.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://stationbench.blogspot.com/feeds/235565962414546254/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12453184&amp;postID=235565962414546254' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/235565962414546254'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/235565962414546254'/><link rel='alternate' type='text/html' href='http://stationbench.blogspot.com/2011/06/blog-post_13.html' title='தடுக்கப்பட வேண்டிய வன்முறை'/><author><name>ஜென்ராம்</name><uri>http://www.blogger.com/profile/01132053348035137568</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12453184.post-6658845932854287412</id><published>2011-06-13T14:32:00.001+05:30</published><updated>2011-06-13T14:34:57.706+05:30</updated><title type='text'>இரு துருவங்கள் சேருமோ?</title><content type='html'>“ஐந்து விரல்கள் தனித் தனியாக இருந்தாலும், அவை ஒன்றாக சேர்ந்தால்தான் உருப்படியான காரியத்தை நிறைவேற்ற முடியும்” என்று முன்னாள் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசி இருக்கிறார். சட்டமன்றம் என்பது மனிதனுடைய கையைப் போன்றது. அங்கு இடம் பெற்றிருக்கும் கட்சிகள் எல்லாம் விரல்களைப் போன்றவை. அவை ஒன்றாக இணைந்து பணியாற்றினால்தான் உருப்படியான வேலைகளைச் செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட விரும்புகிறார். எந்த சந்தர்ப்பத்தில் அவர் இப்படிப் பேசுகிறார்? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழக சட்டமன்றத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவரை வாழ்த்திப் பேசும்போது, ஸ்டாலின் இப்படிச் சொல்கிறார். “பெரிய தேர் ஓடுவதற்கு சக்கரங்கள் தேவை. அவற்றின் அச்சாணி மிகவும் சிறியதுதான். ஆனால் அந்தச் சிறிய அச்சாணி இல்லையென்றால், தேர்ச் சக்கரம் நகராது. அதைப் போல பெரிய கட்சி, சின்ன கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் இந்த சட்டமன்றத்தை வழிநடத்துங்கள் என்றும் அவர் பேசி இருக்கிறார்! &lt;br /&gt;&lt;br /&gt;சட்டமன்றத்தில் சிறிய கட்சிகளின் முக்கியத்துவம் பற்றிப் பேச வேண்டிய அவசியம் இப்போது தி.மு.கவுக்கு வந்துவிட்டது. ஏனென்றால் வாக்குகளின் அடிப்படையில் அது தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்த போதிலும், சட்டமன்றத்தில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது. 1991இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இரண்டு இடங்களில் மட்டுமே தி.மு.க ஜெயித்தது. எதிர்க்கட்சியாக அப்போது காங்கிரஸ் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதைப் போல இந்த தேர்தலிலும் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்த தேமுதிகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்திருக்கிறது. அதன் தலைவர் விஜயகாந்த் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த அரசியல் சூழ்நிலையில் திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக இருப்பதற்கு ஸ்டாலின் சம்மதித்திருப்பதை பாராட்டத்தக்க ஒரு செயலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.  ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். “அந்த அம்மா முதலமைச்சர்; விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர். நீங்க சபைக்கே போக வேண்டாம்.. அங்கே போனாலே உங்களுக்கு அவமானம்தான்” என்று அந்தக் கட்சியில் சில ‘ஜால்ராக்கள்’ வேப்பிலை அடித்திருக்கலாம். கட்சியின் வரலாறும் அப்படித்தான் சொல்கிறது. 1991 –இல் திமுகவுக்கு கிடைத்த தோல்விக்குப் பிறகு சட்டமன்றத்துக்குப் போக கருணாநிதிக்குப் பிடிக்கவில்லை. துறைமுகம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்! &lt;br /&gt;&lt;br /&gt;2001-ல் திமுகவுக்கு 31 இடங்கள் கிடைத்தன. அப்போதும் அவர் அவை நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை! இதில் இருந்து நாம் என்ன புரிந்து கொள்ள முடிகிறது? சட்டசபைக்குப் போனால், அங்கு திமுகவுக்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏக்கள் பேசுவதைக் கேட்க வேண்டியிருக்கும். அதற்கு பதில் சொல்ல வாய்ப்பு இருக்குமா தெரியவில்லை. இந்நிலையில் அங்கு போய் அதை எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதே அவமானம் என்று கருதுகிறவர்கள் என்ன செய்வார்கள்? ஸ்டாலின் அவைக்குப் போக வேண்டாம் என்றே சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் இடம் கொடுக்காமல் நம்மை யாரும் அவமானப்படுத்த முடியாது என்பதை ஸ்டாலின் நம்புகிறார் போலிருக்கிறது. நம்மைப் புண்படுத்த வேண்டும் என்று யாரோ ஏதோ செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுடைய அந்த செயலால் நாம் புண்பட்டால்தானே அவர்களுடைய எண்ணம் நிறைவேறும்? 2001-ல் ஜெயலலிதா முதல்வராகப் பதவி ஏற்ற விழாவில் பங்கேற்க வந்த ஸ்டாலினுக்கு நான்காவது வரிசையில் இடம் கொடுக்கப்பட்டது. இந்த முறை சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் பதவி ஏற்கும்போது அவர் கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்தார் என்கிறது செய்தி! &lt;br /&gt;&lt;br /&gt;சட்டநுட்பங்களின்படி அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கலாம்; ஆனால், திமுகவின் வி.வி.ஐ.பி. என்ற வகையில் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் என்ன? அதனால் ஜெயலலிதாவின் அரசு எந்த விதத்தில் குறைந்துவிடப் போகிறது என்ற கேள்வி எழுவதைத் தடுக்க முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;திராவிட முன்னேற்றக் கழகத்திலும் கூட ஸ்டாலின் ஒரே நாளில் வாரிசாக முன்னுக்கு வந்துவிடவில்லை. தயாநிதி மாறன், அழகிரி, கனிமொழி எல்லோரும் குறுகிய காலத்தில் அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்தார்கள். 2004-ல் நாடாளுமன்றத்துக்கு முதன்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற தயாநிதி மாறன், உடனடியாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரானார். குடும்பத்துக்குள் மோதல் வலுத்த போது கனிமொழி மாநிலங்களவை உறுப்பினரானார். 2009 தேர்தலில் முதன்முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அழகிரி, உடனே மத்திய அமைச்சராகி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஸ்டாலின் விஷயத்தில் அப்படியான உடனடி வளர்ச்சி எதுவும் இல்லை.  &lt;br /&gt;மிசா சட்டத்தின் கீழ் நெருக்கடிநிலை இருண்ட காலத்தில் பல மாதங்களாக ஸ்டாலின்  சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர். சிறைக் காவலர்களின் மிருகத்தனமான அடக்குமுறை அவர் மீது ஏவி விடப்பட்டது. அவர் 1989-ம் வருடம் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது திமுக தான் ஆட்சிக்கு வந்தது. ஆனால், அவருக்கு எந்தவிதமான அமைச்சர் பதவியும் வழங்கப்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;1991-ல் அவரால் வெற்றி பெற முடியவில்லை. 1996-ல் மீண்டும் திமுக மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. 2001-ல் மீண்டும் திமுக ஆட்சியை இழந்தது. 1989-ல் சட்டமன்ற உறுப்பினரான ஸ்டாலின், 2006-ல் தான் அமைச்சராக முடிந்தது.  மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே பணி செய்திருக்கிறார். அதில் இரண்டு முறை திமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தது என்பது இங்கு நாம் கவனிக்க வேண்டிய செய்தி. நான்காவது முறையாக சட்ட மன்ற உறுப்பினராகும்போதுதான் அவர் தமிழக அமைச்சராகிறார். அதற்காக அவர் காத்திருந்த ஆண்டுகள் 17! &lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரபூர்வமான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் தேசிய திராவிட முற்போக்குக் கழகம் இருந்தாலும், உண்மையான எதிர்க்கட்சியாக மக்கள் மன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகமே இருக்கிறது. முதலமைச்சராகவோ, எதிர்க்கட்சித் தலைவராகவோ இல்லாமல் கருணாநிதி தமிழக சட்டமன்ற உறுப்பினராக மட்டும் சட்டமன்றத்துக்குள் வருவாரா என்பது சந்தேகம் தான்! அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஸ்டாலினின் பங்கே சட்டமன்றத்தில் முக்கியமாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அதற்குத் தகுந்தவாறு, முதலமைச்சர் ஜெயலலிதாவும் சட்டமன்றத்தில் பேசி இருக்கிறார். “மிகவும் குறைந்த இடங்களையே எதிர்க்கட்சிகள் பிடித்திருக்கின்றன. ஆனாலும் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க ஆளும் கட்சி தயங்காது. சட்டப்பேரவை ஜனநாயகம் வாழவும் வளரவும் வளம் பெறவும் நிலைத்து நிற்கவும் துணையாக நிற்போம்” என்று ஜெயலலிதா சொல்லி இருக்கிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையிலேயே அப்படி ஒரு நிலையை உருவாக்க ஜெயலலிதா, விஜயகாந்த், ஸ்டாலின் ஆகிய மூவரும் முழு முயற்சி எடுக்க வேண்டும். பொதுவாக ஆட்சியாளர்களின் கடந்தகால அணுகுமுறை, நமக்குள் அவநம்பிக்கையை உருவாக்கக் கூடும். இருந்தாலும் ஸ்டாலின்  அதற்கான முயற்சியை மேற்கொள்வதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. முயற்சிகள் ஒருவேளை தோற்றுப் போகலாம்; ஆனால் முயலாமலேயே இருப்பது ஜனநாயகத்துக்குப் பெருந்தோல்வி என்றே சொல்லத் தோன்றுகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;குமுதம் ரிப்போர்ட்டர் 05.06.11&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12453184-6658845932854287412?l=stationbench.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://stationbench.blogspot.com/feeds/6658845932854287412/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12453184&amp;postID=6658845932854287412' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/6658845932854287412'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/6658845932854287412'/><link rel='alternate' type='text/html' href='http://stationbench.blogspot.com/2011/06/blog-post.html' title='இரு துருவங்கள் சேருமோ?'/><author><name>ஜென்ராம்</name><uri>http://www.blogger.com/profile/01132053348035137568</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12453184.post-3771975136371039464</id><published>2011-05-30T12:42:00.000+05:30</published><updated>2011-05-30T12:56:55.690+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2ஜி அலைவரிசை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திஹார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கனிமொழி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருணாநிதி'/><title type='text'>பெருமையல்ல!</title><content type='html'>இப்படி ஒன்று நடக்கும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்னால் யாராவது சொல்லி இருந்தால், யாரும் அதைக் காதிலேயே போட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். கட்சியிலும் வெளியிலும் இப்படி ஒரு காட்சியை யாரும் எதிர்பார்த்திருக்கவும் மாட்டார்கள். பொதுவாழ்க்கையில் குற்றம் செய்பவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற வேகம் கொண்ட சிலர் மட்டுமே இதுபோன்ற நடவடிக்கைகளின் அவசியம் பற்றி தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் கனிமொழி டெல்லியில் திகார் சிறையில் அடைக்கப்படுவார் என்பதை எப்படித்தான் கட்சியினரால் எதிர்பார்க்க முடியும்? &lt;br /&gt;&lt;br /&gt;மே 23-ம் நாள் சூரியன் உமிழும் வெப்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டிருக்கும் மாலை நேரத்தில், கருணாநிதி திகார் சிறையில் கனிமொழியைச் சந்தித்துப் பேசினார். அவரது துணைவி ராசாத்தி அம்மாள், கனிமொழியின் கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா, டி.ஆர்.பாலு ஆகியோர் அப்போது உடன் இருந்ததாக செய்திகள் சொல்கின்றன. “இந்த சந்திப்பு உணர்வுபூர்வமாக இருந்தது”  என்று அதிகாரிகள் சொன்னதாக ஒரு செய்தி சொல்கிறது. அது உணர்ச்சிபூர்வமானதா உணர்வு பூர்வமானதா அல்லது இரண்டும்தானா என்ற வார்த்தை விளையாட்டுக்குள் போக நான் விரும்பவில்லை. முப்பது நிமிடங்கள் அந்த சந்திப்பு நடந்ததாக சிறை அதிகாரிகள் சொல்கிறார்கள். அந்த முப்பது நிமிடமும் அந்த அப்பாவின் மனதுக்குள் என்னென்ன எண்ணங்கள் ஓடியிருக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;“உங்களுக்கு ஒரு மகள் இருந்து, செய்யாத குற்றத்துக்காக அவருக்குத் தண்டனையும் கிடைத்தால் உங்கள் மனம் என்ன பாடுபடுமோ அந்த நிலையில் என் மனம் இருக்கிறது” என்று கருணாநிதி சொன்னது உங்களுக்கு நினைவிருக்கும். செய்தியாளர்களிடம் அவர் அந்த வார்த்தைகளைச் சொன்னதை அறிந்த நொடியில், “எவ்வளவு திறமையாக நம்முடைய சிந்தனையைத் திசைமாற்றி விடுகிறார்” என்ற வியப்பே  என் மனதில் எழுந்தது. சட்டம் தன் கடமையைச் செய்யும், இந்த சிக்கலை சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம் என்ற வார்த்தைகளைக் கேட்கும்போது ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் உணர்வு வேறுவகையானது. “உங்க மகளுக்கு இப்படி நடந்தா உங்க மனசு என்ன பாடுபடும்?” என்ற கேள்வி நம்முடைய மனதில் உருவாக்கும் உணர்வுகள் வேறு வகை!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே ஒரு பெண்ணாக வீட்டில் வளரும் பெண்களுக்கும் அப்பாக்களுக்கும் இடையே இருக்கும் உணர்ச்சிமயமான உறவை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? சைக்கிள் ஓட்டப் பழகும்போது கீழே விழுந்து முழங்காலில் ரத்தம் கசியும் சிராய்ப்போடு வந்த மகளைப் பார்த்து நம்மில் சிலர் பதறி இருக்கலாம். கல்லூரியில் சேர்க்கும்போதோ அல்லது படித்து முடித்தபின் வேலையில் சேரும்போதோ, வசதிக் குறைவான விடுதி அறையில் மகளை சேர்த்து விட்டு வீடு திரும்பி இருக்கிறீர்களா? இதெல்லாம் அனைவருக்குமான அன்றாட நடைமுறை என்று உங்கள் அறிவு சொல்லும்போது, மகள் கஷ்டப்படுவாளோ என்று உணர்வு உள்ளுக்குள் தவிப்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? நம்முடைய கண் முன்னாலேயே மகளைக் கடுமையான வார்த்தைகளில் ஆசிரியர் திட்டும்போது, அவள் முகம் சுருங்குவதைப் பார்த்து உங்கள் மனம் வாடி இருக்கிறதா? &lt;br /&gt;&lt;br /&gt;இவற்றைப் போன்ற பல கேள்விகளில் சில வினாக்களுக்கு உங்கள் பதில் ஆம் என்றால் உங்களால் கருணாநிதியின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடியும். புகுந்த வீட்டில் இருக்கும் மகள் சாதாரணமான ஒரு காரணத்துக்காக லேசாக கண் கலங்கினாலே, அப்பாக்களாலும் அம்மாக்களாலும் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. வசதிகளும் வாய்ப்புகளும் பெருகியதற்குப் பிறகு பிறந்து வளர்ந்த செல்ல மகளை, செல்வ மகளைச் சிறையில் சென்று சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கும் அப்பாவின் உணர்ச்சிகளை நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அதேசமயம், சிறையில் மகனையோ மகளையோ பார்க்க நேர்கின்ற எல்லா அப்பாக்களும் அம்மாக்களும் இதே போன்ற உணர்ச்சிப் போராட்டங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதையும் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். தங்களுக்கு வரும் சிக்கல்களை எல்லோரும் பரிவுடன் அணுக வேண்டும் என்றும் மற்றவர்களின் துன்பங்களைப் பற்றி தாம் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் நினைப்பது சுயநலம். அப்படிப்பட்ட சுயநலம் கொஞ்சமும் இல்லாமல் எல்லா மக்களுக்கும் பொதுவான கோரிக்கைக்காக பத்து வருடங்களாக உண்ணாவிரதமும் சிறை வாழ்க்கையும் கொண்டிருக்கும் ஐரோம் ஷர்மிளா சானுவின் அம்மாவுக்கும் மனம் இருக்கிறது. சமூகத்தில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதிகளை அதிக அளவில் உருவாக்கப் பாடுபட்ட மருத்துவர் பினாயக் சென் சிறையில் அடைக்கப்பட்டதை நாம் மறக்கவில்லை. அவருடைய அம்மாவுக்கும் உணர்ச்சிகள் இருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;எதற்காக வெளிமாநில உதாரணங்கள்? கடந்துபோன திமுக ஆட்சியில் எத்தனை முறை சீமான் சிறையில் அடைக்கப்பட்டார்? அவர் கையை வீசி நடக்கும்போது அவர் கைவிரல் நகங்கள் யாரையாவது காயப்படுத்தின என்று எங்காவது ஒரு வழக்கு இருக்கிறதா? பிறகு எதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்? அவர் நேரடியாக வானத்தில் இருந்தா பூமியில் குதித்தார்? அவரும் ஒரு அம்மாவின் கருப்பையில் பத்து மாதம் இருந்து பிறந்தவர்தானே! சீமானின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் உணர்ச்சிகள் இல்லையா?&lt;br /&gt; &lt;br /&gt;ஓர் ஆண் சிறையில் இருக்கலாம்; செய்யாத குற்றத்துக்குத் தண்டனை அனுபவிக்கலாம். ஆனால் ஒரு பெண்ணுக்கு அந்த நிலை வந்துவிடக் கூடாது என்று ராம் ஜேத்மலானியைப் போல சிலர் வாதிடக் கூடும். இன்றைய முதல்வர் ஜெயலலிதாவைக் கைது செய்த போது இந்த வாதம் பொருந்தவில்லையா என்று சிலர் பதில் கேள்வியும் கேட்கக்கூடும். இப்போது கனிமொழிக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமையும் எதிர்க்கட்சி அரசாங்கத்தால் அவருக்கு எதிராக உருவாக்கப்பட்டதல்ல. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மத்திய அரசாங்கத்தில் இன்னும் திமுக அங்கமாகத் தான் இருக்கிறது. ராசாவும் கனிமொழியும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். இவ்வளவு அதிகாரம் மிகுந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை சந்தர்ப்ப சாட்சியங்கள் இல்லாமல் செய்யாத குற்றத்துக்காக தண்டனை வழங்கிவிட முடியாது.&lt;br /&gt;  &lt;br /&gt;அபியும் நானும் என்ற திரைப்படம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஒவ்வொரு விஷயத்தையும் அப்பாவிடம் கேட்டுக் கேட்டு செய்யும் மகள் அபி, வளர்ந்த பிறகு அப்பாவின் கண்காணிப்பை ஒதுக்கத் தொடங்குவார். அப்பா தலையிடும் போதெல்லாம், “ ஐ நோ வாட் ஐ யம் டூயிங்” என்பார். அதாவது  “என்ன செய்கிறேன் என்பதைத் தெரிந்தே நான் செய்கிறேன்” என்று சொல்வார். மேல்படிப்பு, காதல், திருமணம் என்று மகளின் விருப்பப்படியே அனைத்தும் நடக்கும். அதீதமான அன்பு காரணமாக மகளைத் தன்னுடனேயே வைத்திருக்க நினைக்கும் அப்பாவின் தவிப்புகளைச் சொல்லும் படம் அது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் படத்தின் மகளைப் போல ‘ஐ நோ வாட் ஐ யம் டூயிங்’ என்று கனிமொழி சொன்னாரா என்று தெரியவில்லை. அப்பாவின் வேண்டுகோளைக் கேட்டு கலைஞர் தொலைக்காட்சியில் பங்குதாரர் ஆனது தான் அவருடைய குற்றம் என்பதில் கூட உண்மையிருக்கலாம். ஆனால் அதுவல்ல பிரச்னை? எதற்காக சிறை செல்கிறோம் என்பதே இங்கு முக்கியம். நெருக்கடி நிலையின் போது கருணாநிதியின் மகன் ஸ்டாலின் சிறையில் இருந்தாரே, அதை யாராவது சிறுமையாகப் பார்க்கிறார்களா என்ன? அது அவருக்குப் பெருமையையும் புகழையுமே தேடித் தந்தது. ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்காக தண்டனை பெறுவது அப்படிப்பட்டதல்ல!&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12453184-3771975136371039464?l=stationbench.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://stationbench.blogspot.com/feeds/3771975136371039464/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12453184&amp;postID=3771975136371039464' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/3771975136371039464'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/3771975136371039464'/><link rel='alternate' type='text/html' href='http://stationbench.blogspot.com/2011/05/blog-post_30.html' title='பெருமையல்ல!'/><author><name>ஜென்ராம்</name><uri>http://www.blogger.com/profile/01132053348035137568</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12453184.post-2406613506117068934</id><published>2011-05-24T16:30:00.000+05:30</published><updated>2011-05-24T16:31:41.045+05:30</updated><title type='text'>தமிழகத்தின் இடிமுழக்கம் டெல்லியில் கேட்குமா?</title><content type='html'>ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றி தேசிய அரசியலில் எதிரொலிக்கும் என்று சென்னையில் குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி சொல்லி இருக்கிறார். ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற விழாவுக்கு வந்த போது அவர் அப்படிப் பேசி இருக்கிறார். சென்ற இதழுக்கு முந்தைய ரிப்போர்ட்டர் இதழில் ’எரிதழல்’ பகுதியில் நானும் அவர் இந்திய அரசியலில் ஆற்ற வேண்டிய பங்கு பற்றி குறிப்பிட்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதாவின் அரசியல் நடவடிக்கைகள் அந்தத் திசையில் இருக்குமா இருக்காதா என்பதை இப்போதே உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் காங்கிரஸ் அல்லாத பாஜக அல்லாத ஓர் அணியை இந்திய அளவில் அமைப்பதில் அவர் ஒரு குறிப்பிடத்தக்க பங்காற்ற முடியும். அது அவசியமா இல்லையா என்பதை அவர்தான் முடிவுசெய்து கொள்ள வேண்டும்!&lt;br /&gt;   &lt;br /&gt;‘தேசிய அரசியலில் ஜெயலலிதா மாற்றத்தை உருவாக்குவார்’ என்று நரேந்திரமோடி நம்புவது நான் சொல்லும் பொருளில் இருக்காது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்  ஜெயலலிதா இணைய வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருக்கலாம். இந்திய அரசியலில் ஒருவருக்கு ஒருவர் பக்கபலமாக இருக்க முடியும் என்று அவர் நினைக்கக் கூடும். அது நடக்கவில்லை என்றாலும் மோடிக்கு ஒன்றும் இழப்பு இல்லை. காங்கிரஸ் எதிர்ப்புக்கு ஒரு வலுவான முதலமைச்சர் தேசிய அளவில் கிடைத்திருக்கிறார் என்று அவர் மனநிறைவு அடையலாம். ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் ஜெயலலிதா எந்த உறவையும் வைத்துக் கொள்ள மாட்டார் என்று நரேந்திரமோடி உறுதியாக நம்புகிறாரா என்பது தெரியவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;அரசியல் என்பது என்ன? ஓர் எண்ணிக்கை விளையாட்டு. தங்களுடைய அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவோ, அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றவோ தேவையான எண்ணிக்கையை பெறுவதற்கு ஒரு கட்சி நடத்தும் ’சாகசங்களே’ இன்று அரசியல் என்று கொண்டாடப்படுகிறது. அடுத்த மக்களவைத் தேர்தலில் திமுகவால் தமக்கு பயன் இல்லை என்று சோனியா காந்தி நினைத்தால், அவர் என்ன செய்வார்? கருணாநிதியைக் கைகழுவி விட்டு ஜெயலலிதாவுடனோ, விஜயகாந்துடனோ கூட்டணி வைப்பதற்கு முயல்வார். வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு சோனியா காந்தி வாழ்த்துச் சொன்னதைக் கூட சாதாரண நடைமுறையாக நம்மவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்போதே ஜெயல்லிதாவுடனான உறவுகளைச் சீர்செய்ய முனைகிறார்களோ என்று அவர்களுக்கு சந்தேகம் வருகிறது. ஜெயலலிதாவின் பதவி ஏற்பு விழாவில் நரேந்திரமோடிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்ததால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜா மதவாதி ஆகிவிடுவாரா என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் எல்லோருக்கும் ஒரு செய்தியைத் தெளிவாக உணர்த்தி இருக்கிறது. தமிழகத்தை ஆள்வதற்கு  இப்போது மீண்டும் தி.மு.க.வுக்கு வாய்ப்பு கொடுக்க தமிழக மக்கள் மறுத்திருக்கிறார்கள். திமுக மோசமான தோல்வியைத் தழுவி இருக்கிறது. 1996 சட்டமன்றத் தேர்தலில் 4 இடங்களில் மட்டுமே வென்ற அண்ணா திமுக, 1998 மக்களவைத் தேர்தலில் 30 இடங்களை ஜெயித்தது என்பதை நாம் இங்கு நினைத்துப் பார்க்கலாம். சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்த 2009 மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியே அதிக இடங்களை வென்றது. இரண்டு வருடங்களில் நிலைமை தலைகீழாக மாறி விடவில்லையா? இந்த இடைப்பட்ட காலத்தில் மக்கள் மனதை மாற்றிக் கொள்ளும் அளவு அப்படி என்ன நடந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்தன என்ற அடிப்படையில் திமுகவின் ஆ.ராசா அமைச்சர் பதவியை இழந்தார்; கைது செய்யப்பட்டார். திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலய வளாகத்துக்குள் வந்து கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் சிபிஐ விசாரணை நடத்தியது. யாரிடம்? திமுக தலைவர் கருணாநிதியின் மனைவியிடமும் மகளிடமும் தான் அந்த விசாரணை நடத்தப்பட்டது. டெல்லியில் இருந்து சென்னைக்கு ஆ.ராசா வந்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பையும் அவர் பாதிக்கப்பட்டவர் என்ற உணர்வை ஏற்படுத்த எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;மக்களவைத் தேர்தலுக்கு முன்பே இலங்கையின் தமிழர் பகுதிகளில் அந்த நாட்டு அரசு வான் தாக்குதல்களை நடத்தியது. இந்திய அரசும் தமிழக அரசும் அந்தத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதனால் அந்தத் தேர்தலின்போது நெடுமாறன், சீமான் போன்றவர்கள் தீவிரமான பிரசாரத்தை காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு எதிராக மேற்கொண்டார்கள். இருந்தபோதிலும் திமுக கூட்டணியே அதிக இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் தேர்தல் முடிந்த ஒரு வாரத்துக்குள் இலங்கையில் மிகப் பெரிய தாக்குதல்கள் நடந்தன. இன்று பேசப்படும் அனைத்துவிதமான போர்க்குற்றங்களும் இலங்கை அரசால் இழைக்கப்பட்டன. தமிழர்களின் தேசிய விடுதலைக்காக அங்கு போராடிக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இந்தக் கொடுமையை இப்போது தமிழகத்தில் மக்களுக்கு நினைவூட்டினார்கள். மக்கள் திமுக காங்கிரஸ் கூட்டணியை படுதோல்விக்கு உள்ளாக்கினார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;வேறு எந்தவித மாற்றங்களும் இல்லாத சூழ்நிலையில், அடுத்த மக்களவைத் தேர்தல் 2014-ம் வருடம்தான் நடக்க இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலின்போது ஏற்பட்ட தோல்வியில் இருந்து எப்படி மீள்வது என்றும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் கூடுதல் இடங்களை எப்படி பிடிப்பது என்றும் காங்கிரஸ் தலைமை வியூகங்களை வகுக்கும். அந்த செயல்திட்டங்களுக்கு ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றவர்கள் உடன்பட்டுப் போவார்களா என்பதை இப்போதே கணிக்க முடியாது. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலோ அல்லது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலோ ஜெயலலிதா இடம் பெறவில்லை என்றால் அவர் முன் இருக்கும் அடுத்த தேர்வு என்ன? சந்திரபாபு நாயுடு மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் ஓர் அணிக்கு தலைமை ஏற்கலாம். அல்லது தமிழ்நாட்டில் ஒரு கூட்டணியை அமைத்து கணிசமான இடங்களைக் கைப்பற்றிய பிறகு, அப்போதைய முடிவுகள் உருவாக்கும் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு முடிவெடுக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு தவிர இப்போது நடந்த மற்ற மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் ஏதேனும் மாற்றத்தைக் கொண்டு வரும் வலிமை கொண்டவையா? புதுச்சேரியில் இருந்து ஒரே ஒரு மக்களவை உறுப்பினர்தான். அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் தனியாகவே வெற்றி பெற்றிருக்கிறது. மேற்குவங்கம், கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்திருக்கிறது. இடதுசாரிகள் ஆட்சியை இழந்திருக்கிறார்கள். காங்கிரஸ் அல்லாத பாஜக அல்லாத அணியை உருவாக்கும் வலிமை இப்போது இடதுசாரிகளுக்குக் குறைந்திருக்கிறது. வரும் மக்களவைத் தேர்தலில் அவர்களுடைய எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்குமா என்பதும் கேள்விக்குறியே!&lt;br /&gt;&lt;br /&gt;இதன் விளைவு என்ன? இந்தியா இரு கட்சி அரசியலுக்கு அல்லது இரு கூட்டணி அரசியலுக்கு மாறி வருகிறது என்று பல ஊடகங்களும் காங்கிரஸ், பாஜக ஆதரவாளர்களும் பேசத் தொடங்குவார்கள். மாயாவதி, முலாயம்சிங் யாதவ், நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ், சந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா, கருணாநிதி போன்ற வலிமையான மாநிலத் தலைவர்களை ஓரங்கட்ட இரு கட்சிகளும் முயலும். அல்லது அவர்களைத் தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு பங்காளிகளாக மாற்ற முயல்வார்கள். அந்த முயற்சிகள் வெற்றி பெற்றால் அது இந்தியாவின் பன்மைத் தன்மைக்கு நல்லதல்ல! &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12453184-2406613506117068934?l=stationbench.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://stationbench.blogspot.com/feeds/2406613506117068934/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12453184&amp;postID=2406613506117068934' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/2406613506117068934'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/2406613506117068934'/><link rel='alternate' type='text/html' href='http://stationbench.blogspot.com/2011/05/blog-post_24.html' title='தமிழகத்தின் இடிமுழக்கம் டெல்லியில் கேட்குமா?'/><author><name>ஜென்ராம்</name><uri>http://www.blogger.com/profile/01132053348035137568</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12453184.post-6264984065788484635</id><published>2011-05-23T12:26:00.001+05:30</published><updated>2011-05-23T12:27:58.140+05:30</updated><title type='text'>புன்னகை இழந்த புத்ததேவ்</title><content type='html'>இதுவரை ஒரு தேர்தல் வெற்றியை ஊடகங்கள் இந்த அளவு கொண்டாடி இருக்குமா என்பது சந்தேகம்தான். மமதா பானர்ஜியின் தேர்தல் வெற்றியை இந்திய ஊடகங்கள் அவ்வளவு சந்தோஷமாகக்  கொண்டாடுகின்றன. இரண்டாவது சுதந்திர தினம் என்று தேர்தல் முடிவுகள் வந்த நாளை வர்ணிக்கின்றன. மமதாவும் அப்படியே சொல்கிறார். நெருக்கடி நிலைக்கு எதிராக நடந்த போராட்டத்தை சிலர் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்றார்கள்; வேறு சிலர் பாஜகவின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சியை இழந்த போது மிகப் பெரிய நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனால், மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி பெற்றிருக்கும் மாபெரும் வெற்றியை அனைத்து தரப்பினரும் கொண்டாடுகிறார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;மமதாவின் கொள்கைகள் மீது ஊடகங்களுக்கு அப்படி என்ன ஒரு பிடிப்பு என்ற கேள்வி உங்களுக்குள் எழக் கூடும். மமதாவுக்குக் கொள்கை என்று ஒன்று இருக்கிறதா என்றும் உங்களில் சிலர் கேட்கக் கூடும்.  அவருக்குத் தனியாக கொள்கை இருந்தாலும் சரி, அந்தக் கொள்கை ஊடகங்களுக்கு உடன்பாடானதாக இல்லாமல் இருந்தாலும் சரி, ஊடகங்கள் இப்போது அவரைக் கொண்டாடுகின்றன. அந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் மமதா வெற்றி பெற்றதற்கான நேர்மறை உணர்வாகத் தெரியவில்லை. முப்பத்து நான்கு வருடங்கள் நடந்த இடது முன்னணி ஆட்சிக்கு மேற்கு வங்க மக்கள் விடை கொடுத்திருக்கிறார்கள் என்பதே அந்த மகிழ்ச்சிக்கு காரணம்!&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கு வங்கத்தில் இடது முன்னணியும் கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணியும் ஆட்சியை இழந்திருக்கின்றன. கேரளத்தில் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இப்படித்தான் நடக்கிறது என்று அரசியல் வல்லுநர்கள் சாதாரணமாக விட்டு விடுகிறார்கள். ஆனால் 34 வருடங்களாகத் தொடர்ந்து ஆட்சியில் இருந்த மாநிலத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தலைமையில் இயங்கும் இடது முன்னணியும் எப்படி இழந்தது? புத்ததேவ் பட்டாச்சார்யா அவருடைய தொகுதியிலேயே தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய அமைச்சரவை சகாக்களும் மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசியல் களத்திலும் சமூகத் தளத்திலும் வேலை செய்த ஒரு கட்சிக்கு மக்கள் இப்படி ஒரு தீர்ப்பைக் கொடுப்பார்கள் என்று அந்தக் கட்சி எதிர்பார்த்திருக்காது! &lt;br /&gt;&lt;br /&gt;இதனால் அந்தக் கட்சிக்கு அங்கு முடிவுரை எழுதப்பட்டு விட்டது என்று எடுத்துக் கொள்ள முடியுமா? ஏழு சட்டமன்ற பொதுத் தேர்தல்களில் ஒரு கட்சி வெற்றி பெறுவது என்பது ஒரு சாதாரணமான விஷயமா? இப்படி ஒரு சாதனையை வேறு ஏதேனும் ஓர் அரசியல் கட்சி எந்த மாநிலத்திலாவது செய்து காட்டி இருக்கிறதா? இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்திய காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக எத்தனை வருடங்கள் மத்தியில் ஆட்சி நடத்தியது? 1952-ல் நடந்த முதல் தேர்தலில் இருந்து ஐந்து தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 1977-ல் நடந்த தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. மூன்று வருடங்களில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது என்பது வேறு கதை! &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எல்லாம் பேசுவதால் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் தோல்விக்காக நான் வருந்துவதாக நீங்கள் நினைத்துவிடாதீர்கள். சிங்கூர், நந்திகிராம் போன்ற பிரச்னைகள் தீவிரமாவதற்கு முன்பே புத்ததேவ் பட்டாச்சார்யாவின் ஆட்சி, அந்தக் கட்சியின் கொள்கையில் இருந்து வழிதவறி நடக்கத் தொடங்கியது என்பதைச் சுட்டிக் காட்டி நான் எழுதி இருக்கிறேன். ஆட்சிக்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி நடந்த விழாவில் முதன்மை விருந்தினர் யார் தெரியுமா? முகேஷ் அம்பானி! டால்மியாவுக்கு எதிராக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரை மேற்கு வங்க கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவிக்கு புத்ததேவ் நிறுத்தினார். தேவையே இல்லாமல் அவருடைய ‘கௌரவப் பிரச்னையாக’ அந்தத் தேர்தலைக் கருதினார். மார்க்சிஸ்ட் கட்சியிலேயே கூட பலர் முதலமைச்சருடைய அந்த நிலையை ஆதரிக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;2006-ல் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்குக் கிடைத்த வெற்றி சாதாரணமானது அல்ல! 294 தொகுதிகளில் 235 தொகுதிகளை இடது முன்னணி வென்றது. “பழைய கெட்டிதட்டிப் போன இறுக்கமான கொள்கைகளை இன்னும் கம்யூனிஸ்டுகள் பேசிக் கொண்டிருக்க முடியாது. உலகம் மாறிக் கொண்டிருக்கிறது; நாம் சீர்திருத்தங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்; இல்லையென்றால் நாம் அழிந்து போக நேரிடும்” என்பதே அந்த வெற்றிக்குப் பின் அவர் பேசிய வார்த்தைகள். இந்தியாவின் பிரபலமான தொழிலதிபர்கள் பலர் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். சந்தைப் பொருளாதாரத்துக்கும் மார்க்சீயத்துக்கும் இடையில் அவர் ஒரு பாலமாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை அவருக்குள் உருவானது. ஜோதிபாசுவை விட மாபெரும் வெற்றியை அவர் கட்சிக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறார் என்று கூட யாரேனும் அவரைப் புகழ்ந்திருக்கக் கூடும்!&lt;br /&gt;&lt;br /&gt;“பொது வேலை நிறுத்தங்களுக்கு நான் எதிரானவன். துரதிர்ஷ்டவசமாக நிறைய பொது வேலைநிறுத்தங்களை நடத்தும் கட்சியில் நான் உறுப்பினராக இருக்கிறேன். இனி இதையெல்லாம் நான் அனுமதிக்கப் போவதில்லை” என்று கூட அவர் பேசினார். மேற்கு வங்க மக்களும் கட்சியினரும் இது போன்ற அவருடைய பல பேச்சுக்களில் அதிர்ச்சி அடைந்தார்கள். ஊடகங்களும் தொழிலதிபர்களும் அப்போது அவரைப் போற்றிப் புகழ்ந்தார்கள். சிங்கூரிலும் நந்திகிராமிலும் தொழிலதிபர்களின் நலனைக் காக்க மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் மக்களிடம் இருந்து கட்சியை தனிமைப்படுத்தியது. தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கான எச்சரிக்கைகளை பலர் பலவிதமாக முன்வைத்த போதும் மாநில அரசு அவற்றைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவர்கள் தவறுகளைச் சரிசெய்ய முற்படும்போது காலம் கடந்து போய்விட்டது!  &lt;br /&gt;     &lt;br /&gt;சிங்கூரில் டாடா குழுமத்துடன் மேற்குவங்க அரசு மிக நெருக்கமான உறவை வைத்திருந்த போது, அதே மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள அரசு என்ன செய்தது? மூணாறில் டாடா குழுமம் செய்திருந்த ஆக்கிரமிப்புகளை இடித்துத் தரை மட்டமாக்கியது. ஆனால் அந்த மாநில அரசை சுதந்திரமாக செயல்பட விடாமல் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு கட்சிக்குள் பல நெருக்கடிகள். இருந்தும் அவர் வெற்றியை மயிரிழையில் தான் தவற விட்டிருக்கிறார். ஆட்சியை இழந்தாலும், வயது முதிர்ந்தாலும் மக்களுக்கான போராட்டங்களில் உடனடியாக தன்னை ஈடுபடுத்திக் கொள்பவராகவே அச்சுதானந்தன் அறியப்படுகிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் நிலை அப்படி இல்லை. தனிப்பட்ட முறையில் மிகவும் நேர்மையான மனிதராக அவர் அறியப்பட்டாலும் கொள்கை சார்ந்த குழப்பங்களால் மக்களிடம் இருந்து விலகிப் போயிருக்கிறார். வேட்புமனுவின் போது அவர் தாக்கல் செய்திருக்கும் சொத்து விபரங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. அவருக்கு என்று சொந்தமாக ஒரு வீடு இல்லை; கார் இல்லை; முதலீடுகள் இல்லை; மொத்தமே ஐயாயிரம் ரூபாய் தான் அவருடைய உடமை என்கிறது அந்த பிரமாண பத்திரம். அவருடைய மனைவி ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறார். அவரே குடும்பத்தை நிர்வகித்துக் கொள்கிறார்! &lt;br /&gt;மக்களிடம் செல்வாக்கைப் பெறுவதற்கு தனிப்பட்ட நேர்மை மட்டும் போதாது; மக்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று மேற்கு வங்க மக்கள் புத்த்தேவ் பட்டாச்சார்யாவுக்கு உணர்த்தி இருக்கிறார்கள். இதில் இருந்து நேர்மையாளர் மன்மோகன்சிங் பாடம் கற்றுக் கொள்ளலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12453184-6264984065788484635?l=stationbench.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://stationbench.blogspot.com/feeds/6264984065788484635/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12453184&amp;postID=6264984065788484635' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/6264984065788484635'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/6264984065788484635'/><link rel='alternate' type='text/html' href='http://stationbench.blogspot.com/2011/05/blog-post_23.html' title='புன்னகை இழந்த புத்ததேவ்'/><author><name>ஜென்ராம்</name><uri>http://www.blogger.com/profile/01132053348035137568</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12453184.post-4089937110575139769</id><published>2011-05-18T15:30:00.000+05:30</published><updated>2011-05-18T15:32:33.407+05:30</updated><title type='text'>இறுதி வெற்றி மக்களுக்கே!</title><content type='html'>“இந்த வெற்றி எங்களுக்குக் கிடைத்த வெற்றி அல்ல; தமிழக மக்களுக்குக் கிடைத்த வெற்றி” என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா சொல்லி இருக்கிறார். ‘பதவி வரும்போது பணிவும் வர வேண்டும்’ என்ற எம்.ஜி.ஆர். பாடலுக்குத் தகுந்தபடி பணிவாகவும் தன்னடக்கத்துடனும் அவர் அப்படி சொன்னாரா என்று தெரியவில்லை. ஆனால் உண்மையிலேயே தமிழக மக்கள் தங்களுடைய விருப்பத்தை சுதந்திரமாகவும் ஆவேசத்துடனும் நிறைவேற்றி இருக்கிறார்கள் என்பது 2011 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. அதனால் இந்த வெற்றி தமிழக மக்களின் வெற்றிதான் என்பதில் சந்தேகம் இல்லை!&lt;br /&gt; &lt;br /&gt;தமிழ்நாடு மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு வாக்களித்து இருக்கிறார்கள். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கூட்டணி பெரும்பான்மையைக் கைப்பற்றி இருக்கிறது. கேரளத்தில் மிகக் குறைவான இடங்கள் வித்தியாசத்தில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சியை இழந்திருக்கிறது. இடது ஜனநாயக முன்னணிக்கு 68 இடங்களும் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 72 இடங்களும் கிடைத்திருக்கின்றன. இரண்டு இடங்கள் மாறி இருந்தால், இரு அணிகளுக்கும் சமமான இடங்கள் கிடைத்திருக்கும். சுவாரஸ்யமான பல காட்சிகள் அரங்கேறி இருக்கும். ஆனால் அப்படி ஒரு நிலையை கேரள மக்கள் உருவாக்கவில்லை. அசாம் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மேற்கு வங்கத்தில் 34 வருட இடது முன்னணி ஆட்சிக்கு அந்த மாநில மக்கள் ஓய்வு கொடுத்திருக்கிறார்கள். 1977 முதல் 2000 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜோதிபாசுவும் அதன் பிறகு இந்த தேர்தல் வரை புத்ததேவ் பட்டாச்சார்யாவும் அங்கு முதலமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். குஜராத்திலும் பீகாரிலும் ‘வளர்ச்சி’ என்று ஊடகங்களும் ஆட்சியாளர்களும் சித்தரிக்கும் வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த இடது முன்னணி முயன்றது. ஆனால் மேற்கு வங்க மக்களுக்கு இடதுசாரிகள் கடந்த காலத்தில் கற்றுக் கொடுத்திருந்த அரசியல் பாடம், அவர்களுடைய முயற்சிக்குத் தடை போட்டது. தடைகளைத் தகர்க்க அரசு அடக்குமுறையை ஏவியது. மக்கள் அரசுக்கு எதிராக அணி திரண்டார்கள். தேர்தல் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி இடது முன்னணி அரசுக்கு மக்கள் ‘ஓய்வு’ கொடுத்தார்கள்! &lt;br /&gt;&lt;br /&gt;தமக்கு நல்ல ஓய்வை அளித்ததற்காக திமுக தலைவர் கருணாநிதியும் தமிழக மக்களுக்கு  நன்றி தெரிவித்து இருக்கிறார்! ஆனால் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஓய்வு அவர் விரும்பி ஏற்றுக் கொண்ட ‘விருப்ப ஓய்வு’ அல்ல. ஆற்காடு வீராசாமிக்கும் கோ.சி.மணிக்கும் திமுக கொடுத்த இயல்பான பணி ஓய்வும் அல்ல. இது தமிழக மக்கள் திமுகவுக்கும் கருணாநிதிக்கும் கொடுத்த ‘கட்டாய ஓய்வு!’ சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட கஷ்டப்பட வேண்டாம் என்று அவர்கள் அந்த பணிச்சுமையை விஜயகாந்த் தலையில் சுமத்தி இருக்கிறார்கள்! திருவாரூர் சட்டமன்றத் தொகுதி மக்கள் அவருக்குக் கொடுத்திருக்கும் பணியைச் செய்வதில் அவருக்கு எந்த சிரமமும் இருக்கப் போவதில்லை. &lt;br /&gt;ஏராளமான மாநிலக் கடன் சுமையும் தேர்தலில் வாக்குறுதிகளாக மக்களிடம் சொன்னதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்புச் சுமையும் இப்போது ஜெயலலிதாவின் தோள்களில் ஏறியிருப்பதாக ஜெயலலிதா  சொல்கிறார். இருந்தும் தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாக அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார்! ஒளிமயமான எதிர்காலத்தை தமிழக மக்களுக்கு அவரால் வழங்க முடியுமா? அல்லது அவரிடம் இருந்து தமிழக மக்கள் அதை எதிர்பார்க்கிறார்களா? அதெல்லாம் விவாதத்துக்குரிய வேறு விஷயங்கள்! &lt;br /&gt;&lt;br /&gt;குறைந்தபட்சம் அவர்கள் ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். தடையில்லா மின்சாரம் மூலமாக வீடுகளில் தமிழக அரசு ‘ஒளியை’ வழங்கினாலே போதுமானது! ஐந்தாண்டு கால திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியதில் மின்சாரப் பற்றாக்குறை ஒரு முக்கியமான காரணம் என்பதை அவர் அறிவார். ‘இந்த ஆட்சி ஒருவேளை போனால், அதற்கு மின்வெட்டு காரணமாக இருந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்’ என்று பல மாதங்களுக்கு முன்பாகவே அப்போதைய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியது உங்களுக்கு நினைவிருக்கலாம்!   &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசு செய்த போர்க்குற்றங்களுக்கு சர்வதேச நீதிமன்றத்தின் முன் இலங்கை அதிபர் ராஜபக்சே நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய அரசிடம் வலியுறுத்துவேன் என்று ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களுக்கு வாக்களித்திருக்கிறார். அனைத்துக் கட்சிக் கூட்டம், தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம், அதைச் செயல்படுத்தும்படி மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் என்று அடுத்தடுத்து ஜெயலலிதா செயலில் இறங்க வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் நடைமுறை தொடர்பாக பழ.நெடுமாறன், வைகோ, தமிழருவி மணியன், சீமான் போன்றவர்களையும் உள்ளடக்கிய ஓர் ஆலோசனைக் குழுவை தமிழக அரசு உருவாக்கினால் நல்லது!&lt;br /&gt; &lt;br /&gt;ஆட்சிக்கு வந்ததும் கட்சியிடம் இருந்து சில தலைவர்கள் தனிமைப்பட்டு விடுகிறார்கள்; அதிகாரிகளின் ஆலோசனைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளும் நிர்வாகிகளாக மாறிவிடுகிறார்கள். நிர்வாகத்தில் அரசியல்வாதிகளின் குறுக்கீடு கூடாது என்ற பார்வையையும் முற்றிலும் ஒதுக்கிவிட முடியாது. ஆனால் அனைத்து முடிவுகளும் நிர்வாகரீதியான முடிவுகளாக இருக்க முடியாது. அரசியல்ரீதியாக எடுக்கப்பட வேண்டிய  முடிவுகளுக்கு அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்களைக் கலந்து ஆலோசிக்க வேண்டியது அவசியமாகிறது. அதனால் அப்படிப்பட்டவர்களை ஏதாவது ஒரு வகையில் ஆலோசனை வட்டத்துக்குள் சேர்த்துக் கொள்வது அரசுக்கு உதவியாக இருக்கும்! &lt;br /&gt;&lt;br /&gt;அரசியல்ரீதியாக, காங்கிரஸ் கட்சிக்கும் பாரதிய ஜனதாவுக்கும் மாற்றாக ஒரு தேசிய அரசியல் அணிக்கான தேவை இன்னும் இந்திய அளவில் இருக்கிறது. மேற்குவங்கத்திலும் கேரளத்திலும் இடதுசாரிகள் ஆட்சியை இழந்திருக்கிறார்கள். மாயாவதி, முலாயம்சிங் போன்றவர்கள் ஒரு தெளிவான அரசியல்நிலையை எடுக்க மறுப்பவர்களாகவே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அரசியல் சூழலில், காங்கிரஸ் அல்லாத, பாரதிய ஜனதா இல்லாத ஓர் அணியை உருவாக்குவதிலும் அதற்குத் தலைமை தாங்குவதிலும் ஜெயலலிதா முக்கியமான பங்காற்ற வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து திமுகவை வெளியேற்றிவிட்டு, அந்த இடத்தை அதிமுக பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை ஜெயலலிதாவுக்கு வந்து விடக் கூடாது! &lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அரசுடன் சுமுகமான உறவுகளை வளர்த்துக் கொண்டே மாநிலத்தின் உரிமைகளுக்காக போராடும் ஓர் அணிக்கான தலைமையை தமிழகம் ஏற்க வேண்டும். மற்ற மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் சேர்ந்து ஓர் ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்க தமிழக முதல்வர் முயல வேண்டும். காலம் சிலருக்கு சரியான சமயத்தில் கதவுகளைத் திறக்கிறது. அப்படி ஒரு வாய்ப்பை ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் கொடுத்திருக்கிறார்கள். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அரசியல் சரிவுகளுக்கு இடம் கொடுக்காத  வெளிப்படையான நிர்வாகத்தை அவர் அளிக்க வேண்டும். இதன் மூலம் வாக்களித்த தமிழக மக்களுடைய எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற முடியும். இந்திய அரசியலிலும் முக்கியமான இடத்தை அவர் பிடிக்க முடியும்!&lt;br /&gt;  &lt;br /&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12453184-4089937110575139769?l=stationbench.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://stationbench.blogspot.com/feeds/4089937110575139769/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12453184&amp;postID=4089937110575139769' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/4089937110575139769'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/4089937110575139769'/><link rel='alternate' type='text/html' href='http://stationbench.blogspot.com/2011/05/blog-post_1601.html' title='இறுதி வெற்றி மக்களுக்கே!'/><author><name>ஜென்ராம்</name><uri>http://www.blogger.com/profile/01132053348035137568</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12453184.post-2203356354893971425</id><published>2011-05-18T15:28:00.000+05:30</published><updated>2011-05-18T15:30:36.893+05:30</updated><title type='text'>புதைந்து போகும் உண்மை</title><content type='html'>யமுனா எக்ஸ்பிரஸ்வே என்று அழைக்கப்படும் யமுனா விரைவுச்சாலையை அமைப்பதற்காக உத்தரப்பிரதேச அரசு விவசாயிகளிடம் இருந்து நிலத்தைக் கையகப்படுத்துகிறது. பறிகொடுத்த நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை நடந்திருக்கிறது. இரண்டு காவலர்களும் இரண்டு விவசாயிகளும் அந்த வன்செயல்களில் கொல்லப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து வந்த நாட்களில் மத்திய அரசும் எதிர்க்கட்சிகளும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டிய அவசியம் குறித்துப் பேசின. புதிய சட்டத் திருத்தம் வர இருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அரசு உறுதியாக சொல்கிறது. அந்த சட்டத் திருத்தம் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்பதாக இருக்குமா என்பது விவாதத்துக்குரிய வேறு விஷயம்! &lt;br /&gt;&lt;br /&gt;நோய்டா மாநகரம், அலிகார், ஆக்ரா பகுதியில் இருக்கும் விவசாயிகள் தங்களுடைய நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டுப் போராடுவதும் அந்தப் போராட்டத்தில் வன்முறை வெடிப்பதும் இது முதல் முறை அல்ல. ஏற்கனவே இதைப் போலவே தீவிரமான போராட்டங்களைக் கடந்த சில வருடங்களில் அவர்கள் நடத்தி இருக்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் 2008-இல் விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் ஏற்பட்ட மோதலிலும் 4 பேர் கொல்லப்பட்டார்கள். அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த 66 பேரைக் காணவில்லை என்ற செய்தியும் உண்டு.  கடந்த மே 2010, பிப்ரவரி 2011 ஆகிய மாதங்களில் அவர்கள் அரசின் கவனத்தை தங்களுடைய கோரிக்கைகளை நோக்கி ஈர்ப்பதற்கான போராட்டங்களை அவர்கள் நடத்தினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் தவிர விவசாயிகள் அல்லது நிலத்தை அரசுக்குக் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கும் பொதுமக்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் போராடிக் கொண்டிருக்கவில்லை. கடந்த 2006-ஆம் வருடம் ஒரிசாவில் கலிங்காநகரில் நடந்த போராட்டத்தில் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்கள். மேற்குவங்கத்தில் சிங்கூர், நந்திகிராம் பகுதிகளில் மக்கள் நடத்திய போராட்டங்களும் அவற்றை ஒடுக்க மாநில அரசு எடுத்த நடவடிக்கைகளும் தான் இப்போது அந்த அரசையே ஆட்டம் காண வைத்திருக்கின்றன. ஹரியானா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் என்று பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன; நடந்து கொண்டிருக்கின்றன.  ஆனால் அரசு இந்தப் போராட்டங்களை முறையாக எதிர்கொண்டதாகத் தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;மக்களுடைய போராட்டங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியதும் அரசியல் கட்சிகள் அவற்றில் குளிர்காயத் தொடங்கி விடுகின்றன. மேற்குவங்கத்தில் நடந்த போராட்டங்களின் அரசியல் ஆதாயத்தை மமதா பானர்ஜி அறுவடை செய்கிறார். மகாராஷ்டிரப் போராட்டங்களை சிவசேனை தனக்கு ஆதரவாக வளைக்க முயல்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் காங்கிரஸ் ‘பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்’ என்ற நிலையை எடுக்கிறது. ஆட்சிக்கு எதிராக எழுந்து நிற்கும் மக்கள்சக்தியை காங்கிரஸ் ஆதரவாக மடைமாற்றுவதற்கு அது முயல்கிறது. தாங்கள் முன்வைத்த ‘வளர்ச்சி’ குறித்த கொள்கையும் நடைமுறையுமே இந்த முரண்பாட்டைத் தோற்றுவித்திருக்கிறது என்பது தெரிந்தாலும் அந்த இடத்தில் மௌனமாக இருக்கிறது. ஆட்சிகள் மாறினாலும் மக்களுடைய பிரச்னைகள் மட்டும் தீர்க்கப்படுவதில்லை!&lt;br /&gt; &lt;br /&gt;இப்போது உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் போராட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த யமுனா விரைவுச்சாலைத் திட்டத்திற்கா ஏற்கனவே பல இடங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுவிட்டன. நோய்டா மாநகரப்பகுதியில் ஒரு சதுர மீட்டர் நிலத்துக்கு 6000 ரூபாய் நஷ்ட ஈடாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அலிகார், ஆக்ரா பகுதிகளில் 400 அல்லது 600 ரூபாய் அளிக்கப்படுகிறது. நிலத்தின் மதிப்பு நகரத்துக்கு நகரம் வேறுபடுகிறது என்பது உண்மைதான். ஆனால் நிலத்துக்கான சந்தைவிலை என்று அரசு சொல்வது பதிவாளர் அலுவலக மதிப்பீடுகளை வைத்துத்தானே? நிலம் வாங்குவதிலும் விற்பதிலும் கருப்புப் பணம் இல்லாமல் கைமாறும் பணத்துக்கு பத்திரம் வாங்குபவர்கள் எத்தனை பேர்? அப்படி என்றால் அரசு போடும் மதிப்பீடு எப்படி உண்மையான சந்தை நிலையை பிரதிபலிக்கும்? தங்களுடைய வாழ்நாள் சேமிப்பான நிலத்தையும் அரசாங்கத்திடம் இழந்துவிட்டு அதற்குரிய இழப்பீட்டையும் பெற முடியாத ஏழை எளிய மக்களுடைய வாழ்க்கை என்ன ஆகிறது?&lt;br /&gt;&lt;br /&gt; மேற்குவங்கத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 45 சதவீத மக்கள் வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள். 50 சதவீத மக்கள் வறுமையில் துன்பப்படுகிறார்கள். குடும்பத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக கிராமங்களில் குழந்தைகள் படிப்பை பாதியில் விட்டுவிட்டு சின்னச் சின்ன வேலைகளுக்குப் போகிறார்கள். வயிற்றுப்பாட்டுக்கு வேறு வழியே இல்லாத நிலையில் சில பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்பதாக அந்த ஆய்வு சொல்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நெடுஞ்சாலைகள் போட வேண்டிய அவசியம் அரசுக்கு இருக்கிறது. ரயில் போக்குவரத்துக்காக இருப்புப் பாதை அமைக்க வேண்டியிருக்கிறது. இதற்காக மக்களிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்த வேண்டியதாகிறது. அப்படித் தேவையான நிலங்களை அரசு கையகப்படுத்தும் அதிகாரத்தை காலனிய பிரிட்டன் அரசுக்கு நில கையகப்படுத்தும் சட்டம், 1894 கொடுத்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு அதில் எப்போது மாற்றம் வந்தது? 1984-ம் வருடம் அந்த சட்டம் திருத்தப்பட்டது. அரசின் திட்டங்களுக்காக மட்டுமல்லாமல், தனியார் தொழில் நிறுவனங்களின் தொழில் திட்டங்களுக்காகவும் மக்களிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தும் உரிமை அரசுக்கு வந்தது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாகத் தொடங்கின. &lt;br /&gt;&lt;br /&gt;சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இந்தியாவில் வேலை வாய்ப்புகளை பெருமளவில் உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கை நமக்குள் விதைக்கப்பட்டது. ஆனால் இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் அளவும், இந்த மண்டலங்கள் உருவாக்கிய வேலை வாய்ப்பு எண்ணிக்கையும் ஒப்பிட்டுப் பார்த்தால் கவலையே மேலோங்குகிறது.  இதுவரை 40 லட்சம் ஏக்கர் நிலம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக கையகப்படுத்தப்பட்டிருக்கிறதாம்! ஆனால் அது உற்பத்தி செய்திருக்கும் வேலை வாய்ப்புகள் வெறும் ஐந்து லட்சம்தான்  என்கிறது அந்த செய்தி. &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு தகவல் இன்னும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இந்திய விடுதலைக்குப் பிறகு கடந்த 2000-ம் வருடம் வரையிலான ஐம்பத்து மூன்று வருடங்களில் அரசுத் திட்டங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களில் 20 சதவீத மக்களுக்குக் கூட முறையான மறு குடியமர்த்தலோ மறுவாழ்வுத் திட்டங்களோ கிடைக்கவில்லை என்பதே அந்தத் தகவல். இவை எல்லாம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இப்படிப்பட்ட வளர்ச்சியையா நாம் விரும்புகிறோம் என்ற வேதனை எழுவதைத் தடுக்க இயலவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த காலத்தில் நடந்திருப்பது என்ன என்பதில் இருந்து நிகழ்கால போராட்டங்களின் தீவிரத்தை அறிந்து கொள்ளும்போது ஒருவருக்கு புதிய வெளிச்சம் கிடைக்கிறது. ஆனால் பெரும்பாலான ஊடகங்கள் இந்த பின்னணி குறித்துப் பேசுவதில்லை. போராட்டங்களில் நடந்த வன்முறை பற்றியே அதிகம் பேசுகின்றன. போராட்டங்களில் வன்முறை வெடிக்கும்போது அதில் முதலில் பலியாவது உண்மையே!&lt;br /&gt;  &lt;br /&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12453184-2203356354893971425?l=stationbench.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://stationbench.blogspot.com/feeds/2203356354893971425/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12453184&amp;postID=2203356354893971425' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/2203356354893971425'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/2203356354893971425'/><link rel='alternate' type='text/html' href='http://stationbench.blogspot.com/2011/05/blog-post_18.html' title='புதைந்து போகும் உண்மை'/><author><name>ஜென்ராம்</name><uri>http://www.blogger.com/profile/01132053348035137568</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12453184.post-9211242461612411106</id><published>2011-05-12T13:42:00.000+05:30</published><updated>2011-05-14T02:05:50.791+05:30</updated><title type='text'>பொய் சொன்னாலும் நீயே ...........</title><content type='html'>‘உலகத்திலேயே மிகவும் மோசமான பயங்கரவாதி’ என்று அமெரிக்காவால் சித்தரிக்கப்பட்டவர் ஒசாமா பின்லேடன்; அவர் இப்போது உயிருடன் இல்லை. அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த சிறப்பு அதிரடிப் படை அவரைக் கொன்றுவிட்டது. பாகிஸ்தான் நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு அருகில் ஒரு பிரமாண்டமான பங்களாவில் அவர் தங்கி இருந்தார். அங்கு அதிரடியாக உள்ளே நுழைந்த அதிரடிப்படை அங்கு நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவரைக் கொன்று விட்டது. இதுவே ஊடகங்களும் அமெரிக்க அதிபரும் நமக்கு தந்த செய்தி. &lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத் திரைப்படங்களுக்கு இணையாக பரபரப்பான காட்சி அமைப்புகளுடன் ‘ஒசாமா வதைப் படலம்’ சித்தரிக்கப்பட்டது. ஆனால் அடுத்த இரண்டு நாட்களுக்குள் புதிய காட்சிகளை அமெரிக்க அரசு சார்பில் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நாட்டு மக்களுக்கான உரையில் சொல்லப்பட்ட திரைக்கதையின் முக்கிய காட்சிகளைக் கூட மாற்றும் அதிகாரம் அங்குள்ள அதிகாரிகளுக்கு இருக்கிறது போலிருக்கிறது. ஆனால் மாறாத செய்தி ஒன்று இருக்கிறது. ஒசாமா பின்லேடன் இப்போது உயிருடன் இல்லை என்பதே அது!&lt;br /&gt; &lt;br /&gt;இந்திய விடுதலைக்காகப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எப்படி இறந்தார் என்பது சர்ச்சைக்குரிய செய்தியாகவே பல காலம் இருந்தது. அந்த ஒரு சர்ச்சையை வைத்துக் கொண்டு,  போராளிகளின் சாவுகள் மட்டுமே சர்ச்சைகளை உருவாக்குகின்றன என்று சொல்லி விட முடியாது.  பேரினவாத அடிப்படையிலான அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்ட இலங்கை அரசுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் போராடினார்கள். அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன், இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதாக உயிரற்ற ஓர் உடலைக் காட்டினார்கள். அடுத்த சில நாட்களுக்கு ஏராளமான கதைகள் உலா வந்தன!&lt;br /&gt;தமிழ்நாடு அதிரடிப்படையின் கைகளில் சிக்காமல் நீண்டநாட்களாக இருந்த வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் சர்ச்சைகள் கிளம்பின. மோரில் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட வீரப்பனின் உடலை ஒரு வேனில் வைத்து பிறகு துப்பாக்கிச் சூடு நடத்தி ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டதாக அப்போது சொன்னவர்கள் உண்டு. பேட்டை ரவுடிகள், கட்டப் பஞ்சாயத்து தாதாக்கள் சிலர் ‘என்கவுண்டரில்’ கொல்லப்படும் போதும் சர்ச்சைகள் எழுகின்றன. ஏன்? அரசுத் தரப்பு சொல்லும் கதைகளில் ஓட்டைகளும் முரண்பாடுகளும் இருக்கின்றன! &lt;br /&gt;&lt;br /&gt;“உண்மை வீட்டை விட்டு கிளம்புவதற்குள் பாதி உலகத்தைப் பொய் சுற்றி வந்து விடுகிறது” என்று சொல்வார்கள். ஒசாமா பின்லேடனின் இப்போதைய மரணச் செய்தியையும் ‘அப்பட்டமான பொய்’ என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று சிலர் சொல்வதைப் போல, ஒசாமா இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று இவர்கள் சொல்லவில்லை. மாறாக, கடந்த 2001-ம் ஆண்டே சிறுநீரகம் செயல் இழந்து போனதால் அவர் இறந்து போய்விட்டார் என்பது அவர்களுடைய கருத்து. டேவிட் ரே க்ரிஃபின் என்பவர் எழுதிய ‘ஒசாமா பின்லேடன்: டெட் ஆர் அலைவ்’ என்ற நூலை ஆதாரமாகச் சொல்கிறார்கள். அவர் முன்வைக்கும் ஆதாரங்கள் என்னென்ன? &lt;br /&gt;&lt;br /&gt;2001-ம் வருடம் டிசம்பர் மாதம் 13-ம் தேதியில் இருந்து ஒசாமாவின் தகவல்கள் அமெரிக்க உளவுத் துறையால் இடைமறித்துக் கேட்கப்படவில்லை. அதே ஆண்டு டிசம்பர் 26-ம் நாள் பாகிஸ்தானின் ஒரு பிரபல செய்தித்தாளில் ஒரு செய்தி வந்தது. பாகிஸ்தானில் இருக்கும் தலிபான் பயங்கரவாதிகளில் முக்கியமான ஒருவர், ‘ஒசாமா பின்லேடனின் இறுதிச் சடங்குகளில்’ தான் பங்கேற்றதாகத் தெரிவித்து இருந்தார். மிகவும் மோசமாக சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 2001, செப்டம்பர் மாதத்தில் ராவல்பிண்டி மருத்துவமனையில் ஒசாமா அனுமதிக்கப்பட்டிருந்ததாக  சிபிஎஸ் நியூஸ் சொன்னது. ஜூலை, 2001 –இல் துபாயில் ஒரு மருத்துவமனையில் ஒசாமா சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் அப்போது அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவின் அதிகாரி அவரை அங்கு சந்தித்ததாகவும்  ஒரு தகவல் சொல்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;2002, ஜூலை மாதத்தில் சி.என்.என் ஒரு செய்தி வெளியிட்டது. அந்த வருடம் பிப்ரவரி மாதத்திலேயே ஒசாமா பின்லேடனின் மெய்க்காவலர்கள் பிடிபட்டார்கள் என்கிறது அந்த செய்தி. அதற்கு என்ன அர்த்தம் என்றும் அந்த செய்தி அறிக்கை விளக்கியது. ‘பின்லேடனின் மெய்க்காவலர்கள் தனியாகப் பிடிபடுகிறார்கள் என்றால், அந்தக் காவலர்கள் யாருடைய பாதுகாவலர்களாக இருந்தார்களோ, அந்த முக்கியமான நபர் உயிருடன் இல்லை என்று பொருள்’ என்பதே அந்த விளக்கம்! அத்துடன் அவருடைய ஆதாரங்கள் நிற்கவில்லை. பாகிஸ்தான் அதிபராக அப்போது இருந்த பர்வேஸ் முஷாரப், ஆப்கானிஸ்தான் அதிபர் கர்ஸாய், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான எஃப். பி.ஐ.யின் பயங்கரவாத தடுப்புப் பிரிவுத் தலைவர் டேல் வாட்சன் உள்ளிட்ட பலர் பின்லேடன் உயிரோடு இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.  அவ்வப்போது பின்லேடன் பேசியதாக வெளியான டேப்கள் உண்மையானவை அல்ல என்றும் உருவாக்கப்பட்டவை என்றும் சொல்கிறார்கள்!&lt;br /&gt; &lt;br /&gt;இவை எல்லாம் பின்லேடன் 2001-லேயே இறந்து போய்விட்டார் என்று சொல்பவர்கள் முன்வைக்கும் ஆதாரங்கள். ஒருவேளை இவை சொல்வது  உண்மை என்று வைத்துக் கொள்வோம். உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவர் இவ்வளவு பெரிய உண்மைக்கு மாறான தகவலை நாட்டு மக்களிடம் சொல்வாரா? அல்லது அவருக்கே தெரியாமல் இதெல்லாம் நடக்கிறதா? ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் ஒசாமா நிராயுதபாணியாக இருந்தார் என்று அமெரிக்கா இப்போது சொல்கிறது. அப்படி என்றால் அவரை ஏன் கொல்ல வேண்டும்? உலகம் முழுவதும் பயங்கரவாத வலைப்பின்னலை தலைமை தாங்கி நடத்தும் ஒருவர் உயிருடன் சிக்கினால் தானே அரசுக்கு பயன்?  &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதனுடைய மரணத்தை உறுதிசெய்வது எது? அவனுடைய உயிரற்ற உடல்தானே? ஒசாமாவின் உடலை உலக மக்களுக்குக் காட்டாமல், அவசர அவசரமாக கடலில் ‘அடக்கம்’ செய்வதற்கு என்ன காரணம்? சாட்சியாக சடலத்தைக் காட்டாமல் இருந்தால் ஒரு மரணத்தை சட்டம் ஏற்றுக் கொள்ளுமா? இப்படி ஏராளமான கேள்விகள் வரலாம் என்பது தெரிந்தும் ஓர் அரசு ஏன் இப்படி நடந்து கொள்கிறது? அமெரிக்க அதிபர் மீண்டும் ஒருமுறை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட விரும்புகிறார். ஆனால் அவருடைய கவர்ச்சி இப்போது அமெரிக்க மக்களிடம் எடுபடவில்லை. அவருக்கான மக்கள் ஆதரவு குறைந்திருந்தது. ஆனால் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார் என்றும் 9/11 நிகழ்வுக்கு நீதி வழங்கப்பட்டது என்றும் ஒபாமா உரை ஆற்றினார். இதனால் அமெரிக்க தேசியத்தின் பெருமை உயர்த்திப் பிடிக்கப்பட்டவுடன், அவருக்கான ஆதரவு இப்போது பெருகி இருக்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt;ஒசாமா பின்லேடன் உயிருடன் இல்லை என்று அதிகாரப் பூர்வமாக ஏற்றாகி விட்டது. நல்லது! இப்போது பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்தும் போர் முடிவுக்கு வருமா? வரும்.. ஆனா வராது. ஏன்? ஒசாமாவின் சாவுக்கு அல்கைதாவும் தலிபானும் பழிவாங்கும் தாக்குதல்களை நடத்தும் என்று அமெரிக்கா எச்சரிக்கிறது! அந்தத் தாக்குதல்களில் இருந்து உலக மக்களை அமெரிக்காவைத் தவிர வேறு யாரால் காப்பாற்ற முடியும்?    &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12453184-9211242461612411106?l=stationbench.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://stationbench.blogspot.com/feeds/9211242461612411106/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12453184&amp;postID=9211242461612411106' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/9211242461612411106'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/9211242461612411106'/><link rel='alternate' type='text/html' href='http://stationbench.blogspot.com/2011/05/blog-post_2599.html' title='பொய் சொன்னாலும் நீயே ...........'/><author><name>ஜென்ராம்</name><uri>http://www.blogger.com/profile/01132053348035137568</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12453184.post-2849187789410214367</id><published>2011-05-12T13:37:00.000+05:30</published><updated>2011-05-14T02:05:50.427+05:30</updated><title type='text'>குப்புறத் தள்ளி குழியும் பறித்த கதை!</title><content type='html'>“நல்ல நாள் பார்த்து செய்யுங்கள்” என்று சில பெரியவர்கள் சொல்வதை நாம் இங்கு கேட்டிருக்கிறோம். அதைப் பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லும் நல்ல நாள், நல்ல நேரம் என்றே நான் இவ்வளவு காலமாகப் புரிந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய அந்தப் பார்வை கடந்த ஏப்ரல் 26-ம் தேதி மாறியது. அந்த மாற்றத்துக்குக் காரணம் என்ன?  மாற்றியவர் யார்? எத்தனையோ ‘சாதனைகளைச்’ செய்து முடித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசே அந்த மாற்றத்தை என்னுள் உருவாக்கியது. அந்த முக்கியமான செயலைச் செய்து ‘வரலாற்றில்’ இடம் பிடித்தவர் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ‘சுப யோக சுப தினத்தில்’ மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் ஜெய்தாபூர் அணு மின் நிலையத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று உறுதியாக சொன்னார். என்றைக்கு அப்படி ஓர் உறுதியை வெளிப்படுத்துகிறார்? ஏப்ரல் 26-ம் நாள். அந்த நாளுக்கு அப்படி என்ன சிறப்பு? 1986-ம் வருடம் அதே நாளில் தான் அன்றைய சோவியத் யூனியனின் உக்ரைன் மாநிலத்தில் செர்னோபில் அணுமின் நிலையத்தில் பெரிய விபத்து நடந்தது. மிக மோசமான அணு விபத்து என்று வரலாறு அதைப் பதிவு செய்திருக்கிறது. அந்த உலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக கதிர்வீச்சு காற்றில் கலந்து சோவியத் யூனியனின் மேற்குப் பகுதி முழுவதையும் பாதித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த மார்ச் மாதம் 11-ம் நாள் ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலையில் சுனாமியால் நடந்த விபத்து நம்முடைய நினைவை விட்டு இன்னும் போயிருக்காது. அந்த விபத்துக்கு  7 என்ற ஆபத்து வகை எண் கொடுத்து அதன் தீவிரத்தை நமக்குப் புரிய வைத்தார்கள். அதைப் போலவே செர்னோபிலில் நடந்த விபத்துக்கும் ஏழு என்ற எண்ணையே கொடுத்தார்கள். சுற்றுச் சூழலில் அந்தக் கதிர்வீச்சு ஏற்படுத்திய பாதிப்பை சரி செய்வதற்காக ஏறத்தாழ 5 லட்சம் பேர் இறங்கி வேலை செய்தார்கள். அதற்காக கிட்டத்தட்ட  1800 கோடி ரூபிள்களை அரசு செலவழிக்க நேர்ந்தது.&lt;br /&gt; &lt;br /&gt;அப்படிப்பட்ட ஒரு நாளை ஜெய்ராம் ரமேஷ் தேர்ந்தெடுத்திருக்கிறார்; அணுமின் உற்பத்தியைக் கைவிட மாட்டோம் என்ற கொள்கையை அந்த நாளில் அவர் பிரகடனம் செய்கிறார்.  ஜெய்தாப்பூர் திட்டத்துக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டங்களையும் மீறி திட்டம் செயல்படுத்தப்படும் என்ற உறுதியையும் அவர் வெளிப்படுத்துகிறார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் நடந்த ஒரு விபத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, இப்போது நடந்த ஃபுகுஷிமா விபத்தின் பாதிப்பையாவது கருத்தில் கொள்ளுங்கள் என்று பல அறிஞர்கள் சொல்லிப் பார்த்தார்கள். “நீங்கள் கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை எங்களுக்குத் தேவையில்லை; நாங்கள் எங்கள் நிலங்களைத் தர மாட்டோம்” என்று அந்தப் பகுதி மக்கள் உறுதியாகப் போராடினார்கள். துப்பாக்கிச் சூட்டுக்கு அங்கு உயிர் பலி வேறு கொடுத்தாகி விட்டது. இவை எதுவும் இந்த அரசிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;ரத்னகிரி மாவட்டத்து மக்களுக்கு இது போன்ற போராட்டங்கள் ஒன்றும் புதியது இல்லை. தங்களுடைய போராட்டங்களை மீறி திட்டத்தை நிறைவேற்ற அரசு முடிவு செய்திருப்பதை வரும் காலத்தில் அவ்வளவு சுலபமாக அவர்கள் விட்டுவிட மாட்டார்கள். 1990- களின் தொடக்கத்தில் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை அங்கு உருவாக்க அரசு தீர்மானித்தது. ஆனால் அந்தப் பகுதி மக்களின் தொடர்ச்சியான போராட்டம் அந்த ஆலையைத் தூத்துக்குடிக்கு விரட்டி விட்டது. ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகள் ஏற்படுத்தும் சுற்றுச் சூழல் பாதிப்புகள் அந்தப் பகுதியில் விளையும் ‘அல்போன்சா’ மாம்பழ உற்பத்தியைப் பாதிக்கும் என்று மக்கள் அங்கு போராடினார்கள். இறுதியில் வெற்றியும் பெற்றார்கள். &lt;br /&gt;மேற்கு வங்கத்தில் சிங்கூரில் இருந்து டாடா நானோ கார் தொழிற்சாலை பின்வாங்க நேர்ந்தது. நந்திகிராமில் இந்தோனேஷியாவைச் சேர்ந்த சலீம் குழுமம் ரசாயனத் தொழிற்சாலை தொடங்க முடியாமல் மக்கள் ஒன்றுபட்டு நின்றார்கள். அதே சமயத்தில் மக்கள் தோற்றுப் போய் கைவிட்ட போராட்டங்களும் இருக்கின்றன. என்ரான் நிறுவனத்தின் உதவியுடன் வந்த தாபோல் மின் திட்டத்துக்கு எதிராக மகாராஷ்டிராவில் மக்கள் போராடினார்கள். ஆனால் அவர்களால் அந்தத் திட்டத்தைத் தடுக்க முடியவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;இந்த வகைப் போராட்டங்கள் எல்லாமே தொடங்கப்படும்போது அரசியல் கட்சிகளால்  ஆதரிக்கப்படுவதில்லை. மக்கள் ஒன்றுபட்டு உறுதியுடன் நிற்கிறார்கள் என்று தெரிந்த பிறகு மெல்ல உள்ளே நுழைந்து போராட்டத்தின் தலைமையை அரசியல் கட்சிகள் கைப்பற்றி விடுகின்றன. போராட்ட்த்தின் வீச்சு மாநிலம் முழுவதும் பரவி ஆட்சி மாற்றத்துக்கு உதவுகிறது. போராட்டத்தை ஆதரித்த கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் ‘அந்தர் பல்டி’ அடித்து அந்த தொழில் குழுமத்துடன் ஒரு ‘புதிய ஒப்பந்தம்’ போட்டுவிடுகிறது! வெளிப்படையான நிர்வாகம் என்பது இன்னும் நம் கனவு மட்டுமே! &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் வேறு சில நாடுகளில் மக்கள் எழுப்பும் குரல்களுக்கு உடனடியாக பதில் கிடைக்கிறது. சுவிட்சர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் அணு உலைகளைக் கட்டுவது தொடர்பாக ஒரு மறு மதிப்பீடு தேவை என்று அரசு சொல்லி இருக்கிறது. அந்த ஆய்வுக்கும் மதிப்பீட்டுக்கும் பிறகு அந்த நாடுகள் அணு உலைகளைக் கட்டலாம்; ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுப்பார்களாக இருக்கலாம். பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி அபூர்வமாக நடப்பதே விபத்து. அப்படி ஒரு விபத்து நடந்தால், நாம் அதன் விளைவுகளைச் சமாளிப்பதற்கோ, எதிர்கொள்வதற்கோ எந்த அளவு தயாராக இருக்கிறோம் என்பதே நம்முடைய மனதில் எழும் கேள்வி. &lt;br /&gt;&lt;br /&gt;சரி, விபத்துக்களே நடக்காமல் நம் அரசு பார்த்துக் கொள்ளும் என்று நாம் நம்புகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அணு உலைகளை  பயங்கரவாதிகள் தாக்கக் கூடும் என்று நம்முடைய அரசு சார்பாக அவ்வப்போது எச்சரிக்கை வருகிறதே, அதை நாம் எப்படி எடுத்துக் கொள்வது? அப்படி எதுவும் நடக்காது என்று அரசாங்கம் உறுதி அளிக்குமா? மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்ற கவலையும் அக்கறையும் நம்முடைய அரசுகளிடம் இருக்கின்றனவா? போபாலில் நடந்த விஷவாயுக் கசிவு விபத்துக்குப் பிறகு இன்று வரை அங்கு என்ன நடக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்!&lt;br /&gt; &lt;br /&gt;முதலில் மக்களிடம் இருந்து நிலத்தைப் பறிக்கிறோம்; அங்கு ஏதோ ஒன்றைக் கட்டி சுற்றுச்சூழலைக் கெடுக்கிறோம்; அவர்களுடைய வேலை வாய்ப்புகளைப் பறிக்கிறோம்; இவ்வளவுக்கும் பிறகு மக்கள் எப்படி இருப்பார்கள்? அணு ஆபத்தைப் போலவே இந்தச் சூழலில் வேறு ‘அச்சுறுத்தலுக்கான’ ஆபத்தும் அதிகம் இருக்கிறது!&lt;br /&gt; &lt;br /&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12453184-2849187789410214367?l=stationbench.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://stationbench.blogspot.com/feeds/2849187789410214367/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12453184&amp;postID=2849187789410214367' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/2849187789410214367'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/2849187789410214367'/><link rel='alternate' type='text/html' href='http://stationbench.blogspot.com/2011/05/blog-post_6369.html' title='குப்புறத் தள்ளி குழியும் பறித்த கதை!'/><author><name>ஜென்ராம்</name><uri>http://www.blogger.com/profile/01132053348035137568</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12453184.post-7917548554325642147</id><published>2011-05-12T13:29:00.000+05:30</published><updated>2011-05-14T02:05:50.684+05:30</updated><title type='text'>நிறம் மாறாத புள்ளிகள்</title><content type='html'>“அவங்க வேறு எப்படி நடந்துக்குவாங்கன்னு நீங்க நினைக்கறீங்க?” என்று அந்த நண்பரிடம் கேட்டேன். நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு கூட்டத்தில் நடந்த கலாட்டாக்கள் பற்றி அப்போது செய்தி வந்திருந்தது. அந்தக் குழுவில் இருப்பவர்கள் எல்லோரும் யார்? நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்கள்; அவர்களை நியமித்திருப்பது எது? மக்களவை. பிறகு அந்தக் குழுவில் மட்டும் அமளியும் போட்டிக் கூட்டங்களும் எப்படி இல்லாமல் போகும்? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு, ஆந்திரா, உ.பி, மகாராஷ்டிரா,ஒரிசா, பீகார் மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் அந்தக் குழுவில் இருக்கிறார்கள். அந்தந்த மாநில சட்டமன்றக் கூட்டங்களில் அவ்வப்போது என்னென்ன நடந்தன என்பது அவர்களுக்குத் தெரியாமலா இருக்கும்? அங்கே கற்ற பாடங்களை வேறு எங்கே பரிசோதித்துப் பார்ப்பது? அதனால் அந்த கலாட்டா பற்றி எனக்கு ஆச்சரியமோ அதிர்ச்சியோ எதுவும் இல்லை! &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பேசிக் கொண்டிருந்த நண்பர்களுக்கு வருத்தம் இருந்தது. அவர்களுக்கு இன்னும் நாடாளுமன்றத்தின் மீதும் அது அமைக்கும் நிலைக் குழுக்கள் மீதும் நம்பிக்கை இருந்தது.  அவநம்பிக்கையாளர்களாக அவர்கள் இன்னும் மாறவில்லை. மரபுகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன என்பதால் அவர்கள் வருத்தப்பட்டிருக்கலாம். அல்லது காங்கிரஸ், பிரதமர் மன்மோகன்சிங், பிரதமர் அலுவலகம், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திமுக என்று பல முனைகளில் தாக்கும் அற்புத ஆயுதமான ஓர் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாமல் போகிறதே என்ற வருத்தமாகவும் இருக்கலாம். அல்லது இரண்டுமாகவும் இருக்கலாம். அவர்களுடைய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் பல வார்த்தைகளில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்! &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஏப்ரல் 28-ம் தேதி நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு கூட்டம் நடந்தது. அதன் தலைவர் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் முரளி மனோகர் ஜோஷி. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து அந்தக் குழு விசாரித்து ஒரு வரைவு அறிக்கையைத் தயாரித்து இருந்தது. அந்த அறிக்கை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, அவரைக் கண்காணிக்கத் தவறிய பிரதமர், பிரதமர் அலுவலகம், அப்போது நிதியமைச்சராக இருந்த சிதம்பரம் என்று எல்லோரையும் குற்றம் சாட்டி இருந்தது. அந்த வரைவு அறிக்கையைக் குழு ஏற்கிறதா இல்லையா என்பதை முடிவு செய்யவே அன்றைய கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுக் கணக்குக் குழு உறுப்பினர்களுக்கு அந்த வரைவு அறிக்கையின் நகல் கொடுக்கப்பட்ட நாளே அதன் உள்ளடக்கம் ஊடகங்களில் வெளியாகத் தொடங்கியது. திமுகவுக்கும் காங்கிரசுக்கும் சங்கடங்களை உருவாக்கும்படி அந்த அறிக்கை இருந்ததால், அந்தக் கட்சிகள் ‘ஊடகங்களுக்கு அறிக்கை கசிந்தது எப்படி’ என்று கண்டனம் தெரிவித்தன. முரளி மனோகர் ஜோஷி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அந்த வரைவு அறிக்கையை ஏற்காமல் நிராகரிப்பதற்கு குழுவுக்குள் பெரும்பான்மையைத் தேடும் முயற்சிகளில் ஆளும் தரப்பு இறங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வருடமும் பொதுக் கணக்குக் குழு அமைக்கப்படும். 22 உறுப்பினர்களுக்கு மிகாமல் அந்த குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும். மக்களவையில் இருந்து 15 பேரும், மாநிலங்களவையில் இருந்து 7 பேரும் இருக்கலாம். இந்த 22 பேரும் மத்திய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கக் கூடாது என்பது விதி. இப்போது இந்தக் குழுவில் மொத்தம் 21 உறுப்பினர்கள்.  காங்கிரஸ் கட்சியில் இருந்து ஏழு பேர். திமுகவில் இருந்தும் அதிமுகவில் இருந்தும் முறையே இரண்டு பேர். பாஜகவுக்கு நான்கு பேர்; சிவசேனை, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், பிஜூ ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒவ்வொரு உறுப்பினர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கணக்கில், காங்கிரசும் திமுகவும் சேர்ந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் எண்ணிக்கை ஒன்பது. பா.ஜ.க கூட்டணியின் எண்ணிக்கை ஏழு. அதிமுகவும் மார்க்சிஸ்ட்டும் சேர்ந்து மூன்று. இந்த மூன்று பேரும் ஆளும் கூட்டணிக்கு எதிராக இருப்பதால் வரைவு அறிக்கைக்கு ஆதரவான வாக்குகள் பத்து. எதிரான வாக்குகள் ஒன்பது. இங்கே தான் இந்திய அரசியலை தங்கள் விருப்பப்படி வளைக்கும் வலிமை கொண்ட உத்தரப் பிரதேச அரசியல் வருகிறது. ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒரே கட்சியை ஆதரிக்க மாட்டார்கள் என்று சொல்லும் நண்பர்கள் கவனிக்க வேண்டிய இடம் இது. தங்களுடைய சிண்டு அல்லது குடுமியின் பிடி மத்திய ஆட்சியாளர்களிடம் இருந்தால், சிற்றரசர்களும் குட்டிராணிகளும் என்ன செய்வார்கள்? அவர்கள் சரணடையத் தயாராக இருப்பார்கள் என்பதை நாம் மாயாவதி, முலாயம்சிங் நடவடிக்கைகளில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஆம். பொதுக் கணக்குக் குழுவில் வரைவு அறிக்கைக்கு எதிராகவும் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாகவும் மாயாவதியின் கட்சியும் முலாயம் சிங் கட்சியும் ஒரே பக்கத்தில் நின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு நெருக்கடி உருவானது. அவர் தயாரித்த வரைவு அறிக்கைக்கு அவர் தலைவராக இருக்கும் குழுவில் பெரும்பான்மை இல்லை. அவருக்கு எதிராக 11 வாக்குகளும் ஆதரவாக 10 வாக்குகளும் இருந்தன. மொத்த எண்ணிக்கை 20 ஆக இருந்து ஆதரவும் எதிர்ப்பும் சமமாக இருந்தால் தலைவர் என்ற முறையில் அவர் ‘தீர்மானிக்கும்’ வாக்கை அளிக்கலாம். இப்போது அதற்கும் வழியில்லை. முடிவுகளைத் தள்ளிப் போடுவதற்காக முரளி மனோகர் ஜோஷி கூட்டத்தை ஒத்திவைத்து விட்டு வெளியேறினார். அவருக்கு ஆதரவானவர்களும் வெளியேறினார்கள். அரசுக்கு ஆதரவான 11 பேரும் காங்கிரஸைச் சேர்ந்த சைபுதீன் சோஸ் என்ற முன்னாள் மத்திய அமைச்சரை தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். அவர் வரைவு அறிக்கை நிராகரிக்கப்பட்டது என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்!  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த செயல் சட்டரீதியாக செல்லத்தக்கதா என்பது வேறு விஷயம். பொதுக் கணக்குக் குழுவில் வரைவு அறிக்கைக்கு பெரும்பான்மை இல்லை என்பது வெளிப்படையான உண்மை. இது ‘ஊழலுக்கு’ எதிராக இருக்கும் ஒரு பகுதி மக்களுக்கு தார்மீக ரீதியாக சோர்வைக் கொடுக்கும். வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் காங்கிரஸ் கட்சி என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதைக் கடந்த கால வரலாற்றில் பல சம்பவங்களில் இருந்து பார்க்க முடியும். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார் நரசிம்மராவ்! முலாயம் சிங்- அமர்சிங்கிடம் பேரம் நடத்தியும் எதிர்க்கட்சி எம்.பிக்களை ‘வாங்கியும்’ 2008-ல் பிரதமர் மன்மோகன்சிங் தன்னுடைய ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார்! &lt;br /&gt;&lt;br /&gt;இந்த முலாயம்சிங் யாதவ், மாயாவதி போன்றவர்களை நம்பித்தான் சிலர் மூன்றாவது அணி என்றும் மாற்று அணி என்றும் பேசி வருகிறார்கள். இந்த மண்குதிரைகளை நம்பி ஆற்றில் இறங்கும் அவர்களைப் பார்த்தால்தான் பாவமாக இருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12453184-7917548554325642147?l=stationbench.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://stationbench.blogspot.com/feeds/7917548554325642147/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12453184&amp;postID=7917548554325642147' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/7917548554325642147'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/7917548554325642147'/><link rel='alternate' type='text/html' href='http://stationbench.blogspot.com/2011/05/blog-post_8472.html' title='நிறம் மாறாத புள்ளிகள்'/><author><name>ஜென்ராம்</name><uri>http://www.blogger.com/profile/01132053348035137568</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12453184.post-2768573447515067023</id><published>2011-05-12T13:25:00.000+05:30</published><updated>2011-05-14T02:05:50.747+05:30</updated><title type='text'>நெருக்கடியில் திமுக</title><content type='html'>அவர்கள் வானத்தில் இருந்து குதித்த தேவதூதர்கள் இல்லைதான். எந்தவிதமான அரசியல் நிர்ப்பந்தங்களுக்கும் இடம் கொடுக்காத சுதந்திரமான அமைப்பினர் என்றும் சொல்ல முடியாது. ஆனால் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி அவர்களுடைய செயல்பாடு நாடு முழுக்க ஏதோ ஒருவித உணர்வை ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது. &lt;br /&gt;சி.பி.ஐ என்று சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய புலனாய்வு நிறுவனம் அன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுரேஷ் கல்மாடியைக் கைது செய்தது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை டெல்லியில் நடத்தும்போது நடந்த முறைகேடுகளுக்கு அவர் காரணமாக இருந்தார் என்பது குற்றச்சாட்டு. இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டின் இரண்டாம் குற்றப்பத்திரிகையையும் அன்றுதான் சிறப்பு நீதிபதியிடம் சி.பி.ஐ தாக்கல் செய்தது!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் குற்றப்பத்திரிகையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் பெயர் இடம் பெற்றிருக்கிறது; கலைஞர் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குநர் சரத்குமார் ரெட்டியின் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. அந்தத் தொலைக்காட்சியில் 60 சதவீத பங்குகளை வைத்திருக்கும் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் பெயர் இடம் பெறவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய உடல்நலக் குறைவு காரணமாகவும் முதுமை காரணமாகவும் அவரால் கலைஞர் டிவி வர்த்தகத்தில் தீவிரமாக ஈடுபட முடி யாது; சரத்குமாரே நிர்வாகம் முழுவதையும் பார்த்துக் கொள்ளலாம் என்று அவர் சொல்லியதை அந்தத் தொலைக்காட்சியின் இயக்குநர் குழுமக் கூட்டத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். மேலும் அவருக்குத் தமிழ் தவிர வேறு எந்த மொழியும் பேசவோ எழுதவோ பேசினால் புரிந்து கொள்ளவோ முடியாது; சட்டத்தின் தேவைக்காக அவர் கூட்டத்தில் கலந்து கொள்வாரே தவிர அங்கு என்ன நடக்கிறது என்பது அவருக்குத் தெரியாது. அதனால் அவரை விசாரித்த போதிலும் அவருடைய பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்க்கவில்லை என்று சிபிஐ சொல்லி இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கலைஞர் தொலைக்காட்சியைத் தொடங்கும் காலத்தில் இருந்து கனிமொழி அதை உருவாக்குவதில் தீவிரமாகப் பணியாற்றினார் என்று சிபிஐ சொல்கிறது. அப்போது தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவைத் தொடர்பு கொண்டு அவர் மூலமாக பல வேலைகளைச் செய்து வாங்கி இருக்கிறார். தொலைக்காட்சியில் 20 சதவீத பங்குகள் கனிமொழிக்கு இருக்கின்றன. அதன் செயல்பாடுகளில் மூளையாக செயல்பட்டிருக்கிறார் என்று சிபிஐ தன் குற்றப்பத்திரிகையில் கனிமொழி குறித்து குறிப்பிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மாறன் சகோதரர்களுடன் கருணாநிதி குடும்பத்தினருக்கு முரண்பாடுகள் தோன்றுவதற்கு முன்னால் கனிமொழி தீவிர இலக்கியவாதியாக அறியப்பட்டார். அரசியல் அதிகாரத்தின் அருகாமை அவரிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தியதாக அந்தக் காலகட்டங்களில் எந்த செய்தியும் வந்தது கிடையாது. இந்திய மக்களிடம் கவிஞராகவும் கனிந்த மனம் கொண்ட மனித உரிமை ஆர்வலராகவும் அறியப்பட்டிருக்க வேண்டிய ஒருவர், இன்று இந்தியா முழுவதும் நேர்மாறான விதத்தில் பிரபலமாகி இருக்கிறார். ‘அதிகாரம் தவறு செய்யத் தூண்டுகிறது; முழுவதுமான  அதிகாரம் முழுவதுமான பெரிய தவறுகளைச் செய்யவைக்கிறது’ என்பதை வேத வாக்காக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் போலிருக்கிறது! சிபிஐ சொல்வதைப் போல் அவர் குற்றம் செய்தவராக இருந்தாலும் வேறு ‘உள் முரண்பாடுகளைப்’ பார்க்கும்போது அவரை ‘பாதிக்கப்பட்டவராகவே’ புரிந்து கொள்ள முடிகிறது! &lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அமைச்சராக இருந்த ராசா திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராகவும் இருந்தார். மத்திய அமைச்சரவையில் இருந்து அவர் ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். அதனால் திமுக – காங்கிரஸ் உறவு பாதிக்காது என்று இரண்டு தரப்பிலும் சொன்னார்கள். கருணாநிதியின் மனைவியும் மகளும் சிபிஐயால் விசாரிக்கப்பட்டார்கள்; திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்குள் வந்து கலைஞர் தொலைக்காட்சி அலுவலகம் சோதனை செய்யப்பட்டது. “அதனால் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் இடையில் இருக்கும் கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை” என்றார்கள். இப்போது கனிமொழி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இப்போதும் காங்கிரசில் இருந்து அதே பல்லவியைப் பாடுகிறார்கள். “ 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கனிமொழி பெயர் இடம்பெற்றதால், திமுகவுடன் உள்ள உறவில் விரிசல் வராது; எங்கள் கூட்டணி எப்போதும் போல் தொடரும்” என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி சொல்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;திமுகவும் அதே கருத்தை எதிரொலிக்கப் போகிறதா தெரியவில்லை. இந்த வரிகளை உள்ளீடு செய்து கொண்டிருக்கும்போது திமுகவின் உயர்நிலைக்குழு கூட்டம் ஏப்ரல் 27-ம் தேதி நடக்க இருக்கிறது என்ற செய்தி மட்டுமே வந்திருக்கிறது. ஆனால் இந்த இதழ் உங்கள் கைகளில் இருக்கும்போது அந்தக் கூட்டத்தின் தீர்மானங்களும் நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து முடிவுகளுக்காக காத்திருக்கும் இந்த நாட்களில் திமுக அதிரடியாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்றே தோன்றுகிறது. மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்களா என்ற கேள்வியை ஊடகங்கள் எழுப்பிக் கொண்டே இருக்கின்றன. இந்தவிதமான ‘உசுப்பேற்றல்களுக்கு’ எல்லாம் திரைப்படங்களில் வடிவேலு பலியாகி இருக்கலாம். ஆனால் வடிவேலுவை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திய திமுக அதுமாதிரியான சூழலுக்கு இடம்தராது என்ற எண்ணமே மேலோங்குகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அதை உறுதிசெய்வது போல ஜெயலலிதா ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்ற அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கோருகிறார். அது மட்டுமா? கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் கேட்கிறார். ஒருவேளை மே 13-ல் வர இருக்கும் தேர்தல் முடிவுகள்  அவருக்கு சாதகமாக இருந்தால், அவர் இன்னும் வேகமாக இந்தக் கோரிக்கைகளை முன்வைப்பார். அப்போது மத்திய அமைச்சரவையில்  இல்லாமல் இருந்தால் இன்னும் நெருக்கடிகளை திமுக சந்திக்க நேரிடலாம். அதனால் அமைச்சர்களை விலக்கிக் கொள்ளும் முடிவை திமுக உயர்நிலைக் குழு எடுக்காது என்றே தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயம் காங்கிரஸ் என்னவெல்லாம் செய்கிறது? சுரேஷ் கல்மாடியை காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்கிறது. ஆனால் ஆ.ராசா கைது செய்யப்பட்டு இத்தனை நாட்கள் ஆகியும் அவர் மீது கட்சி ரீதியாக திமுக இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொலைக்காட்சி விவாதங்களுக்கு வரக் கூடிய காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் ‘தவறு செய்பவர்களை நாங்கள் விட்டு வைப்பதில்லை; அவர்கள் மீதெல்லாம் நாங்கள் நடவடிக்கை எடுத்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால் எதிர்க்கட்சிகள் அப்படி நடவடிக்கை எடுக்கின்றனவா?” என்று மார்தட்டுகிறார்கள். ஊழலுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை எடுப்பது காங்கிரஸ் கட்சி மட்டும்தான் என்று அவர்களுடைய ஊழல்களையும் எடுத்த நடவடிக்கைகளையும் பட்டியலிடுகிறார்கள். அப்படி ஓர் நெருக்கடியை அவர்கள் திமுகவுக்கும் உருவாக்கக் கூடும். ராசா மீதும்  கனிமொழி மீதும் நடவடிக்கை எடுங்கள் என்ற நிர்ப்பந்தம் வருமானால் திமுக என்ன செய்யும்?&lt;br /&gt;   &lt;br /&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12453184-2768573447515067023?l=stationbench.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://stationbench.blogspot.com/feeds/2768573447515067023/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12453184&amp;postID=2768573447515067023' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/2768573447515067023'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/2768573447515067023'/><link rel='alternate' type='text/html' href='http://stationbench.blogspot.com/2011/05/blog-post_12.html' title='நெருக்கடியில் திமுக'/><author><name>ஜென்ராம்</name><uri>http://www.blogger.com/profile/01132053348035137568</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12453184.post-8196373182174930618</id><published>2011-05-12T13:22:00.000+05:30</published><updated>2011-05-14T02:05:50.617+05:30</updated><title type='text'>“அடங்க மறுத்தால் அவதூறு செய்”!</title><content type='html'>எதிர்ப்பவர்களை எப்படி அடக்கி ஒடுக்குவது என்பதை தனிமனிதர்களை விட அரசாங்கம் நன்றாக அறிந்து வைத்திருக்கிறது. அதிகாரத்தைக் கேள்வி கேட்பவர்கள் மத்தியில் முதலில் பயத்தை விதைக்க வேண்டும்; அவர்களிடம் இருக்கும் அறியாமையை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; சாதி, மதம், இனம் போன்ற விஷயங்களின் மூலம் எதிர்ப்பவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும்; இவற்றை எல்லாம் மீறியும் அதிகாரத்துக்கு எதிராக மக்கள் அணி திரண்டார்கள் என்றால் எதிர்க்கும் தலைவர்கள் மீது அவதூறுகளை அள்ளி விட வேண்டும். இந்த வழிமுறைகளை எல்லாம் ஏதேனும் நிர்வாகப் பள்ளி சொல்லிக் கொடுக்கிறதா என்று தயவுசெய்து கேட்காதீர்கள். இருக்கும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு இருக்கும் தனிமனிதர்களும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் காலம்காலமாக இந்த வேலைகளைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்!&lt;br /&gt; &lt;br /&gt;அப்படி ஒரு நிலையைத் தான் அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான இயக்கம் இன்று எதிர்கொள்கிறது. அந்த இயக்கத்தால் எந்த அடிப்படைகளும் தகர்ந்து போகப்போவதில்லை. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இது நன்றாகத் தெரிந்தாலும் கூட, அன்னா ஹசாரே குழுவினரை அவ்வளவு சுலபமாக அவர்களால் விட்டுவிட முடியவில்லை.  “ஊழல் குடியரசு” என்று இளைஞர்கள் இணையத்திலும் செல்பேசி குறுஞ்செய்திகளிலும் இந்தியாவைக் கிண்டல் செய்கிறார்கள். எந்த ஒரு அரசுத் திட்டமும் ஊழல் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்படாது என்று பொதுமக்கள் உறுதியாக நம்புகிறார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;இந்த நிலையில் லோக்பால் சட்டம் நம்முடைய நாட்டில் ஊழலைக் கட்டுப்படுத்தும் அல்லது அறவே ஒழிக்கும் என்ற நம்பிக்கை நம்மிடம் விதைக்கப்பட்டது. டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரதம் மாபெரும் அறப் போராட்டமாக சித்தரிக்கப்பட்டது. லோக்பால் சட்டம் இயற்றுவதற்கான குழுவில் அன்னா ஹசாரே சொல்லும் நபர்களும் சேர்க்கப்பட்டனர். முன்னாள் சட்ட அமைச்சர் சாந்திபூஷண், அவருடைய மகன் பிரசாந்த் பூஷண் ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பெற்றார்கள். இப்போது அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;சாந்தி பூஷண் என்ற பெயர் எனக்குப் பரவசமூட்டிய நாட்களை நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அப்போது இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். 1971 தேர்தலில் ரேபரேலி தொகுதியில் இருந்து அவர்  தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவருடைய தேர்தல் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று ராஜ் நாராயண் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருந்தார். இந்திராவை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றுப் போனவர் அவர். அந்த வழக்கில் ராஜ்நாராயண் வெற்றி பெற்றார். இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அடுத்த ஆறு வருடங்களுக்கு அவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று தடை விதித்தது. அதை அடுத்து சட்டங்கள் வளைக்கப்பட்டதும் நாடு முழுவதும் நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டதும் தனிக்கதை! ராஜ்நாராயணனின் அந்த வழக்கை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்தவர் சாந்திபூஷண்!  &lt;br /&gt;&lt;br /&gt;நெருக்கடி நிலை விலக்கிக் கொள்ளப்பட்டு 1977-ல் நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. அடுத்து அமைந்த மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சியின் அமைச்சரவையில் இதே சாந்தி பூஷண் சட்ட அமைச்சரானார். எதற்காக இப்போது அதை எல்லாம் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது? மத்திய சட்ட அமைச்சராக இருந்த காலத்திலேயே சாந்திபூஷண் லோக்பால் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆட்சி போனதோடு அந்த மசோதாவும் கிடப்பில் போடப்பட்டது!&lt;br /&gt; &lt;br /&gt;இன்றைய கேரள முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் போட்ட ஒரு வழக்கிலும் உச்சநீதிமன்றத்தில் சாந்திபூஷண் வழக்கறிஞராக இருந்து வெற்றி பெற்றுக் கொடுத்தார். இடமலையார் அணையில் நீர்மின் திட்டப்பணிக்காக கொடுக்கப்பட்ட ஓர் ஒப்பந்தம் தொடர்பான வழக்கு அது. அமைச்சர் பாலகிருஷ்ணபிள்ளை போட்ட அந்த ஒப்பந்தத்தால் மாநில அரசுக்கு இரண்டு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக  அச்சுதானந்தன் வழக்கு போட்டார். உச்சநீதிமன்றம் வரை வந்த அந்த வழக்கில் பாலகிருஷ்ண பிள்ளைக்கு 10000 ரூபாய் அபராதமும் ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் கொடுக்கப்பட்டது. நீதித்துறை பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் நீதித்துறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் கோரி சாந்தி பூஷணும் அவருடைய மகன் பிரசாந்த் பூஷணும் இயக்கம் நடத்தி வருகிறார்கள். &lt;br /&gt; &lt;br /&gt;“நீங்கள் சட்ட அமைச்சராக இருந்திருக்கிறீர்கள்; ஆனால் தெருவில் குறும்புகள் செய்து கொண்டு திரியும் சிறுவன் மாதிரி பேசுகிறீர்கள்” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடந்த காலத்தில் சாந்தி பூஷணைக் கண்டித்திருக்கிறார்கள்;  அதேபோல் ஒரு சமயம், “நான் சொன்ன கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. அதற்காக நான் மன்னிப்பு கேட்கவும் போவதில்லை. நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்” என்று சாந்தி பூஷண் நீதிமன்றத்தில் உறுதியாக இருந்த நிகழ்வும் நடந்திருக்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt;இந்தப் பின்னணியில் இப்போது அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது. நீதிபதிகளைச்  ‘சமாளிப்பதில்’ மகன் பிரசாந்த் கில்லாடி என்றும் அதற்கான செலவு 4 கோடி ரூபாய் வரை ஆகலாம் என்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங்கிடம் சாந்திபூஷண் பேசிக் கொண்டிருக்கும் ஒரு குறுந்தகடு  வெளியானது. அது ஒட்டுவேலை செய்யப்பட்ட சி.டி என்று ட்ரூத் லேப்ஸ் என்ற தனியார் நிறுவனம் சொல்கிறது. அதில் எந்த ஒட்டு வேலையும் இல்லை என்றும் உண்மையான பதிவுதான் என்றும் மத்திய தடய அறிவியல் ஆய்வகம் தெளிவுபடுத்துகிறது. எது உண்மை என்று இப்போது யாரும் அறிந்து கொள்ள முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;நில ஒதுக்கீடு பற்றிய அடுத்த குற்றச்சாட்டு கவலை அளிக்கிறது. நொய்டா நகரத்தில் 10000 சதுர மீட்டர் பரப்பு கொண்ட பண்ணை இல்ல நிலத்தை உத்தரப் பிரதேச மாநில அரசு சாந்தி பூஷணுக்கு ஒதுக்கி இருக்கிறது. இதற்காக அவர் மூன்றரை கோடி ரூபாய் கட்டியிருக்கிறார். ஆனால் இதன் மதிப்பு பல மடங்கு அதிகமாக இருக்கும். அவருடைய இன்னொரு மகனான ஜெயந்துக்கும் ஒரு பண்ணை இல்ல நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்களுக்கான ஒதுக்கீட்டில் குலுக்கல் முறையில் ஒதுக்கப்பட்டது என்று பூஷண்கள் சொல்கிறார்கள். அந்த ஒதுக்கீடு தற்செயலானதா அல்லது திட்டமிட்டு கொடுக்கப்பட்டதா என்பது வேறு விஷயம். ஆனால் லோக்பால் சட்ட மசோதாவை உருவாக்கும் குழுவில் இருந்து பூஷண்கள் விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுவாகத் தொடங்கி விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இதை எல்லாம் பார்க்கும்போது என்ன எண்ணம் தோன்றுகிறது? பதவிகளில் இருப்பவர்களை விட அதிகாரத்தை எதிர்ப்பவர்கள் மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும் போலிருக்கிறது!&lt;br /&gt; &lt;br /&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12453184-8196373182174930618?l=stationbench.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://stationbench.blogspot.com/feeds/8196373182174930618/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12453184&amp;postID=8196373182174930618' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/8196373182174930618'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/8196373182174930618'/><link rel='alternate' type='text/html' href='http://stationbench.blogspot.com/2011/05/blog-post.html' title='“அடங்க மறுத்தால் அவதூறு செய்”!'/><author><name>ஜென்ராம்</name><uri>http://www.blogger.com/profile/01132053348035137568</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12453184.post-7981261215695481863</id><published>2011-04-25T06:52:00.001+05:30</published><updated>2011-04-25T06:54:39.563+05:30</updated><title type='text'>அரசியல் இடைவெளி!</title><content type='html'>“திடீரென்று ஏதாவது முக்கியமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றால் என்ன செய்வது? தேர்தல் ஆணையத்துக்குத் தான் வெளிச்சம்! அதிகாரிகளின் நிலை என்ன? திரிசங்கு சொர்க்கம்தான்” என்று முதலமைச்சர் கருணாநிதி ஆதங்கப்பட்டிருக்கிறார். கடந்த ஏப்ரல் 13-ம் தேதி தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்பான முறையில் நடந்து முடிந்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கை வருகிற மே 13-ம் தேதி நடைபெறும். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு புதிய அரசு மே மாதம் 17-ம் தேதிக்குள் பொறுப்பேற்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அறிவிப்பை எல்லாம் தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் முதல் தேதியே அறிவித்து விட்டது. அன்று முதல் வாக்கு மே 15-ம் நாள் வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். வாக்குப் பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் இருக்கும் ஒரு மாத இடைவெளிதான்  முதலமைச்சர் கருணாநிதியை அப்படிப் பேச வைக்கிறது! &lt;br /&gt;&lt;br /&gt;எத்தனையோ கோரிக்கைகளை மக்கள் அரசாங்கத்திடம் முன்வைத்திருக்கிறார்கள்; அவை அரசாங்கத்தால் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படுவதற்காக எத்தனையோ வருடங்கள் காத்திருந்திருக்கிறார்கள்; எத்தனை அரசாங்கங்கள் மாறினாலும் அவர்களுடைய பல கோரிக்கைகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து டெல்லிக்குக் கடிதங்கள் போயிருக்கலாம்; பிரதமரிடம் இருந்தோ, ஆளும் கூட்டணித் தலைவரிடம் இருந்தோ பதில்கள் வந்திருக்கலாம்; ஆனால் மக்களுடைய பிரச்னைகள் தீராமல் வருடக்கணக்காக அப்படியே நீடித்துக் கொண்டிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;‘இருந்தும் இல்லாத’ அரசுக்கு பெரும்பான்மையான மக்கள் பழகி விட்டார்கள். காத்திருப்பது அவர்களுக்குப் புதிதல்ல. ஆனால் அரசியல் தலைவர்களால் காத்திருக்க முடிவதில்லை. கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் என்பதை அவர்களால் ஏற்க முடியவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;வாக்குப் பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையிலான ஒரு மாத காலமும் மக்களுக்கான பணிகள் அப்படியே முடங்கி நிற்க வேண்டுமா? இதுவே கருணாநிதி உள்ளிட்ட சில அரசியல் தலைவர்களின் கேள்வி. சில ஊடகங்களும் இந்தக் கேள்வியை எழுப்புகின்றன. இந்தக் குரல்களின் எதிரொலியாகவோ அல்லது இயல்பாகவோ தேர்தல் நடத்தை விதிகளில் சிலவற்றை தேர்தல் ஆணையம் தளர்த்தி இருக்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt;ஏற்கனவே அரசாங்கத்தால் அனுமதி அளிக்கப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரலாம். ஆனால் ஒரு நிறுவனத்துக்கு அந்தப் பணி ஒப்படைக்கப்பட வேண்டுமானால், தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற வேண்டும். மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், துறைச் செயலாளர்கள் சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளலாம். குறிப்பிட்ட இடங்களைப் பார்வையிடலாம். ஆய்வுக் கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும். பேரணி, பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு உரிய விதிகளின்படி அனுமதி அளிக்கப்படும். ஆனால் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் மையங்களில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் கூட்டங்கள், பேரணிகள் நடத்த அனுமதி இல்லை. இப்படிப் பல விதிகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உருவாகி இயங்கி வரும் ஓர் அமைப்பு இந்திய தேர்தல் ஆணையம். அந்த அமைப்பு ஒரு மாநில நிர்வாகம் ஒரு மாத காலம் முடங்கி இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் என்று நினைக்கத் தோன்றவில்லை. எதிர்க்கட்சித் தலைவர்களும் சாதாரண பொது மக்களும் தேர்தல் ஆணையத்தைப்  பாராட்டுகிறார்கள். தேர்தல் நடந்து முடிந்த விதத்தைப் பார்க்கும்போது தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக நடந்து கொண்டதாகவும் சொல்ல முடியவில்லை. விதிகளை மீற முயன்றவர்களை அது கட்டுப்படுத்த முயன்றிருக்கிறது. விதி மீறல்களை முழுவதுமாக கட்டுப்படுத்தியது என்றும் சொல்ல முடியாதுதான்!&lt;br /&gt; &lt;br /&gt;பல ஊர்களில் இரவு இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டதாகவும் அப்போது வாக்குகளுக்காக பணம் கொடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. ஒரு சோறு பதமாக, மதுரை மேற்கு தொகுதியில் வார்டு வார்டாக எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்ற விவரம் அடங்கிய நாற்பது பக்க நோட்டு சிக்கி இருக்கிறது. முறைகேடுகளை நூறு சதவீதம் தடுக்க முடியவில்லை என்றாலும் கூட,  தேர்தல் ஆணையம் எடுத்த முயற்சிகளைப் பாராட்டாமல் இருக்க முடியாது! &lt;br /&gt; &lt;br /&gt;தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படுகிறதா? அல்லது தி.மு.க.வுக்கு எதிராக செயல்படுகிறதா? வாக்குப் பதிவுக்கும் வாக்கு  எண்ணிக்கைக்கும் இடையில் இரண்டு வாரங்கள், மூன்று வாரங்கள் அல்லது நான்கு வாரங்கள் என்று இடைவெளி இதுவரை எந்த மாநிலத்திலும் இருந்ததே இல்லையா? கொஞ்சம் நினைவுகளைப் பின்னோக்கிப் பாருங்கள். 2006-ல் மேற்கு வங்கம், கேரளா, அசாம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தல்களின்போது என்ன நடந்தது? அசாம் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடந்தது. முதல் கட்டமாக ஏப்ரல் 3-ம் தேதியும் அடுத்த கட்டமாக ஏப்ரல் 10-ம் தேதியும் தேர்தல் நடந்தது. முடிவுகள் மே மாதம் 11-ம் நாள் வெளியானது!&lt;br /&gt;&lt;br /&gt;2009 மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து ஆந்திரா, ஒரிசா மாநிலங்களுக்கு சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடந்தன. ஆந்திராவின் 294 தொகுதிகளுக்கு ஏப்ரல் 16, ஏப்ரல் 23 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. முடிவுகள் மே 16-ம் தேதி வெளிவந்தன. ஒரிசாவில் 147 தொகுதிகளுக்கு அதே போல் அதே தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடந்தது. ஏறத்தாழ மூன்று வாரங்களுக்குப் பிறகே மே 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. &lt;br /&gt; &lt;br /&gt;2008-ல் சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 14 மற்றும் 20 தேதிகளில் இரு கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. முடிவுகள் அறிவதற்கு அந்த மாநில மக்கள்,  டிசம்பர் எட்டாம் தேதி வரை காத்திருந்தார்கள். காரணம் என்ன? ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 4-ம் தேதி வாக்குப்பதிவு இருந்தது! நான்கு மாநிலங்கள் அல்லது ஐந்து மாநிலங்களுக்கு சேர்த்து தேர்தல் நடக்கும் போது, எல்லா மாநிலங்களின் வாக்குப்பதிவும் முடிந்த பிறகே வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் ஆணையம் சமீப வருடங்களில் இந்த நடைமுறையைப் பின்பற்றி வருகிறது. இதுவரை தமிழ்நாட்டு மக்கள் முடிவுகளுக்காக இத்தனை நாட்கள் காத்திருந்ததில்லை. ஆனால் சில மாநிலங்களுக்கான தேர்தலை சேர்த்து நடத்தும்போது, ஏதாவது ஒரு மாநில மக்கள் இதைப் போல முடிவுகளுக்கு சில வாரங்கள் காத்திருக்க நேர்கிறது! 1996 முதல்  - இடையில் ஒன்றரை வருடம் நீங்கலாக – மத்திய அரசில் பங்கேற்று வரும் தி.மு.க.வுக்கு இந்த விபரங்கள் எல்லாம் நிச்சயம் தெரியும். பிறகு ஏன் திமுக தலைமை தேர்தல் ஆணையத்தைக் கண்டித்துக் கொண்டே இருக்கிறது? அது வேறு எங்கோ யார்மீதோ எதற்காகவோ ஏற்பட்ட வருத்தம் அல்லது கோபம் என்றே நினைக்கத் தோன்றுகிறது!&lt;br /&gt;   &lt;br /&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12453184-7981261215695481863?l=stationbench.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://stationbench.blogspot.com/feeds/7981261215695481863/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12453184&amp;postID=7981261215695481863' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/7981261215695481863'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/7981261215695481863'/><link rel='alternate' type='text/html' href='http://stationbench.blogspot.com/2011/04/blog-post_9631.html' title='அரசியல் இடைவெளி!'/><author><name>ஜென்ராம்</name><uri>http://www.blogger.com/profile/01132053348035137568</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12453184.post-2458879884116598158</id><published>2011-04-25T06:50:00.001+05:30</published><updated>2011-04-25T06:52:34.984+05:30</updated><title type='text'>“நோய்கள்” தொலையட்டும்!</title><content type='html'>“உச்சநீதிமன்றத்தில் டாக்டர் பினாயக் சென்னுக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. இதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அவர் சொல்லி இருக்கிறார். அவர் யாராக இருக்கும் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா? பினாயக் சென்னின் மனைவி இலினா சென்? அவருடைய மகள்? அவருடைய விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த மனித உரிமை ஆர்வலர்களில் ஒருவர்? அவர்கள் எல்லோருக்கும் பினாயக் சென்னின் விடுதலை மகிழ்ச்சி அளித்திருக்கும் என்பது உண்மைதான். ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்த சில நிமிடங்களில் இப்படி சொன்னது வேறு யாரும் அல்ல. நம்முடைய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தான்!&lt;br /&gt;&lt;br /&gt;மாவோயிஸ்டுகளுக்கு உதவி செய்பவர் என்று சத்தீஸ்கர் மாநில அரசு குற்றம் சாட்டியிருக்கும் ஒருவரை உச்சநீதி மன்றம் பிணையில் விடுவித்திருக்கிறது. அந்த மாவோயிஸ்டுகளை பிரதமர் மன்மோகன்சிங் எப்படி அழைக்கிறார்? ‘உள்நாட்டு அச்சுறுத்தல்’ என்றே அவர் அவர்களைக் குறிப்பிடுகிறார். அவருடைய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருக்கும் ஒருவர் பினாயக் சென்னின் விடுதலைக்காக ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்? ஏனென்றால், அவருக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. விசாரணை நீதிமன்றங்களிலும் உயர்நீதி மன்றங்களிலும் கொடுக்கப்பட்ட தீர்ப்புகள் ஒருவருக்கு அதிருப்தி அளிக்கிறது என்றால் அவர் மேல்முறையீடு செய்யலாம்; அந்த மேல்முறையீட்டில் அவருக்கு நியாயம் கிடைக்கலாம்; அதுவே அவருடைய நம்பிக்கை. பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை வழங்கி சத்தீஸ்கர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பலருக்கு அதிருப்தியைக் கொடுத்தது. அவருடைய ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மேல்முறையீட்டில் அவருக்கு இப்போது ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் அவருடைய நம்பிக்கைக்கு வலு சேர்ந்திருக்கிறது. அதனால் அவருக்கு மகிழ்ச்சி வருகிறது! &lt;br /&gt;ஆனால், மேல்முறையீட்டில் நியாயம் கிடைக்கும் வரை கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகளால் ஒருவர் அடையும் பாதிப்புகளுக்கு என்ன பரிகாரம் கிடைக்கிறது? டாக்டர் பினாயக் சென்னையே எடுத்துக் கொள்ளுங்கள். அவரை கடந்த 2007-ம் வருடம் மே மாதம் சத்தீஸ்கர் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. விசாரணை நீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. உலகம் முழுவதும் இருக்கும் பல அறிஞர்கள் அவருடைய விடுதலைக்காக குரல் கொடுத்தார்கள். இரண்டு வருடங்கள் கழிந்த பிறகு 2009-ம் வருடம் மே மாதத்தில் உச்சநீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுதலை செய்தது.&lt;br /&gt;ஆனால் அவர் தொடர்ந்து இரண்டு வருடங்கள் கூட சுதந்திரமாக மக்களோடு இருக்க முடியவில்லை. கடந்த 2010 டிசம்பர் 24-ம் தேதி ரெய்ப்பூர் அமர்வு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை கொடுத்து தீர்ப்பு அளித்தது. மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு இப்போது ஏப்ரல் 15-ம் தேதிதான் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீனில் விடுதலை கொடுத்திருக்கிறது. நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வரும்போது அவர் இரு விரல் காட்டி ‘வெற்றி’ என்று சொல்லி மகிழலாம். ஆனால் அவர் பெயரைச் சொன்னவுடன் நமக்கு என்ன பிம்பம் நினைவுக்கு வருகிறது? பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக அவர் எடுத்த முயற்சிகள் எல்லாம் பிம்பமாக நம் கண்முன் வரவில்லை. மாறாக ஒரு காவல்துறை வாகனத்தில் கம்பிகளுக்குப் பின்னால் மன உறுதியுடனும் தீர்க்கமான கண்களுடனும் இருக்கும் பினாயக் சென்னின் முகமே நம் மனதில் நிற்கிறது. இது நமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;பினாயக் சென்னின் குடும்பத்தின் உணர்வுகள் எப்படி இருக்கும்? அம்மா அனுசுயா சென்னுக்கு வயது 84. அவர், “இந்திய நீதிமன்றங்களின் மேல் நான் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகரிக்கிறது” என்றும் “வாய்மையே வெல்லும்” என்றும் நெகிழ்ச்சியோடு சொல்லி இருக்கிறார். மனைவி இலினா சென்னின் உணர்வுகளை யாராலும் விவரிக்கவே முடியாது. இந்த விடுதலைக்கான கடுமையான போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் அவரே! பினாயக்கின் மகள் அபராஜிதா, “ அப்பா சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து  எங்கள் குடும்பம் நிலைகுலைந்து போய் இருந்தது. இப்போது நான் அப்பாவை சந்திப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்” என்று பாசத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். அம்மா, மனைவி, மகள் எல்லோரையும் பரிதவிக்கச் செய்யும் விதத்தில் அந்த மருத்துவரை சத்தீஸ்கர் அரசு ஏன் குறி வைத்து அடிக்கிறது? &lt;br /&gt;&lt;br /&gt;உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்யும்போது என்ன சொல்லி இருக்கிறது? “நம்முடைய நாடு ஒரு ஜனநாயக நாடு; பினாயக் சென் நக்சலைட்டுகளின் ஆதரவாளராக இருக்கலாம்; ஆனால் அதுவே ராஜ துரோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டுக்கு இடம் அளிக்காது” என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. “நக்சலைட்டுகளின் பிரசுரங்களையும் இலக்கியங்களையும் அவர் வைத்திருந்தார் என்பதால் அவர் நக்சலைட் ஆகிவிடுவதில்லை; காந்திய இலக்கியங்களை ஒருவர் வைத்திருந்தால் அவரை காந்தியவாதி என்று சொல்லி விட முடியுமா?” என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி கேட்டிருக்கிறார். பினாயக் சென்னை பிணையில் விடுவிப்பதற்கு எந்தக் காரணத்தையும் உச்சநீதிமன்றம் சொல்லவில்லை. பிணை நிபந்தனைகளையும் அது முன்வைக்கவில்லை. அவற்றை எல்லாம் சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றமே பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டது!&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச சமூகத்துக்குத் தெரிந்த முகமாக பினாயக் சென் இருக்கிறார். அவரை சத்தீஸ்கர் மாநில அரசு கைது செய்து சிறையில் அடைத்த போது உலகம் எங்கும் இருந்து அவருக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன. வெளி உலகத்துக்குத் தெரிய வராத எத்தனைபேர் இவரைப் போல இன்னும் நம்முடைய சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்களோ என்ற எண்ணம் ஒரு மனிதனுக்குள் இயல்பாக எழுவதை யாராவது தடுக்க முடியுமா? கொலை, கொள்ளை, வல்லுறவு வழக்குகளில் எல்லாம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் குற்றவாளிகள் என்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கும் ஜாமீன் கிடைக்கிறது. ஆனால் பினாயக் சென் மாதிரியான மக்கள் சேவகருக்கு இவ்வளவு நீண்ட நீதிமன்றப் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. இந்த உண்மை நமக்கு கவலை அளிக்கிறது. ஆனால் ஒரு விஷயத்துக்காக நாம் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். சத்தீஸ்கர் சிறையில் கைதிகளுக்குள் நடந்த மோதலில் பினாயக் சென் தாக்கப்பட்டார் போன்ற செய்தி எதுவும் இதுவரை வரவில்லை. அதற்காக முதலமைச்சர் ராமன்சிங்குக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;பினாயக் சென் போன்ற மனிதர்களை ஓர் அரசு அலைக்கழிப்பதைப் பார்த்தால் நாம் எப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது. இங்கே சிறையில் இருக்க வேண்டியவர்கள் வெளியில் பெரிய மனிதர்களாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்; வெளியில் மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய சிலர், சிறைகளில் ‘வெளிச்சம்’ இல்லாமல் இருக்கிறார்கள்; ஆட்சியில் இருக்க வேண்டியவர்கள் முகவரியில்லாமல் சமூகத்தில் அங்கும் இங்குமாகத் திரிகிறார்கள்; ஒரு சமூகத்தில் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள். நாம் என்ன செய்கிறோம்? விரலில் மை தடவிக் கொண்டு முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்! &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12453184-2458879884116598158?l=stationbench.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://stationbench.blogspot.com/feeds/2458879884116598158/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12453184&amp;postID=2458879884116598158' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/2458879884116598158'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/2458879884116598158'/><link rel='alternate' type='text/html' href='http://stationbench.blogspot.com/2011/04/blog-post_7742.html' title='“நோய்கள்” தொலையட்டும்!'/><author><name>ஜென்ராம்</name><uri>http://www.blogger.com/profile/01132053348035137568</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12453184.post-3889754984269081665</id><published>2011-04-25T06:48:00.000+05:30</published><updated>2011-04-25T06:50:35.341+05:30</updated><title type='text'>அன்னா ஹசாரே</title><content type='html'>“நீங்க இப்படிச் செய்வீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லைங்க” என்று செந்தில் பெருமாள் சொன்னார். அவன் மேல் அவருக்கு பயங்கர கோபம். செந்திலும் இன்னும் மூன்று நண்பர்களும் ஒரு பேரணியில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலியில் இருந்து மயிலாடுதுறைக்கு போக வேண்டும். அவனும் அன்று நாகப்பட்டினத்துக்குப் போக வேண்டியிருந்தது. இந்த சம்பவம் நடந்த வருடம் 1984. அப்போது திருநெல்வேலியில் இருந்து நாகப்பட்டினத்துக்கு ஒரே ஒரு பஸ்தான் இருந்தது. அவன் நாகப்பட்டினம் போய் அங்கிருந்து பஸ் பிடித்து காரைக்கால் போகவேண்டும். அங்குதான் அவன் அப்போது வேலைபார்த்துக் கொண்டிருந்தான். செந்திலும் அவருடைய மூன்று நண்பர்களும் மறுநாள் மயிலாடுதுறையில் பேரணியில் கலந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt; &lt;br /&gt;திருநெல்வேலியில் இருந்து புறப்படும் பஸ்ஸில் டிக்கட் இல்லை என்றால், அவர்கள் எல்லோரும் மதுரை போய், அங்கிருந்து தஞ்சாவூர் போக வேண்டும். அங்கிருந்து அவன் நாகப்பட்டினத்துக்கும் மற்றவர்கள் மயிலாடுதுறைக்கும் போக வேண்டும். அந்த எளிய நண்பர்களுடன் அவன் பயணம் செய்வது அதுவே முதல் முறை. அவர்கள் அவனுடைய ஊர்க்காரர்கள். வாழ்க்கை நடத்துவதற்கே மிகவும்  கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள். அதேசமயம் அந்த ஊரில் எல்லாம் நியாயமாக நடக்க வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருந்தவர்கள். அதனால் அவர்கள் இந்தப் பயணத்தில் கஷ்டப்படுவதையும் அவன் விரும்பவில்லை. அந்த பஸ் கண்டக்டர் அவனிடம் ஒரு டிக்கெட்டுக்கு ஐந்து ரூபாய் கூடுதலாகக் கேட்டார். அவன் தருவதாக சம்மதித்தான். ஐந்துபேருக்கும் டிக்கெட் கிடைத்தது.&lt;br /&gt; &lt;br /&gt;பஸ் புறப்பட்ட பிறகு கண்டக்டர் வந்து டிக்கெட் கொடுக்கும்போது மற்றவர்களுக்கு அந்த உடன்பாடு தெரிந்து விட்டது. அவர்களுக்கு அவனுடைய அந்த செயல் பிடிக்கவில்லை. அப்போதுதான் செந்தில் பெருமாள் கோபமாக அப்படிச் சொன்னார். அவன் சொன்ன சமாதானத்தை அவர்கள் ஏற்கவில்லை. “உங்கள் மீது ரொம்ப மரியாதை வைத்திருந்தோம்; இந்த மாதிரி கூடுதலாக பணம் கொடுத்து டிக்கெட் எடுப்பீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை” என்று எகிறிக் கொண்டே இருந்தார்கள். தமிழ்நாட்டின் தென்கோடியில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த மனிதர்கள். பேசுவதை மெதுவாகப் பேச வேண்டும் என்ற ‘நாகரிகம்’ எல்லாம் அவர்களுக்குத் தெரியாது. அந்த உரையாடல்களை பஸ்ஸில் பலர் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். அவனுக்கு அவன் செய்த தவறு புரிந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;ஊழலைத் தடுக்கும் அதிகாரம் கொண்ட லோக்பால் அமைப்பு குறித்த  ‘சரியான’ சட்டத்துக்காக அன்னா ஹசாரே டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். கறுப்புப் பணத்திலே மூழ்கி முத்தெடுக்கும் மும்பை திரையுலகம் அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவளிக்கிறது. அவருடைய போராட்டத்துக்கு மத்திய அரசு பணிந்தது என்ற செய்தியில் பாலிவுட் மகிழ்கிறது. ஊழலைக் கண்டுபிடித்து விசாரித்து தண்டனை அளிக்கும் அதிகாரம் கொண்ட ‘லோக்பால்’ அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை. அதாவது ஊழல் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத் தவறு என்று வெளிப்படையாக சொல்லும் தைரியம் யாருக்கும் கிடையாது. அதேசமயம் அதிகாரத்தில் இருப்பவர்களும் இருந்தவர்களும் பல ஆண்டுகளாக இதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை என்பது தனிக்கதை!  &lt;br /&gt;&lt;br /&gt;லோக்பாலின் அதிகாரங்கள், நடைமுறைகள் குறித்து அரசாங்கம் தயாரித்து வைத்திருக்கும் மசோதாவுக்கும் மக்கள் சார்பாக தயாரிக்கப்பட்டிருக்கும் முன்வரைவுக்கும் இடையில் வேறுபாடுகள் இருக்கின்றன. மக்கள் முன்வரைவை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்னா ஹசாரே உள்ளிட்டவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதற்கு இந்தியாவின் பல பகுதிகளிலும் ஆதரவு பெருகியது. இறுதியில் மத்திய அரசு ‘பணிந்தது’ என்று செய்தி வந்தது. அரசும் அன்னா ஹசாரேயும் இணைந்து ஒரு குழுவை உருவாக்கினார்கள். அந்தக் குழு வருகிற 18-ம் தேதி கூடும் என்று தெரிகிறது. எகிப்தில் விடுதலைச் சதுக்கத்தில் முபாரக்குக்கு எதிராக நடந்த போராட்டத்தைப் போல டெல்லி ஜந்தர் மந்தரில் அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரதம் இருந்ததாக சில ஊடகங்கள் பாராட்டின. &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையிலேயே ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தீவிரமாக இருக்கிறதா? 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான விஷயங்களில் கபில் சிபல் என்ன பேசினார் என்பதை நாம் மறந்து விட வேண்டும் போலிருக்கிறது. முன் எப்போதையும் விட இப்போது ஊழல்கள் குறித்த செய்திகள் அதிகம் வெளி வருகின்றன. யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வீடு தேடி வந்து பணம் கொடுக்கும் சீரழிந்த நடைமுறையை நாம் இப்போதுதான் பார்த்து முடித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனநாயக அமைப்பைக் கேலிக்குரியதாக்கும் செயலை என் கட்சிக்காரர் செய்தாலும் அவரை படுமோசமாக தோற்கடியுங்கள் என்று அறைகூவல் விடுவதற்கு எந்தக் கட்சித் தலைமையும் தயாராக இல்லை. “எனக்குத் தெரிந்து நியாயமான முறையில் நேர்மையான வேட்பாளர்களையே தேர்ந்தெடுத்திருப்பதாக நான் நினைக்கிறேன். என்னை அறியாமல் நான் தவறான வேட்பாளர்களைத் தேர்வு செய்திருந்தால், அவர்களை நிச்சயமாகத் தோற்கடியுங்கள்” என்று ஜவகர்லால் நேரு பிரசாரம் செய்தாராம். அந்த நேர்மையை இன்று எந்தக் கட்சியிடம் இருந்தும் எதிர்பார்க்க முடியவில்லை! ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களையே ஊழல் தடுப்புக்கு ஆணையராகப் போடும் அரசாங்கத்திடம் இருந்து எந்த விதமான ஊழல் தடுப்பு சட்டங்களை எதிர்பார்க்க முடியும்?&lt;br /&gt; &lt;br /&gt;அதேசமயம் ‘எல்லாமே மோசம்’ என்ற அவநம்பிக்கையுடன் எல்லா விஷயங்களையும் அணுகுவதும் தவறு என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அடிப்படையில் அமைப்புரீதியான மாறுதல்களுக்கான போராட்டமாக அன்னா ஹசாரேயின் போராட்டம் இல்லை என்பது சரிதான். அதற்காக அன்னா ஹசாரே போன்றவர்கள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பொருள் கொள்ள வேண்டாம். இருக்கும் நிலையில் இருந்து ஓர் அங்குலம் முன்னேறிப் போக முடிந்தாலும் அதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அந்த ஓர் அங்குல முன்னேற்றமே சர்வரோக நிவாரணி என்று யாராவது சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை எல்லாம் ஊடகங்கள் பார்த்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கும் இந்த நாட்களில் எனக்குள் வேறு சில கேள்விகள் எழுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மணிப்பூரில் பத்து வருடங்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருக்கும் ஐரோம் சர்மிளா சானுவுக்கு ஏன் ஊடகங்களில் இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை? மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்து நிற்கும் மருத்துவர் பினாயக் சென் சத்தீஸ்கர் அரசால் சிறையில் அடைக்கப்பட்டாரே,  இந்திய நடுத்தர வர்க்கம் ஏன் கிளர்ந்து எழவில்லை? பரபரப்பு ஊடகங்களும் அரசாங்கமும் அன்னா ஹசாரேயை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால், அந்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தால் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற முடிவுக்கே வர நேர்கிறது! &lt;br /&gt; &lt;br /&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12453184-3889754984269081665?l=stationbench.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://stationbench.blogspot.com/feeds/3889754984269081665/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12453184&amp;postID=3889754984269081665' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/3889754984269081665'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/3889754984269081665'/><link rel='alternate' type='text/html' href='http://stationbench.blogspot.com/2011/04/blog-post_1234.html' title='அன்னா ஹசாரே'/><author><name>ஜென்ராம்</name><uri>http://www.blogger.com/profile/01132053348035137568</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12453184.post-543314840539549389</id><published>2011-04-25T06:43:00.001+05:30</published><updated>2011-04-25T06:48:17.813+05:30</updated><title type='text'>“நான் ஃபார்ம் ஆயிட்டேன்யா!”</title><content type='html'>“தேர்தல் முடிந்த பிறகு இங்கே திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள்; அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள்; தேமுதிக, பாமக, இடதுசாரி எம்.எல்.ஏக்கள் இருப்பார்கள்; ஆனால் தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினர்களாக அவர்கள் ஒரு நாளும் இருக்க மாட்டார்கள்” என்றார் ஒரு நண்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;“எப்படி நீ அப்படி சொல்கிறாய்? அவர்கள் எல்லோருமே தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்கள் தானே?” என்று அப்பாவியாக கேட்டார் இன்னொரு நண்பர்.&lt;br /&gt; &lt;br /&gt;“ஆம்! அவர்கள் எல்லோருமே தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் தான். ஆனால் தமிழ்நாட்டின் நலனுக்காக செயல்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை. அவர்களுடைய சுயநலத்துக்காக, அவர்களுடைய குடும்ப நலன்களுக்காக, அவர்களுடைய கட்சி நலனுக்காக செயல்படும் உறுப்பினர்களாகவே இருக்கிறார்கள்” என்று பதில் சொன்னார் முதல் நண்பர். அதற்கு மேல் அந்த உரையாடல் தொடரவில்லை. ஆனால் அங்கு இருந்த எல்லோருடைய மனதிலும் அந்த வார்த்தைகள் சிந்தனையைத் தூண்டியிருக்கும்! &lt;br /&gt;&lt;br /&gt;தமிழக சட்ட மன்றத் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களின் சொத்துப் பட்டியலைப் பாருங்கள். 2006 தேர்தலில் நிற்கும்போது அவர்களிடம் இருந்ததாக அவர்கள் சொல்லிய சொத்துக்கள், 2011-ல் பல மடங்கு அதிகமாகி இருக்கின்றன. பினாமிகளின் பெயரில் இருப்பவை இந்தப் பட்டியலில் இருக்காது என்பது வேறு விஷயம். இந்த ஐந்து வருடங்களில் அவர்களுடைய  சொத்துக்களின் மதிப்பு எப்படி அதிகரிக்கிறது? “குடும்பத்தோடு உழைக்கும் நாங்கள் கையேந்தி நிற்கிறோம்; ஒரு வேலையும் செய்யாத நீ எங்களுக்கு ஓட்டுப் போட பணம் கொடுக்க வருகிறாயே! எங்கிருந்து வந்தது இந்தப் பணம்?” என்று மேடைகள் தோறும் சீமான் முழங்குகிறார். அந்த வித்தை தெரிந்தவர்கள்தான் தேர்தலில் நிற்க முடிகிறது. ஏழைகளிடம் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்குகளை வாங்குகிறார்கள். பணக்காரர்களிடம் இருந்து பணத்தைக் கறந்து விடுகிறார்கள். அவர்களிடம் இருந்து இவர்களையும் இவர்களிடம் இருந்து அவர்களையும் காப்பாற்றுவோம் என்று இரு தரப்புக்கும் வாக்குறுதியை அள்ளி வீசுகிறார்கள். இது ஓர் ஏமாற்று வித்தை!&lt;br /&gt; &lt;br /&gt;இப்போது நடக்க இருக்கிற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 240 கோடீஸ்வரர்கள் வேட்பாளர்களாகப் போட்டியிருகிறார்கள் என்கிறது ஒரு செய்தி. மொத்தம் இருப்பது 234 தொகுதிகள். சராசரியாக ஒரு தொகுதிக்கு ஒரு வேட்பாளராவது கோடீஸ்வரராக இருக்கிறார் என்பதே இதில் இருந்து நாம் அறிந்து கொள்ளக் கூடிய தகவல். 1996 தேர்தலுக்குப் பிறகு 500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய கட்டுகள் ஆற்றில் தூக்கிப் போடப்பட்டன என்றெல்லாம் செய்திகள் வந்தன. இப்போது அதைப் போலவே எங்கெல்லாமோ இருந்து லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்படுகின்றன. 20 லட்ச ரூபாய் கொண்ட சூட்கேஸை ரோட்டில் வீசி விட்டு இளைஞர்கள் ஓடியதாக ஒரு செய்தி. ஒரு டீக்கடையில் லட்சக்கணக்கான பணம் பிடிபட்டிருக்கிறது. பணம் கொடுத்து ஓட்டு வாங்க நினைக்கும் அடாவடிகளை தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் கட்டுப்படுத்துகின்றன. உடனே ‘அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை’ தமிழ்நாட்டில் நிலவுவதாக முதலமைச்சர் கருணாநிதியே சொல்கிறார்!&lt;br /&gt; &lt;br /&gt;நெருக்கடி நிலையில் நடந்தது என்ன? எதிர்க்கட்சிகள் மற்றும் சாதாரண மக்கள் அனைவருடைய ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்பட்டன. பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பதெல்லாம் தடை செய்யப்பட்டன. செய்திகள் அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டன. திமுகவில் யாரெல்லாம் கைது செய்யப்பட்டார்கள் என்ற தகவலை நேரடியாக முரசொலியால் வெளியிட முடியாது. “அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வராதவர்கள்” என்று ஒரு பட்டியலை அந்தக் கட்சி வெளியிடும். அதில் இருந்து தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சட்டத்தின் ஆட்சி ஒரு கும்பலால் முழுவதுமாக அவர்களுக்கு சாதகமாக வளைக்கப்பட்டது.  உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டை சர்வாதிகார நாடாக மாற்றி அமைத்தார்கள். இவ்வளவையும் செய்தது யார்? இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி மற்றும் அவர்களைச் சுற்றி இருந்த கும்பல்! தமிழ்நாட்டில் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? தி.மு.க, இடதுசாரிகள், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட ஏராளமானவர்கள்! இப்போது ஏன் கருணாநிதி அதை எல்லாம் மக்களுக்கு நினைவூட்டுகிறார்? அவருடன் தானே காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்கிறது? &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உருவான சுதந்திரமான அமைப்பு தேர்தல் ஆணையம். அது என்ன செய்கிறது?  ‘எமர்ஜென்சி’யில் நடந்ததைப் போல சட்டத்தை தங்கள் இஷ்டப்படி வளைக்கிறதா? மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை அமல்படுத்துகிறது. இதை எப்படி நெருக்கடி நிலையுடன் ஒப்பிட முடியும்? ஆட்சியை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நெருக்கடி கருணாநிதிக்கு இருக்கலாம்; அதையே அவர் நெருக்கடி நிலை என்று சொல்லி இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்!&lt;br /&gt;தேர்தல் களத்திலே மக்களுடைய நெருக்கடிகளையும் பிரச்னைகளையும் யாராவது பேசுகிறார்களா என்று தேடித் தான் பார்க்க வேண்டியிருக்கிறது. ராஜாஜி, காமராஜ், அண்ணா, காயிதே மில்லத், ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, ஈ.வி.கே.சம்பத், கருணாநிதி, நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோர் பிரசாரம் செய்த சட்டமன்றத் தேர்தல்களைப் பார்த்தவர்கள் இன்னும் எல்லா குடும்பங்களிலும் இருப்பார்கள். அவர்களிடம் அந்த அனுபவத்தை இன்றைய இளைஞர்கள் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் இப்போதைய அரசியலில் நட்சத்திர பிரசாரகர்களாக இருக்கும் குஷ்பூ, வடிவேலு, சிங்கமுத்து போன்றவர்களை நாம் புரிந்து கொள்ள முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;சூப்பர் மேன் வடிவேலு இந்தத் தேர்தலில் மக்கள் முன் வைக்கும் தலையாய பிரச்னை என்ன? முள்ளி வாய்க்கால் படுகொலைகளா? விலைவாசி உயர்வா? 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளா? பல்வேறு அதிகார மையங்களாக உருவெடுத்திருக்கும் குடும்ப அரசியலா? கடந்த ஆட்சிகளின்போது ஜெயலலிதா மேற்கொண்ட மக்கள் விரோத நடவடிக்கைகளா? இவை எதுவுமே இல்லை. அவருக்கு எதுதான் முக்கிய பிரச்னை? விஜயகாந்த் என்ன குடித்தார்? எவ்வளவு குடித்தார்?  ஒரு அரசியல் கட்சியின் தலைவருடைய தனிப்பட்ட பழக்கம் எப்படி தேர்தல் பிரச்னை ஆகிறது? தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருக்கிறதா? விஜயகாந்த் குடிக்கிறார் என்றால் அது சட்டவிரோதமான செயலா? சட்ட விரோதமான செயல் அல்ல; ஆனால் ஒழுக்கக் கேடான செயல் என்று சிலர் பதில் சொல்லக் கூடும். அப்படியானால் மக்கள் அனைவரையும் குடிக்கத் தூண்டி ஒழுக்கம் இல்லாதவர்களாக வைத்திருப்பது அரசாங்கம் தான்! தமிழகத்தில் யார் மது விற்பனை செய்கிறார்கள்? மது விற்பனையின் ஏகபோக முதலாளி தமிழக அரசுதான்!&lt;br /&gt; &lt;br /&gt;ஆனால் இவை குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் வடிவேலு பேசிக் கொண்டிருக்கிறார். “நான் இந்த ஏரியாவுல ரவுடியா ஃபார்ம் ஆயிட்டேன்யா; என்னையும் அரெஸ்ட் பண்ணுங்க” என்று அவர் ஒரு காமெடி காட்சியில் நடித்திருப்பார். அதைப் போலவே இப்போது அவர் ஒரு அரசியல்வாதியாகவும் ‘ஃபார்ம்’ ஆகி விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12453184-543314840539549389?l=stationbench.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://stationbench.blogspot.com/feeds/543314840539549389/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12453184&amp;postID=543314840539549389' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/543314840539549389'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/543314840539549389'/><link rel='alternate' type='text/html' href='http://stationbench.blogspot.com/2011/04/blog-post_25.html' title='“நான் ஃபார்ம் ஆயிட்டேன்யா!”'/><author><name>ஜென்ராம்</name><uri>http://www.blogger.com/profile/01132053348035137568</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12453184.post-9188829934418045576</id><published>2011-04-07T13:26:00.000+05:30</published><updated>2011-04-07T13:29:23.614+05:30</updated><title type='text'>வரலாறு எப்படிப் பதிவு செய்யும்?</title><content type='html'>சாலையை மறித்து அந்த மேடையைப் போட்டிருந்தார்கள். சென்னை அண்ணாசாலையில் இருந்து எழும்பூர் வழியாக அண்ணாநகருக்கு வந்து கொண்டிருந்தோம். போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் நின்று அந்த வழியாக வரும் வாகனங்களை மாற்று வழியில் செல்லும்படி கேட்டுக் கொண்டிருந்தார்கள். என்னுடன் வந்த சிறுமி கேட்டாள். &lt;br /&gt;&lt;br /&gt;“எதற்காக இந்த மேடை போட்டிருக்காங்க?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஒரு அரசியல் கட்சி இந்த மேடையைப் போட்டிருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர்கள் வந்து இங்கு கூடியிருக்கற மக்களிடம் அவர்களுடைய கருத்துக்களை சொல்வாங்க” என்று நான் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“அவங்க கட்சிக்காரங்களுக்கு சொல்லணும்னா அதுக்கு மத்த மக்களை ஏன் தொந்தரவு பண்றாங்க?” &lt;br /&gt;&lt;br /&gt;அவள் விடவில்லை. அவள் ஒரு மாத விடுமுறையை சென்னையில் கழிப்பதற்காக ஒரு வெளிநாட்டில் இருந்து வந்திருந்தாள். அவளுக்கு இது போன்ற கூட்டங்கள் அறிமுகமாகி இருக்கவில்லை. நமக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை. ஒலிபெருக்கிகளின் சத்தம் நமக்கு எப்போதும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். இல்லை என்றால் நாம் ஜனநாயக நாட்டில்தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் நமக்கு வந்துவிடும்.&lt;br /&gt; &lt;br /&gt;“இதை மக்களுக்குத் தொல்லைன்னோ தொந்தரவுன்னோ  எப்படி சொல்ல முடியும்? இந்த மாதிரி கூட்டங்கள் போடாம மக்களுடைய பிரதிநிதிகள் வேற எப்படி மக்களோட பேச முடியும்? தண்ணிக்குள்ள மீன் இருக்கற மாதிரி மக்களுக்கு நடுவிலே தானே அரசியல்வாதி இருக்க முடியும்?” &lt;br /&gt;&lt;br /&gt;நான் பதில் கேள்வி கேட்டேன். பத்து வயதுச் சிறுமியின் பார்வையில் இந்த அரசியல் கூட்டங்கள் என்னவிதமான தோற்றத்தைக் கொடுக்கின்றன என்று அறியும் ஆர்வமும் எனக்கு அதிகரித்தது. நான் என்னுடைய பள்ளிப் பருவத்திலும் சரி, கல்லூரி காலங்களிலும் சரி, ஏராளமான கூட்டங்களுக்குப் போயிருக்கிறேன். மேடையில் ஒரு தலைவர் பேசி விட்டுப் போன பிறகு, அவர் பேசிய விஷயங்களை எல்லாம் திரும்பி வரும்போது விவாதித்துக் கொண்டே வருவோம். முப்பது முதல் முப்பத்தைந்து வருடங்கள் கழித்து அடுத்த தலைமுறையைச் சேர்ந்த சிறுமியிடம் பொதுக் கூட்டங்கள் பற்றி பேசிக் கொண்டு வருகிறேன் என்ற சிந்தனை எனக்குள் ஓடியது.&lt;br /&gt; &lt;br /&gt;“அறிக்கை கொடுத்தா அடுத்த நாள் பத்திரிகையில் வரப் போகிறது; ஏராளமான டி.வி. இருக்கு.. மக்களுக்கு என்ன சொல்லணுமோ அத டி.வி.ல பேச வேண்டியதுதானே! இது இந்தப் பகுதில வசிக்கற மத்த மக்களுக்கு தொந்தரவு தான். இதை அவங்க எதிர்த்து புகார் செய்ய மாட்டாங்களா?” &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கேள்விக்கு பதில் எதுவும் நான் சொல்லவில்லை. இந்த சம்பவம் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக நடந்தது. அது தேர்தல் காலமும் அல்ல; அந்த சிறுமியைப் போன்றவர்கள்  தேர்தல் காலத்தில் இங்கு இருந்தால் என்ன நினைப்பார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்னால் இருந்த மாதிரி இப்போது பிரசாரம் இல்லை. அந்த சிறுமியைப் போல யோசிக்கிறவர்கள் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். “உங்களை கடந்த ஐந்து வருடங்களாகப் பார்த்து வருகிறோம்; ஆட்சிக்கு வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை உங்கள் தேர்தல் அறிக்கைகள் மூலமாக நாங்கள் அறிந்தோம்; வாக்குப் பதிவு நாள் அன்று நாங்கள் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிப்போம்; அதுவரை எங்களைத் தொல்லை செய்யாதீர்கள்” என்ற மனநிலை நகர்ப்புறங்களில் அதிகமாகி இருப்பதாகவே தெரிகிறது. அவர்கள் சொல்லும் பலவிதமான தொல்லைகளைத் தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்திவிட்டது என்றே அவர்கள் கருதுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலை வெறும் பரபரப்பு நிகழ்ச்சியாகவோ திருவிழாவாகவோ சிலர் கருதுகிறார்கள்; அவர்கள் தான் ‘தேர்தல் நடக்கற மாதிரி எந்த அறிகுறியும்  தெரியலையே’ என்று அங்கலாய்க்கிறார்கள். தேர்தல் ஆணையம் செய்யும் ‘கெடுபிடிகள்’ காரணமாக தேர்தல் களத்தில் சில நடவடிக்கைகளைப் பார்க்க முடியவில்லை. அதைத்தான் ‘தேர்தல் அறிகுறிகளைக் காணோம்’ என்று அவர்கள் சொல்கிறார்கள். ஊடகங்களில் மட்டுமே தேர்தல் தொடர்பான பரபரப்பை பார்க்க முடிகிறது. மக்களிடம் வழங்குவதற்காக கொண்டு செல்லப்படும் பணம் கட்டுக்கட்டாக பிடிபட்டது என்ற செய்தி தினமும் வருகிறது. வி.ஐ.பி.க்களுடைய வாகனங்கள், காவல்துறை வாகனங்கள் எல்லாம் இந்தப் பண விநியோகத்துக்கு பயன்படுகின்றன என்று வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. &lt;br /&gt;தேவையற்ற கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் தளர்த்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசி இருக்கிறார். எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று ஆளும் கட்சி குறை கூறுகிறது.   என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சொல்லி இருக்கிறார். அவருக்குக் கொடுத்திருந்த பாதுகாப்புக் காவலர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதை அடுத்து அவர் இப்படிப் பேசி இருக்கிறார். இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையமே கதாநாயகனாக இருக்கிறது! &lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் கட்சிகள் செய்யும் பிரசாரத்தின் தரம் எப்படி இருக்கிறது? ஆளும் கட்சித் தரப்பில், அரசின் சாதனைகள் என்று இலவசத் திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றைப் போலவே இப்போது தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்று கருணாநிதி, ஸ்டாலின் போன்றவர்கள் விளக்குகிறார்கள். ஜெயலலிதா நம்பிக்கைக்கு உகந்தவர் இல்லை என்றும் அவர் சொல்வதை செய்ய மாட்டார் என்றும் திமுக சொல்லி வருகிறது. பண பலத்தை ஜெயலலிதா பயன்படுத்துகிறார் என்றும் தேர்தல் ஆணையம் சதி செய்கிறது என்றும் திமுக பேசுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை திமுகவின் பலவீனமாகவே மக்கள் பார்க்கிறார்கள். விஜயகாந்துக்கும் வடிவேலுவுக்கும் இடையில் இருந்த மனக்கசப்பை தன்னுடைய தேர்தல் ஆதாயத்துக்காக திமுக பயன்படுத்துகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக அணி வெற்றி பெற்றுவிடும் என்ற தோற்றத்தை விஜயகாந்த் அந்த அணியில் சேர்ந்ததன் மூலம் உருவாக்கி இருக்கிறார். தனியாக நின்று தங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்காமல் ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் இணைந்து நிற்பது திமுகவுக்கு எரிச்சல் தருகிறது. அதனால் வடிவேலுவைப் பிடித்து விஜயகாந்தை விளாசச் சொல்கிறார்கள். ஒரு கதாநாயகனை ஒரு காமெடி நடிகர் நேருக்கு நேர் எதிர்க்கிறார். விஜயகாந்தை சிறுமைப்படுத்த வேண்டும் என்று வடிவேலு பயன்படுத்தும் மலிவான உத்திகள் அவர் விரும்பும் பலனைத் தருமா என்பது சந்தேகமே!&lt;br /&gt; &lt;br /&gt;அதிமுக தரப்பில் ஜெயலலிதாவும் விஜயகாந்தும் ஸ்டார் பிரசாரகர்கள். அரசியலில் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம், 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு உள்ளிட்ட லஞ்சம் ஊழல், தமிழக மீனவர்கள், ஈழத்தமிழர்கள், விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளை பேசுகிறார்கள். அதிக முக்கியத்துவம் குடும்ப ஆதிக்கத்துக்கும் லஞ்சம் ஊழலுக்கும் கொடுக்கப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மேடைகளில் வெற்றிடம் ஒன்று தென்படுகிறது. 2ஜி அலைவரிசை பற்றியும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் பற்றியும் தொடர்ந்து பேசி வந்த குரல் ஒன்று பேசாமல் ஒதுங்கி நிற்கிறது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு நடக்கும் முதல் தேர்தல் இது. சாதாரண நாட்களில் மேடைகளில் முழங்கியவர்கள் இப்போது அதற்கு நீதி கேட்காமல் ஒதுங்கி நிற்கிறார்கள். வரலாறு அவர்களை எப்படிப் பதிவு செய்யும்?&lt;br /&gt;   &lt;br /&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12453184-9188829934418045576?l=stationbench.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://stationbench.blogspot.com/feeds/9188829934418045576/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12453184&amp;postID=9188829934418045576' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/9188829934418045576'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/9188829934418045576'/><link rel='alternate' type='text/html' href='http://stationbench.blogspot.com/2011/04/blog-post_3945.html' title='வரலாறு எப்படிப் பதிவு செய்யும்?'/><author><name>ஜென்ராம்</name><uri>http://www.blogger.com/profile/01132053348035137568</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12453184.post-1310223608157878956</id><published>2011-04-07T13:24:00.001+05:30</published><updated>2011-04-07T13:31:55.385+05:30</updated><title type='text'>காட்சிப் பிழைகள்</title><content type='html'>என்ன செய்வது என்றே சரவணனுக்குத் தெரியவில்லை. தீபாவளி செலவுக்காக அலுவலகத்தில் இருபதாயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தான்.  வீட்டுக்குப் புறப்படும்போது அவனிடம் அந்தப் பணம் இல்லை. அலுவலகத்திலேயே அது காணாமல் போயிருந்தது. அவனுடைய இருக்கைக்கு முன்னால் இருக்கும் மேஜையின் மேலோ அல்லது மேஜையின் டிராயருக்குள்ளோ அவன் கவருடன் வைத்திருக்கக் கூடும். காசாளரிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு வந்த்து நினைவிருக்கிறது. போகும் போது எடுத்துக் கொள்ளலாம் என்று எங்கோ வைத்தது ஞாபகம் இருக்கிறது. ஆனால் எங்கே இருந்து அது காணாமல் போனது என்பதை அவனால் நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை. அந்தக் கவர் அவனிடம்  இல்லை. யாரை சந்தேகப்படுவது?&lt;br /&gt; &lt;br /&gt;அன்று தீபாவளிக்கு முந்தைய நாள். சரவணனுடைய வீட்டுக்கு அந்த நண்பர் வந்தார். அவருடைய கையில் ஒரு பெரிய பை இருந்தது. பணத்தைப் பறிகொடுத்த சரவணன், அவனுடைய மனைவிக்கும் குழந்தைக்கும் புத்தாடைகள் வாங்கி இருக்க மாட்டான் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அவர்களுடைய குடும்பத்தில் ஏமாற்றமும் அசாதாரண அமைதியும் இருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். அதனால் அவர்களுடைய தேவை அறிந்து சரவணனுடைய குழந்தைக்கு புது ஆடையும் கொஞ்சம் இனிப்புகளும் பட்டாசுகளும் அவர் வாங்கி வந்திருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த நண்பரின் செயல் சரவணனுக்கும் அவனுடைய மனைவிக்கும் மிகப் பெரிய ஆறுதலைக் கொடுத்தது. ஆனால் அலுவலகத்தில் அவனுடைய பணத்தைத் திருடியதே அந்த நண்பர்தான் என்ற உண்மையை சரவணன் அறிந்திருக்கவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சரவணனின் நிலையில் தான் நாம் இருக்கிறோம். தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிகளும் நமக்கு என்னென்னவோ இலவசமாகத் தரப் போகின்றன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு யாருடைய ஆட்சி அமைந்தாலும், நமக்கு கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி, இலவச பஸ் பயணம், மடிக்கணினி எல்லாம் தரப் போகிறார்கள். மாவரைக்கும் எந்திரம், மிக்ஸி, ஃபேன் எல்லாம் கிடைக்கும் என்று சொல்கிறீர்களே, அப்படி என்றால் அ.தி.மு.க தான் அடுத்து ஆட்சி அமைக்கும் என்று சொல்கிறீர்களா என்று கேட்காதீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி அவை நமக்குக் கிடைக்கும். கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் எப்படி கிடைக்கும்? அவர் தான் “சொன்னதையும் செய்வார்; சொல்லாததையும் சேர்த்து செய்வார்” என்று பிரசாரம் செய்கிறார்களே! &lt;br /&gt;&lt;br /&gt;அதிமுகவின் தேர்தல் அறிக்கையை திமுக தேர்தல் அறிக்கையின் ஜெராக்ஸ் காப்பி என்று திமுகவினர் கிண்டல் செய்கிறார்கள். சென்ற இதழில் இந்தப் பகுதியில் நானும் திமுக அறிக்கையின் நீட்சி அதிமுகவின் தேர்தல் அறிக்கை என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால் இன்றைய சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்வைக்க முடியாத ஒரு வாக்குறுதியை, ஆட்சிக்கு வந்தால் செய்து தருவதாக ஜெயலலிதா உறுதி அளித்திருக்கிறார். கேபிள் தொழிலை அரசுடைமையாக்குவோம் என்றும் கட்டணமில்லாமல் இலவசமாக ‘கேபிள் கனெக்ஷன்’ மூலமாக  தொலைக்காட்சி சேவைகளை வழங்குவோம் என்றும் அவர் சொல்லி இருக்கிறார். ஒரு வகையில் இதுவும் கூட திமுகவின் செயல்திட்டத்தின் நீட்சிதான்!&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பத்துக்குள் முரண்பாடுகளும் பகை உணர்வும் தலைதூக்கிய காலத்தில் அரசு கேபிள் நிறுவனத்தைத் தொடங்கியது திமுக அரசு. “கண்கள் பனித்தன; நெஞ்சம் இனித்தது” என்று முதலமைச்சர் கருணாநிதி சொன்ன நாள் முதல் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அந்த திட்டத்துக்கு உயிர் கொடுப்பேன் என்பதே ஜெயலலிதாவின் வாக்குறுதி!  &lt;br /&gt;ஏற்கனவே மின்வெட்டால் அவதிப்படும் தமிழகத்தில் கிரைண்டர், மிக்ஸி, ஃபேன் என்று மின்சக்தி தேவைப்படும் கருவிகளாக கொடுக்கப் போகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இவற்றைப் பயன்படுத்துவதற்கான மின் ஆற்றலை எங்கிருந்து பெற முடியும்? சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதை ஊக்கப்படுத்துவோம் என்று அதிமுக தேர்தல் அறிக்கை சொல்கிறது. ஒரு வீட்டுக்கான மின் தேவைகளை எதிர்காலத்தில் சூரிய ஒளியில் இருந்து பெற்றுக் கொள்வதே நல்ல மாற்றாகத் தெரிகிறது. அனல் மின்சாரம் சுற்றுச்சூழலை மாசு படுத்துகிறது; அணு மின்சாரம் கதிரியக்க அபாயத்தைத் தன்னுள் கொண்டதாக இருக்கிறது; சூரிய ஒளி, காற்று, நீர் ஆகியவற்றில் இருந்து ஆற்றலைப் பெறுவதற்கான வழிகளுக்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பதே நல்லதாகத் தோன்றுகிறது. அந்த வகையில் இலவச அறிவிப்புகளைத் தாண்டி இது போன்ற சில ஒளிக்கீற்றுகளை அதிமுக தேர்தல் அறிக்கையில் காண முடிகிறது!&lt;br /&gt;  &lt;br /&gt;ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை குறைந்த விலையில் கொடுப்பதையும் அரிசி, கோதுமையை இலவசமாக கொடுப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. வறுமையை ஒழிப்போம் என்கிறோம்; ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று சொல்கிறோம்; எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் நம்பிக்கை அளிக்கிறோம்; இந்த வார்த்தைகள் சாதாரண மனிதர்களின் உள்ளங்களில் கோபம் வராமல் பார்த்துக்கொள்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இதை எல்லாம் மீறி, அவர்களுடைய வயிற்றில் எழும் பசித்தீ அவர்களைக் கோபமடைய வைத்து விட்டால் என்ன செய்வது?  அதற்காகத்தான் வறுமை ஒழிப்புத் திட்டங்களை நாம் முன் வைத்திருக்கிறோம்; இலவச அரிசி உட்பட பல  ‘மக்கள் நலத் திட்டங்களை’ நடைமுறைப்படுத்துகிறோம். விடுதலைச் சதுக்கங்களையோ மெமோரியல் ஹால்களையோ ஜந்தர் மந்தர்களையோ நோக்கி மக்கள் அணிவகுக்காமல் தடுப்பதற்கு ஓரளவு இவை காரணமாக இருக்கின்றன!&lt;br /&gt; &lt;br /&gt;நம்மை அல்லது நம்மோடு வாழும் சாதாரண மக்களை அரைகுறை வயிறோடும் உயிரோடும் வைத்திருக்க உதவும் சில இலவசங்களை விட்டு விடலாம். தொலைக்காட்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக நம்முடைய அரசாங்கம் எப்படித் தர முடிகிறது? இப்படிப் பல இலவசத் திட்டங்களை நமக்குக் கொடுத்து ‘கொடை வள்ளல்கள்’ போலவும் நம் வாழ்க்கையில் அக்கறை உள்ளவர்கள் போலவும் நம்முடைய  தலைவர்களால் எப்படி ஓர் ஆளுமையை உருவாக்கிக் கொள்ள முடிகிறது? &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ரூபாய் அரிசித் திட்டத்துக்கு 3750 கோடி ரூபாய் என்பதில் தொடங்கி நலத் திட்டங்களுக்காக ஒரு வருடத்துக்கு 15000 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்கிறது.  இந்த வருடம் டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசாங்கத்துக்குக் கிடைத்திருக்கும் வருமானம் ஏறத்தாழ 15000 கோடி ரூபாய்! நாட்டின் வளர்ச்சி விகிதம் ஏறுகிறதோ இல்லையோ, தமிழ்நாட்டில் மது விற்பனை ஒரு வருடத்துக்கு 15 முதல் 20 சதவீதம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வாங்கிய கூலியை வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுப்பதற்குள் உழைக்கும் மக்களிடம் இருந்து ’டாஸ்மாக்’ மூலமாகத் திருடி விடுகிறோம்; அதன் பிறகு அவர்கள் வீட்டுக்கு அரிசியும் கிரைண்டரும் மிக்ஸியும் கொண்டு கொடுக்கிறோம். முதல் வரியில் இருக்கும் சரவணனின் பணத்தைத்  திருடிவிட்டு குழந்தைக்கு பார்சல் கொண்டு வந்த நண்பருக்கும் நம்முடைய அரசாங்கத்துக்கும் என்ன வித்தியாசம்?&lt;br /&gt;  &lt;br /&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12453184-1310223608157878956?l=stationbench.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://stationbench.blogspot.com/feeds/1310223608157878956/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12453184&amp;postID=1310223608157878956' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/1310223608157878956'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/1310223608157878956'/><link rel='alternate' type='text/html' href='http://stationbench.blogspot.com/2011/04/blog-post_07.html' title='காட்சிப் பிழைகள்'/><author><name>ஜென்ராம்</name><uri>http://www.blogger.com/profile/01132053348035137568</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12453184.post-5959238173252288930</id><published>2011-04-07T13:14:00.001+05:30</published><updated>2011-04-07T13:24:13.734+05:30</updated><title type='text'>பொய்யை நீ விற்றாலும் பைசா பைசா!</title><content type='html'>&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:worddocument&gt;   &lt;w:view&gt;Normal&lt;/w:View&gt;   &lt;w:zoom&gt;0&lt;/w:Zoom&gt;   &lt;w:trackmoves/&gt;   &lt;w:trackformatting/&gt;   &lt;w:punctuationkerning/&gt;   &lt;w:validateagainstschemas/&gt;   &lt;w:saveifxmlinvalid&gt;false&lt;/w:SaveIfXMLInvalid&gt;   &lt;w:ignoremixedcontent&gt;false&lt;/w:IgnoreMixedContent&gt;   &lt;w:alwaysshowplaceholdertext&gt;false&lt;/w:AlwaysShowPlaceholderText&gt;   &lt;w:donotpromoteqf/&gt;   &lt;w:lidthemeother&gt;EN-IN&lt;/w:LidThemeOther&gt;   &lt;w:lidthemeasian&gt;X-NONE&lt;/w:LidThemeAsian&gt;   &lt;w:lidthemecomplexscript&gt;X-NONE&lt;/w:LidThemeComplexScript&gt;   &lt;w:compatibility&gt;    &lt;w:breakwrappedtables/&gt;    &lt;w:snaptogridincell/&gt;    &lt;w:wraptextwithpunct/&gt;    &lt;w:useasianbreakrules/&gt;    &lt;w:dontgrowautofit/&gt;    &lt;w:splitpgbreakandparamark/&gt;    &lt;w:dontvertaligncellwithsp/&gt;    &lt;w:dontbreakconstrainedforcedtables/&gt;    &lt;w:dontvertalignintxbx/&gt;    &lt;w:word11kerningpairs/&gt;    &lt;w:cachedcolbalance/&gt;   &lt;/w:Compatibility&gt;   &lt;w:browserlevel&gt;MicrosoftInternetExplorer4&lt;/w:BrowserLevel&gt;   &lt;m:mathpr&gt;    &lt;m:mathfont val="Cambria Math"&gt;    &lt;m:brkbin val="before"&gt;    &lt;m:brkbinsub val=""&gt;    &lt;m:smallfrac val="off"&gt;    &lt;m:dispdef&gt;    &lt;m:lmargin val="0"&gt;    &lt;m:rmargin val="0"&gt;    &lt;m:defjc val="centerGroup"&gt;    &lt;m:wrapindent val="1440"&gt;    &lt;m:intlim val="subSup"&gt;    &lt;m:narylim val="undOvr"&gt;   &lt;/m:narylim&gt;&lt;/m:intlim&gt; &lt;/m:wrapindent&gt;&lt;!--[endif]--&gt;&lt;!----&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;xml&gt;  &lt;w:latentstyles deflockedstate="false" defunhidewhenused="true" defsemihidden="true" defqformat="false" defpriority="99" latentstylecount="267"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="0" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Normal"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="9" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="heading 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="9" qformat="true" name="heading 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="9" qformat="true" name="heading 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="9" qformat="true" name="heading 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="9" qformat="true" name="heading 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="9" qformat="true" name="heading 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="9" qformat="true" name="heading 7"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="9" qformat="true" name="heading 8"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="9" qformat="true" name="heading 9"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" name="toc 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" name="toc 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" name="toc 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" name="toc 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" name="toc 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" name="toc 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" name="toc 7"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" name="toc 8"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" name="toc 9"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="35" qformat="true" name="caption"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="10" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Title"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="1" name="Default Paragraph Font"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="11" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Subtitle"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="22" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Strong"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="20" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Emphasis"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="59" semihidden="false" unhidewhenused="false" name="Table Grid"&gt;   &lt;w:lsdexception locked="false" unhidewhenused="false" name="Placeholder Text"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="1" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="No Spacing"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="60" semihidden="false" unhidewhenused="false" name="Light Shading"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="61" semihidden="false" unhidewhenused="false" name="Light List"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="62" semihidden="false" unhidewhenused="false" name="Light Grid"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="63" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="64" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="65" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="66" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="67" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="68" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="69" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="70" semihidden="false" unhidewhenused="false" name="Dark List"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="71" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Shading"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="72" semihidden="false" unhidewhenused="false" name="Colorful List"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="73" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Grid"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="60" semihidden="false" unhidewhenused="false" name="Light Shading Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="61" semihidden="false" unhidewhenused="false" name="Light List Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="62" semihidden="false" unhidewhenused="false" name="Light Grid Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="63" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 1 Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="64" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 2 Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="65" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 1 Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" unhidewhenused="false" name="Revision"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="34" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="List Paragraph"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="29" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Quote"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="30" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Intense Quote"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="66" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 2 Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="67" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 1 Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="68" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 2 Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="69" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 3 Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="70" semihidden="false" unhidewhenused="false" name="Dark List Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="71" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Shading Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="72" semihidden="false" unhidewhenused="false" name="Colorful List Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="73" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Grid Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="60" semihidden="false" unhidewhenused="false" name="Light Shading Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="61" semihidden="false" unhidewhenused="false" name="Light List Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="62" semihidden="false" unhidewhenused="false" name="Light Grid Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="63" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 1 Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="64" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 2 Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="65" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 1 Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="66" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 2 Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="67" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 1 Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="68" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 2 Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="69" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 3 Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="70" semihidden="false" unhidewhenused="false" name="Dark List Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="71" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Shading Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="72" semihidden="false" unhidewhenused="false" name="Colorful List Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="73" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Grid Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="60" semihidden="false" unhidewhenused="false" name="Light Shading Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="61" semihidden="false" unhidewhenused="false" name="Light List Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="62" semihidden="false" unhidewhenused="false" name="Light Grid Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="63" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 1 Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="64" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 2 Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="65" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 1 Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="66" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 2 Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="67" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 1 Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="68" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 2 Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="69" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 3 Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="70" semihidden="false" unhidewhenused="false" name="Dark List Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="71" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Shading Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="72" semihidden="false" unhidewhenused="false" name="Colorful List Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="73" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Grid Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="60" semihidden="false" unhidewhenused="false" name="Light Shading Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="61" semihidden="false" unhidewhenused="false" name="Light List Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="62" semihidden="false" unhidewhenused="false" name="Light Grid Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="63" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 1 Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="64" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 2 Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="65" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 1 Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="66" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 2 Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="67" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 1 Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="68" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 2 Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="69" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 3 Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="70" semihidden="false" unhidewhenused="false" name="Dark List Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="71" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Shading Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="72" semihidden="false" unhidewhenused="false" name="Colorful List Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="73" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Grid Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="60" semihidden="false" unhidewhenused="false" name="Light Shading Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="61" semihidden="false" unhidewhenused="false" name="Light List Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="62" semihidden="false" unhidewhenused="false" name="Light Grid Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="63" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 1 Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="64" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 2 Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="65" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 1 Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="66" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 2 Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="67" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 1 Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="68" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 2 Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="69" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 3 Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="70" semihidden="false" unhidewhenused="false" name="Dark List Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="71" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Shading Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="72" semihidden="false" unhidewhenused="false" name="Colorful List Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="73" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Grid Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="60" semihidden="false" unhidewhenused="false" name="Light Shading Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="61" semihidden="false" unhidewhenused="false" name="Light List Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="62" semihidden="false" unhidewhenused="false" name="Light Grid Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="63" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 1 Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="64" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 2 Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="65" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 1 Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="66" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 2 Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="67" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 1 Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="68" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 2 Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="69" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 3 Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="70" semihidden="false" unhidewhenused="false" name="Dark List Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="71" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Shading Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="72" semihidden="false" unhidewhenused="false" name="Colorful List Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="73" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Grid Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="19" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Subtle Emphasis"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="21" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Intense Emphasis"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="31" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Subtle Reference"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="32" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Intense Reference"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="33" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Book Title"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="37" name="Bibliography"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" qformat="true" name="TOC Heading"&gt;  &lt;/w:lsdexception&gt; &lt;/w:lsdexception&gt;&lt;!--[endif]--&gt;&lt;!--&gt; &lt;style&gt;  /* Style Definitions */  table.MsoNormalTable  {mso-style-name:"Table Normal";  mso-tstyle-rowband-size:0;  mso-tstyle-colband-size:0;  mso-style-noshow:yes;  mso-style-priority:99;  mso-style-qformat:yes;  mso-style-parent:"";  mso-padding-alt:0cm 5.4pt 0cm 5.4pt;  mso-para-margin:0cm;  mso-para-margin-bottom:.0001pt;  mso-pagination:widow-orphan;  font-size:11.0pt;  font-family:"Calibri","sans-serif";  mso-ascii-font-family:Calibri;  mso-ascii-theme-font:minor-latin;  mso-fareast-font-family:"Times New Roman";  mso-fareast-theme-font:minor-fareast;  mso-hansi-font-family:Calibri;  mso-hansi-theme-font:minor-latin;  mso-bidi-font-family:"Times New Roman";  mso-bidi-theme-font:minor-bidi;} &lt;/style&gt; &lt;!--[endif]--&gt;    &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="line-height: 115%;" lang="TA"&gt;எதிர்க்கட்சி எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான இலக்கணத்தை ஜெயலலிதா கொஞ்சம் மாற்றி இருக்கிறார். ஆளும் கட்சி ஏதாவது திட்டத்தைக் கொண்டு வந்தால் அதை எதிர்த்து கருத்து சொல்வதே எதிர்க்கட்சியின் பணி என்பது நம்முடைய நடைமுறை. அதன்படி கிரைண்டர் அல்லது மிக்ஸி இலவசம் என்று திமுக சொன்னால் அதிமுக இலவசத் திட்டங்களை எதிர்க்க வேண்டும். ஆனால் அதிமுக எதிர்க்கவில்லை. மாறாக அந்த இலவச அறிவிப்பின் நீட்சியாக ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கிரைண்டரும் மிக்ஸியும் ஃபேனும் வழங்கப்படும்’ என்று ஜெயலலிதா சொல்லி இருக்கிறார். அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி என்று திமுக சொன்னால், பிளஸ் 2 படிக்கும் அனைவருக்கும் மடிக் கணினி&lt;span style=""&gt;  &lt;/span&gt;என்று அதிமுக சொல்கிறது. இதில் இருந்து ஆளும் தரப்பில் இருந்து வருகிற எல்லா அறிவிப்புகளையும் கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்க முடியாது என்று தெரிகிறது!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;span style="font-size:100%;"&gt;  &lt;p class="MsoNormal"&gt;&lt;span style="line-height: 115%;" lang="TA"&gt;ஆனால் இன்னொரு விஷயத்தில் கருணாநிதி என்ன சொல்கிறாரோ அதற்கு நேர்மாறாக ஜெயலலிதா பேசி இருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ‘கெடுபிடி’ நடவடிக்கைகளை கருணாநிதியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; அதனால் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று கோபப்படுகிறார். ஆணையத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து அறிக்கை கொடுக்கிறார். வாகனச் சோதனையும் பணம் கைப்பற்றப்படுவதும் சர்ச்சையாகி இருக்கிறது. இதற்கு ஜெயலலிதாவின் எதிர்வினை என்ன? இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் இன்னும் கூடுதலான வேகத்துடன் செயல்பட வேண்டும் என்று சொல்கிறார். அதாவது “தேர்தல் ஆணையம் நியமித்த ‘பறக்கும் படைகள்’ இன்னும் அதிகமான அளவில் வேகமாக வாகனச் சோதனைகளை நடத்த வேண்டும். வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக கொண்டு செல்லப்படும் பணத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்துகிறார். &lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; line-height: normal;"&gt;&lt;span lang="TA"&gt;அத்துடன் தேர்தல் ஆணையத்தை முதலமைச்சர் கருணாநிதி விட்டுவிடவில்லை. தேர்தலை ஏப்ரல் 13-ம் தேதி நடத்திவிட்டு முடிவுகளை மே 13-ம் நாள் அறிவிப்பது ஏன் என்று முதலமைச்சர் கருணாநிதி மீண்டும் கேட்கிறார். “&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;அரசியல்&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;கட்சிகள்&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;சார்பில்&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;வாக்குப்பதிவு&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;செய்யும்&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;நாளை&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;சற்று&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;தள்ளி&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;வைக்க&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;வேண்டுமென்ற&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;கோரிக்கை&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;வைக்கப்பட்டபோது&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;தேர்தல்&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;ஆணையம்&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;அதனை&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;ஏற்க&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;முடியாதென்று&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;தள்ளிவிட்டது” என்றும் அவர் சொல்லி இருக்கிறார். தேர்தல் நாளை தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தேர்தல் ஆணையத்திடம் அதிகாரபூர்வமாக கோரிக்கை வைத்ததா? பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் இருக்கின்றன என்று தேர்தல் நாள் குறித்து முதலமைச்சர் வெளியிட்ட முதல் அறிக்கை கவலைப்பட்டதா? பிறகு வாக்குப்பதிவு நாளை தள்ளி வைக்கவேண்டும் என்று யார் கோரினார்கள் என்று கருணாநிதி சொல்கிறார்?&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; line-height: normal;"&gt;&lt;span style="" lang="EN-US"&gt; &lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; line-height: normal;"&gt;&lt;span lang="TA"&gt;இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சென்னை வந்தபோது ‘அதிமுக மட்டுமே தேர்தல் நாளைத் தள்ளிவைக்க வேண்டும்’ என்று கோரியது என்று சொன்னார். அதுதான் உண்மையாக இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் ஒருவேளை தேர்தலை மே முதல் வாரத்துக்குத் தள்ளி வைத்திருந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது இங்கு என்ன பேசப்படும்? ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டு ஆடுகிறது தேர்தல் ஆணையம் என்று நாம் குற்றம் சாட்ட மாட்டோமா? ‘இதுவரை இல்லாத அளவில் காவல்துறை அதிகாரிகளை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிடுகிறது. இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்னால் தமிழக அரசு கலந்தாலோசிக்கப்படவில்லை. அதிமுக குற்றம்சாட்டியது என்ற ஒரே காரணத்துக்காக- அதில் உண்மை இருக்கிறதா என்று கூடப் பார்க்காமல் – அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள்’ என்று கருணாநிதி வருத்தப்பட்டிருக்கிறார்!&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; line-height: normal;"&gt;&lt;span style="" lang="EN-US"&gt; &lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; line-height: normal;"&gt;&lt;span lang="TA"&gt;கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்தில் நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. சென்னை நகர காவல்துறை ஆணையராக இருந்த ஆர். நட்ராஜ் மாற்றப்பட்டார். எதற்காக? ஏதோ ஒரு பத்திரிகையில் அவருக்குப் பிடித்த பெண்மணிகள் பட்டியலில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரையும் சொல்லி இருந்தார்! அதனால் அவர் நடுநிலையோடு செயல்படமாட்டார் என்று கண்டனங்கள் எழுந்தன. பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் இருந்து அன்றைய காலகட்டத்தில் போராடி மேலே வந்தவர் என்று நான் கருணாநிதியைப் பாராட்டினால் நான் அவருடைய தொண்டனாகி விடுவேனா? இந்த 87 வயதில் உடல்நலம் குறித்த பிரச்னைகள் இருந்தாலும் இவ்வளவு சுறுசுறுப்பாக கருணாநிதி இருக்கிறாரே என்று நான் வியந்து போற்றினால் நான் அவருடைய ஆதரவாளன் ஆகி விடுவேனா? தடாலடியாக அரசியல் செய்தாலும் கூட,&lt;span style=""&gt;     &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; line-height: normal;"&gt;&lt;span lang="TA"&gt;ஆண்களின் மேலாதிக்கம் நிறைந்த அரசியல் உலகத்தில் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இந்த உயரத்தை ஜெயலலிதா எட்டி இருக்கிறார் என்று&lt;span style=""&gt;  &lt;/span&gt;பாராட்டினால் நான் ஜெயலலிதாவின் கட்சிக்காரன் என்று பொருளா? &lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; line-height: normal;"&gt;&lt;span style="" lang="EN-US"&gt; &lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; line-height: normal;"&gt;&lt;span lang="TA"&gt;ஆனால், இங்கு அப்படித்தான் ஆகிவிடுகிறது. ஜனநாயகத்தின் உண்மையான அர்த்தம் தெரியாமல், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அரசியல் கட்சிகள் அத்துமீறும்போது நாம் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை ஆதரிக்க நேர்கிறது. உடனே, மக்கள் பிரதிநிதிகளைவிட்டுவிட்டு, அதிகாரிகளை ஆதரிக்கலாமா என்று கண்டனங்களை எதிர்கொள்ள நேர்கிறது. அரசியல்வாதிகள் பணபலத்தையும் கிரிமினல்களின் பலத்தையும் நம்பாமல் தேர்தல்களை எதிர்கொள்கிறார்களா? வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர்களே இயற்றிய சட்டங்களை மீறுவதை என்ன என்று ஏற்றுக் கொள்வது? தேர்தல் ஆணையத்திடம் ‘எங்கள் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் இருக்கும்’ என்று உறுதி அளித்துவிட்டு அதை கேலிக்கூத்தாக்கும் அரசியல் கட்சிகள் தானே இங்கு அதிகமாக இருக்கின்றன? சாதியைச் சொல்லியோ மதத்தைச் சொல்லியோ, லஞ்சம் கொடுத்தோ வாக்குகளை வாங்கி அதிகாரத்துக்கு வருவோரிடம் என்ன ஜனநாயகப் பண்புகளை எதிர்பார்க்க முடியும்?&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; line-height: normal;"&gt;&lt;span style="" lang="EN-US"&gt; &lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; line-height: normal;"&gt;&lt;span lang="TA"&gt;“தேர்தல்&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;ஆணையம்&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;இந்த&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;முறை&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;இந்த&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;அளவுக்கு&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;அதிகக்&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;கெடுபிடிகள்&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;செய்ய&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;என்ன&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;காரணம்&lt;/span&gt;&lt;span style="" lang="EN-US"&gt;?&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;” என்று முதலமைச்சர் கருணாநிதி கேட்டிருக்கிறார். அதேசமயம் அடுத்த வரியிலேயே “தேர்தல்&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;ஆணையம்&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;கெடுபிடியில்&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;ஈடுபட்டிருப்பதாக&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;நாம்&lt;/span&gt;&lt;span style="" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;குற்றம்சாட்டவில்லை” என்றும் சொல்லிவிடுகிறார். வாகனச் சோதனையே அவர்களுக்கு கெடுபிடியாக தெரிகிறது; அதைத் தவறு என்று பகிரங்கமாக கண்டிக்கவும் முடியவில்லை. தேர்தல் ஆணையம் வாகனச் சோதனை செய்ய வேண்டிய அவசியம் ஏன் வருகிறது? அரசியல்வாதிகள் வாக்காளர்களின் முடிவைத் திசை திருப்புவதற்காக பணமோ பொருளோ கொடுக்கிறார்கள். இந்த உண்மை சமூகத்தின் கடைசி மனிதன் வரை தெரிந்திருக்கிறது. காலையில் பேப்பருடன், அதிகாலையில் பால் கவருடன், பின்னிரவு அல்லது நள்ளிரவு நேரத்தில் நண்பர்கள் மூலமாக என்று பல வழிகளில் பணம் வாக்காளர்களிடம் வந்து சேர்ந்த கதைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். &lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; line-height: normal;"&gt;&lt;span style="" lang="EN-US"&gt; &lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; line-height: normal;"&gt;&lt;span lang="TA"&gt;அப்படிப் பணத்தைக் கொடுப்பதும் குற்றம்; வாங்குவதும் குற்றம் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் தெளிவாக சொல்கிறது. ஆனாலும் இங்கே ஆளும் தரப்பில் இருந்து கொடுக்கிறார்கள்; எதிர்க்கட்சிகள் அதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கின்றன. என்ன பரிதாபம்! இவர்களுடைய கையில் தான் நாம் ஆட்சியையும் நிர்வாகத்தையும் கொடுக்க வேண்டியிருக்கிறது! &lt;span style=""&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; line-height: normal;"&gt;&lt;span style="" lang="EN-US"&gt; &lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; line-height: normal;"&gt;&lt;span style="" lang="EN-US"&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12453184-5959238173252288930?l=stationbench.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://stationbench.blogspot.com/feeds/5959238173252288930/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12453184&amp;postID=5959238173252288930' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/5959238173252288930'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/5959238173252288930'/><link rel='alternate' type='text/html' href='http://stationbench.blogspot.com/2011/04/blog-post.html' title='பொய்யை நீ விற்றாலும் பைசா பைசா!'/><author><name>ஜென்ராம்</name><uri>http://www.blogger.com/profile/01132053348035137568</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12453184.post-2499390194557900635</id><published>2011-03-28T12:21:00.000+05:30</published><updated>2011-03-28T12:23:38.524+05:30</updated><title type='text'>பில்டிங் ஸ்ட்ராங்.. பேஸ்மெண்ட் வீக்</title><content type='html'>&lt;span style="font-size:100%;"&gt;”வைகோ என்ன செய்வார் என்று நினைக்கறீங்க?” என்று அந்த நண்பர் கேட்டார். அண்ணா திமுகவின் வேட்பாளர் பட்டியலை முதலில் ஜெயலலிதா வெளியிட்ட கூத்து நடந்த சில நிமிடங்களில்  இந்தக் கேள்வியை அவர் கேட்டார். அந்த வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் தொகுதிகளைப் பார்த்தால் பிரச்னை மதிமுகவுக்கும் அதிமுகவுக்கும் &lt;span&gt;மட்டும்&lt;/span&gt; இருந்ததைப் போலத் தோன்றவில்லை. சுடுகிற நெருப்பில் கைவைத்ததைப் போல தேசிய முற்போக்கு திராவிட கழகமும் இடதுசாரிகளும் மற்ற சிறிய கட்சிகளும் அதிர்ச்சியில் கத்தினார்கள். எப்படி எதிர்வினையாற்றுவது என்று அப்போது அவர்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;“அவருக்கு எதுக்கு இந்தத் தேர்தல்? தமிழீழத்தில் பேரழிவை ஏற்படுத்திய சிங்களப் பேரினவாதிகளுக்கு உறுதுணையாக நின்ற சக்திகளையும் அவர்களுடைய அடிப்பொடிகளையும் தோற்கடிப்பதே எங்கள் லட்சியம். அதைச் செய்யும் ஆற்றல் கொண்ட அதிமுக அணியில் எங்களுக்கு இடங்கள் ஒதுக்குவதற்கு தயங்குகிறார்கள். அதனால் ம.தி.மு.க  இந்தத் தேர்தலில் பங்கேற்காது என்று அவர் சொல்ல வேண்டும்” என்று பதில் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொன்ன பதிலில் அந்த நண்பருக்கு உடன்பாடு இல்லை. எப்படியாவது அதிமுக கூட்டணியில் மதிமுக இடம் பெற வேண்டும் அல்லது அதிமுகவைத் தவிர அந்தக் கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் இணைந்து மூன்றாவது அணியை அமைக்க வேண்டும். இதுவே அந்த நண்பரின் விருப்பம். மூன்றாவது அணி என்பதை தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ ஏற்றுக் கொள்ளவில்லை. திமுகவை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும் என்றால் அடுத்த பிரதான கட்சியான அதிமுகவை ஆதரிப்பது, அதிமுகவை பதவியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றால் திமுகவை ஆதரிப்பது என்ற நிலையையே அவர்கள் தொடர்ந்து எடுத்து வந்திருக்கிறார்கள். எனவே ‘மூன்றாவது அணி’ நம்பிக்கையை மாநில அரசியலில் அவர்களிடம் வைக்க முடியாது!&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் யார் எஞ்சுகிறார்கள்? தேமுதிக! 2006 சட்டமன்றத் தேர்தலிலும் 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் விஜயகாந்தின் கட்சி தனியாகவே களம் கண்டது. எட்டு சதவீதம், பத்து சதவீதம் என்று வாக்குகள் வாங்கினாலும் விஜயகாந்த் தவிர யாரும் சட்டப் பேரவைக்குள் போக முடியவில்லை. இதை நன்றாக உணர்ந்திருந்த விஜயகாந்த், மூன்றாவது அணியை கைவிட்டு அதிமுக ஜோதியில் கரைந்து விட்டார். மீண்டும் அவரை மூன்றாவது அணிக்குத் தலைமை தாங்கும்படி எந்த நம்பிக்கையில் பேசினார்கள் என்பது புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்ப காலம் தொட்டே விஜயகாந்துக்கு வைகோ மீது அன்போ மதிப்போ கிடையாது. அதைப் போலவே வைகோவும் விஜயகாந்தை ஒரு அரசியல் சக்தியாகக் கருதியதில்லை. ஆனால் அரசியல் நிகழ்வுகள் ஒருவருடைய விருப்பத்துக்குக் காத்திருப்பதில்லை. தேர்தல்அரசியலில் விஜயகாந்த் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து விட்டார். யாரையும் கலந்து ஆலோசிக்காமல் ஜெயலலிதா  வேட்பாளர் பட்டியலை அறிவித்த ஆணவமான நடவடிக்கை வைகோவுக்கும் விஜயகாந்துக்குக் இடையில் இருக்கும் இந்த இடைவெளியைக் கூட குறைத்து விடும் என்று பலர் கருதினார்கள். விஜயகாந்தையும் வைகோவையும் ஒரே அணியில் இணைய வைத்த பெருமை ஜெயலலிதாவையே சேரும் என்று நினைத்தார்கள். கருணாநிதியை ஆறாவது முறையாக முதலமைச்சராக்கும் வல்லமையும் ஜெயலலிதாவுக்கே இருக்கிறது என்று சொல்லிச் சிரித்தார்கள். ஆனால் அந்தப் பெருமையை அவ்வளவு எளிதாக அவருக்குக் கொடுப்பதற்கு தேமுதிக, சி.பி.ஐ, சிபிஐ(எம்) ஆகிய கட்சிகள் தயாராக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் எல்லாம் மீண்டும் ஜெயலலிதாவுடன் பேசி உடன்பாடு கண்டன. மதிமுக மட்டும் தனித்து விடப்பட்டது. அவர்களுடைய உடன்பாடு முடியும் வரை முஷ்டிகளை உயர்த்திப் பேசியவர்கள் எல்லாம், உடன்பாட்டுக்கு பிறகு சுருதி மாறினார்கள். “ ஏதோ ஒண்ணு ரெண்டு குறைஞ்சாலும் பரவாயில்லை; அதிமுக கூட்டணியில் வைகோ நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்துங்கள்” என்று நண்பர்களிடம் பேசத் தொடங்கினார்கள். இந்த நிலையில் மதிமுகவின் உயர்நிலைக் குழு கூடியது. அவர்கள் முன்னால் இருந்த தேர்வுரிமைகள் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;“குடும்ப ஆதிக்கமா அல்லது தமிழ்நாட்டுக்கு ஜனநாயகமா என்பதை இந்தத் தேர்தலில் தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள்” என்று கடந்த சில வருடங்களாக வைகோ பேசி வருகிறார். ராஜபக்சேயும் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களும் சர்வதேச விசாரணைக்கு உட்பட வேண்டும் என்றும் அவர் கோரி வருகிறார். எனவே அந்தப் பிரசாரத்தை அப்படியே முன்னெடுத்துச் செல்வது ஒரு தேர்வுரிமை! இதற்கு என்ன பொருள்? “எங்களுக்கு தொகுதிகள் கொடுக்கவில்லை என்றாலும் நாங்கள் உங்களுக்குத் தொண்டூழியம் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம். சரியான அரசியல் நிலைப்பாட்டை நாங்கள் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம். எங்களுடைய நேர்மை உங்களுக்கு சாதகமாக இருக்கிறது” என்று ஜெயலலிதாவிடம் சொல்வது போல் இருக்கும். “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்” என்று வள்ளுவரை சாட்சிக்கு அழைத்திருக்கலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, “வைகோ கேட்ட 35 தொகுதிகள் அல்லது 21 தொகுதிகளில் மதிமுக போட்டியிடும். மற்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணியை ஆதரிக்கும்” என்ற முடிவை எடுத்திருக்கலாம். இது அதிமுகவின் அலட்சியத்துக்கு எதிர்வினையாக இருக்கும்; கடந்த ஐந்து ஆண்டு மதிமுக அரசியலின் தொடர்ச்சியாகவும் இருந்திருக்கும். 1998 நாடாளுமன்றத் தேர்தலின் போது இரண்டு தொகுதிகள் கேட்ட மார்க்ஸிஸ்ட் கட்சியை திமுகவும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியும் தொங்கலில் விட்டன. அப்போது மதுரையிலும் வடசென்னையிலும் வேட்பாளர்களை நிறுத்திய மார்க்சிஸ்ட் கட்சி, மற்ற 37 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை ஆதரித்தது!&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது இங்கு தீவிரமாக இயங்கிவரும் தமிழின உணர்வாளர்களின் அரசியல் நிலையை ஆதரிக்கலாம். “காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அவர்களை எதிர்த்து பிரசாரம் செய்வோம்” என்று வைகோ சொல்லலாம். ஆனால் இந்த முடிவுகள் எதையும் மதிமுக உயர்நிலைக் குழு எடுக்கவில்லை. “ஜெயலலிதாவின் ஆணவமும் அகங்காரமும் மாறவில்லை. இந்த சூழ்நிலையில் அவருக்கு வாக்களியுங்கள் என்று கேட்க முடியாது. எனவே தேர்தலைப் புறக்கணிக்கிறோம்” என்று அந்தக் குழு தீர்மானித்திருக்கிறது. அவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. நாஞ்சில் சம்பத் சொல்வதைப் போல, “ பெற்ற பிள்ளையை விஷம் வைத்துக் கொல்லும் தாய்” என்ற முடிவுக்கு வருவதற்கு அவர்களுக்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது! &lt;br /&gt;&lt;br /&gt;மதிமுகவுக்கும் அதிமுகவுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் அப்படி என்ன நடந்தது?  2006 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கொடுத்த 35 தொகுதிகளை முதலில் வைகோ கேட்டார்; 2006 தேர்தலில், மதிமுகவும் விடுதலைச் சிறுத்தைகளும் மட்டுமே ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்திருந்தன. இப்போது விடுதலைச் சிறுத்தைகள் இல்லை; தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இந்த ஐந்து வருட காலத்துக்குள் புதிதாக அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கின்றன. அவர்களுக்கும் தொகுதிகளை அதிமுக பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பதை வைகோ புரிந்து கொண்டு தொகுதிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக சொல்லியது.&lt;br /&gt;&lt;br /&gt;தொகுதிகளின் எண்ணிக்கையை வைகோ குறைத்துக் கொண்டார்; 25 என்று தொடங்கி 21 வரை வந்திருக்கிறார். 8 சதவீத வாக்குகளைக் கொண்ட விஜயகாந்தை அணிக்குள் சேர்த்து 41 தொகுதிகளைக் கொடுத்திருக்கிறார்  ஜெயலலிதா! தனித்தனியாக இரண்டு சதவீத வாக்குகளைக் கூட வைத்திருக்காத இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பத்து இடங்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பன்னிரண்டு இடங்களும் கொடுத்திருக்கிறது அதிமுக! அதாவது ஒரு சதவீத வாக்குகளை ஒரு கட்சி வைத்திருந்தது என்றால், ஜெயலலிதா அந்தக் கட்சிக்கு 5 இடங்கள் கொடுத்திருக்கிறார் என்று பொருளாகிறது. அப்படிப் பார்க்கும்போது மதிமுகவுக்கு ஜெயலலிதா 25 முதல் முப்பது இடங்களைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் பன்னிரண்டு தொகுதிகளுக்கு மேல் கொடுப்பதற்குத் தயாராக இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஐந்து வருடங்களாக அதிமுக கூட்டணியில் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடம் தனக்குத்தான் என்று வைகோ நினைத்திருக்கக் கூடும். நாம் எந்தவித கோரிக்கைகளையும் வலியுறுத்தாமல், பதவிகளைக் கேட்காமல், நிபந்தனைகளை விதிக்காமல், ஒரு தலைமையின் முடிவுகளை ஏற்று நடந்து கொண்டிருக்கும் வரை நம்முடைய உணர்வுகளை யாரும் புரிந்து கொள்ள  மாட்டார்கள்! இது ஒரு எழுதப்படாத விதி! “ நான் உனக்காக இந்த வேலை எல்லாம் செய்து கொண்டிருக்கிறேன்” என்று தினமும் போய் சுய தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்க வேண்டும் போலிருக்கிறது. அப்படி இல்லாத நிலையில் கூட்டணித் தலைமை என்ன நினைக்கிறது? “ இவர்களுக்கு பொருளாதார தேவைகள் கிடையாது; தொகுதிகள் கூடுதலாகக் கொடுக்க வேண்டியதில்லை; மனதளவில் இரண்டாவது இடத்தில் இருப்பதைப் போல ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்து அந்த மயக்கத்திலேயே அவர்களை 234 தொகுதிகளிலும் பிரசாரத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று கூட்டணித் தலைமை கணக்கு போடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டது கிடைக்காத நிலையில் ஒரு மனிதன் முகத்திலே எப்போதும் புன்னகையைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாதுதான்! இதன் உச்சமாக அதிமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுகிறது என்றும் இந்தத் தேர்தலில் பங்கேற்பதில்லை என்றும் உறுதியாக தன்னுடைய உணர்வை வெளிப்படுத்தியது. இந்த வார்த்தைகளுக்காகவே காத்திருந்தவர்கள் அதன்பிறகு வைகோ மீதும் மதிமுக மீதும் அன்பைப் பொழிந்தார்கள்.            “தேர்தலில் என்ன செய்வது என்று முடிவெடுப்பது உங்கள் உரிமை; நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் உங்கள் மீதுள்ள அன்புச் சகோதரியின் அன்பும் மதிப்பும் மாறாது” என்று ஜெயலலிதா பாசமழை பொழிந்தார். தங்களுடைய 10 சீட்டுக்கும் 12 சீட்டுக்கும் பாதகம் இல்லை என்று உறுதியான பிறகு, தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவை மதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்கள் இடதுசாரிகள்! திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, திமுக தலைவர் கருணாநிதி உட்பட பலரும் வாஞ்சையுடன் வைகோவை அழைத்தார்கள். வைகோ இனி சீட் கேட்க மாட்டார்! மதிமுக தேர்தலைப் புறக்கணிக்கிறது! வைகோவை ஆதரிக்கும் நடுநிலையாளர்களையும் கட்சித் தொண்டர்களையும் எப்படி தங்கள் பக்கம் இழுப்பது? அவர்களுடைய ஓட்டுக்களை எப்படி குறிவைத்து அடிப்பது? வைகோவின் மீது இரண்டு அணிகளும் காட்டும் அக்கறை அவ்வளவுதான்!&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு அணிகளும் சமமாகப் பிரிந்து நிற்கின்றன; சோதிடத்தைத் தவிர வேறு வகையில் வெற்றி தோல்வியை அந்த அணிகளால் முடிவு செய்ய முடியவில்லை. இருட்டில் பயம் போவதற்காக பாட்டுப் பாடிக் கொண்டே போவது போல் எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி என்று சிலர் சொல்கிறார்கள்; ஆனால் உண்மையில் சிறுதுரும்பும் பல்குத்த உதவும் என்று தவிக்கிறார்கள்.  வைகோவின் ஆதரவாளர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி இந்நிலையில் எழுகிறது. அடுத்து வரும் நாட்களில் இவற்றில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார் வைகோ?&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஐந்து வருட அரசியல் பிரசாரத்தின் தொடர்ச்சியை முன்னெடுப்பாரா அல்லது சமீபத்திய அவமதிப்பை முக்கியமானதாக்குவாரா? இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாகவே கட்சியின் தீர்மானம் இருக்கிறது! &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12453184-2499390194557900635?l=stationbench.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://stationbench.blogspot.com/feeds/2499390194557900635/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12453184&amp;postID=2499390194557900635' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/2499390194557900635'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12453184/posts/default/2499390194557900635'/><link rel='alternate' type='text/html' href='http://stationbench.blogspot.com/2011/03/blog-post_9665.html' title='பில்டிங் ஸ்ட்ராங்.. பேஸ்மெண்ட் வீக்'/><author><name>ஜென்ராம்</name><uri>http://www.blogger.com/profile/01132053348035137568</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12453184.post-6146540733973601762</id><published>2011-03-28T12:19:00.000+05:30</published><updated>2011-03-28T12:21:37.006+05:30</updated><title type='text'>அவர்களும் மனிதர்களே!</title><content type='html'>&lt;span style="font-size:100%;"&gt;அதிர்ச்சியூட்டும் எத்தனையோ செய்திகளுக்கு நடுவில் அந்த செய்தியும் இருந்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் ஆயிரத்துக்கும் அதிகமான வீட்டுப் பணியாளர்கள் ஓரிடத்தில் கூடி நிற்கிறார்கள். அன்னாவுக்கு நீதி வழங்கு என்ற பதாகை அவர்கள் அனைவரையும் அந்த இடத்தில் ஒருங்கிணைக்கிறது.  அன்னாவும் ஒரு வீட்டில் வேலை செய்தவர்; அவர் மர்மமான முறையில் சில நாட்களுக்கு முன்னதாக இறந்திருக்கிறார்.  அவரது மரணத்தின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும் என்பதே அவர்களுடைய கோரிக்கை. அவர்கள் ஊர்வலமாக மாவட்டத் துணை ஆணையர் அலுவலகத்துக்குப் போகிறார்கள். போகும் வழி எல்லாம் ‘அன்னாவுக்கு நீதி வழங்கு’ என்று முழக்கம் இட்டுச் செல்கிறார்கள். அந்த அலுவலகத்தின் வாசல் கதவு அவர்களுக்காக திறக்கப்படவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt; அவருடைய அலுவலகத்தின் வாசலிலேயே அவர்கள் அனைவரும் நிறுத்தப்படுகிறார்கள். அடுத்த நிலையில் இருக்கும் அதிகாரியை ஊர்வலத்தினரோடு சந்தித்துப் பேசும்படிச் சொல்லி விட்டு துணை ஆணையர் வெளியேறிவிட்டார்! அதிகாரம் எதுவும் இல்லாத அடுத்த நிலை அதிகாரியும் ‘உங்கள் கோரிக்கையை நாங்கள் பரிசீலிக்கிறோம்’ என்ற ரீதியில் ஏதோ சொல்லி கூட்டத்தைக் கலைந்து போக வைத்துவிட்டார்!&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இதுதான் அன்றாட நடைமுறை. அமைப்புரீதியாக திரட்டப்படாத கோடிக்கணக்கான தொழிலாளர்களில் யாருக்கு எது நடந்தாலும் மற்றவர்கள் கவலைப்படாமல் இருப்பார்கள் என்பதே பொதுவான ஒரு தோற்றம். உண்மை மற்றவர்களுக்குத் தெரியாமல் பத்திரமாக பாதுகாக்கப்படுவதால், அந்தப் பரந்த மக்களுக்கு எதுவும் தெரியாமலும் புரியாமலும் போய் விடுகிறது. சமூக மாற்றங்களில் நம்பிக்கை கொண்ட அமைப்புகள் தலையிடும்போது மட்டுமே இது போன்ற ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்த முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் பெரிதாக எதையும் சாதிக்க முடிவதில்லை என்று நீங்கள் முணுமுணுக்க்க் கூடும். ஆம்.. ஒரு வகையில் அதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது. நம்முடைய சட்ட மன்றங்களும் நாடாளுமன்றமும் நிர்வாக எந்திரமும் நீதித் துறையும் விளிம்புநிலை மனிதர்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிப்பதில்லை. அரசமைப்புச் சட்டம் அவர்களுக்கும் எல்லா உரிமைகளையும் உறுதி அளித்திருக்கிறது. ஆனால் அவர்களால் அந்த உரிமைகளை அவ்வளவு எளிதாக அனுபவிக்க முடிவதில்லை. அவர்கள் அபூர்வமாக ஒருங்கிணைந்து வந்தாலும் அரசு எந்திரத்தின் கதவுகள் அவர்களுக்காகத் திறப்பதில்லை. பார்வையற்றவர்களாக இருந்தாலும் கல்விக் கண் திறக்கும் ஆசிரியர்களாக இருந்தாலும் காவலர்கள் தாக்குவதற்குத் தயங்குவதே இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கத்தில் இருப்பவர்கள் இப்படிப்பட்டவர்களை சந்திப்பதே இல்லை. ஒரு மாநில அரசாங்கத்தைப் பொறுத்தவரை முதல் அமைச்சரோ, ஆளுநரோ அவர்களை சந்திப்பதற்கு நேரம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். ஏழை எளிய மக்களுடைய குரல் ஆட்சி செய்பவர்களால்  கேட்கப்படுகிறது என்ற போலி மகிழ்ச்சியைக் கொடுப்பதற்குக் கூட அவர்களால் முடிவதில்லை. அவர்களுக்கு நிறைய வேலை இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களையும் உள்நாட்டுப் பெரு நிறுவனங்களையும் சந்தித்துப் பேசுவதற்கு மட்டுமே அவர்களுக்கு நேரம் இருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் வேலை பார்க்கும் வழக்கறிஞர் விக்ரம் சின்கா வீட்டில் வேலை பார்த்த பெண் அன்னா. அவருடைய வீட்டில் அன்னா கடந்த ஐந்து வருடங்களாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். விக்ரமின் வீடு மூன்றாவது தளத்தில் இருக்கிறது. கடந்த மார்ச் 4-ம் தேதி அந்த வீட்டின் பால்கனியில் இருந்து கால் தவறிக் கீழே விழுந்து அன்னா இறந்து போனார் என்கிறார் விக்ரம் சின்கா. பால்கனியில் காயப் போட்டிருந்த துணிகளை எடுத்து மடித்து வைப்பதற்காக வரும்போது அந்த விபத்து நடந்ததாக விக்ரம் சொல்கிறார். ஆனால் அந்த பால்கனியில் 3 அடி உயரத்தில் தடுப்பு இருக்கிறது என்றும் அதைத் தாண்டி ‘கால் தவறி’ கீழே விழுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் மற்றவர்கள் சொல்கிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ ஒன்று கீழே விழுந்ததைப் போல சத்தம் கேட்டதால் விக்ரம் சின்கா வெளியில் வந்து பார்த்தாராம். அன்னா கீழே ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்தாராம். உடனடியாக அவளை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றாராம். அங்கு போய்ச் சேர்வதற்கு முன்னால் அன்னாவின் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவமனையில் சொல்லி விட்டார்களாம். அன்னா விழுந்து கிடந்த இடத்தை வீட்டின் செக்யூரிட்டி விக்ரமின் உத்தரவுப்படி ‘கழுவி’ சுத்தம் செய்து விட்டார். அந்தக் காவலாளியின் வார்த்தைகளின்படி, கீழே விழுந்த அன்னாவிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. எந்த சத்தமும் இல்லை. உயிர் இல்லாத ஓர் உடலை மேலிருந்து போட்டிருக்கிறார்கள் என்ற முடிவுக்கே இந்த வார்த்தைகள் அனைவரையும் இழுத்துச் செல்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா முழுவதும் ஏராளமான செய்திகள் வீட்டுப் பணியாளர்கள் குறித்து வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை பாலியல் தொல்லைகள் மற்றும் வன்முறை தொடர்பானவையாக இருக்கின்றன. இருந்தா
